AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“முதலீடுகளை ஈர்க்க தான் முதல்வர் லண்டன் சென்றுள்ளாரா?”.. நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி!

Nainar Nagendran Questions CM London Visit: முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணம் முதலீடுகளை ஈர்ப்பதற்காகத்தானா அல்லது சொந்த வேலைக்காகவா என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். தொழில் துறை அமைச்சர் உடன் செல்லாதது ஏன் எனக் குறிப்பிட்ட அவர், லண்டன் பயணத்தின் மூலம் எவ்வளவு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன என்பதை முதலமைச்சர் சென்னை திரும்பியவுடன் தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

“முதலீடுகளை ஈர்க்க தான் முதல்வர் லண்டன் சென்றுள்ளாரா?”.. நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி!
நயினார் நாகேந்திரன்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 13 Sep 2026 13:59 PM IST

நெல்லை, செப்டம்பர் 13: தமிழ்நாடு முதலமைச்சர் விஜயின் லண்டன் சுற்றுப்பயணம் தொடர்பாக அரசியல் களத்தில் பல்வேறு விவாதங்களும் கேள்விகளும் எழுந்து வருகின்றன. இத்தகைய சூழலில், திருநெல்வேலி சந்திப்பு உடையார்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முதலமைச்சரின் இந்த லண்டன் பயணம் குறித்தும், பயணத்தின் நோக்கம் குறித்தும் பல்வேறு கேள்விகளை எழுப்பி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

இதையும் படிக்க: “முதலீடுகளை ஈர்ப்பார் என நினைத்தேன், ஆனால்.. வேறுவிதமாக வந்து கொண்டிருக்கும் புகைப்படங்கள்”.. முதல்வரை விமர்சித்த இபிஎஸ்!!

தொழில்துறை அமைச்சர் உடன் செல்லாதது ஏன்?:

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நயினார் நாகேந்திரன், முதலமைச்சர் லண்டனுக்குச் சென்றிருப்பது தனது சொந்த வேலைக்காகவா அல்லது அரசு பணிக்காகவா என்ற கேள்வியை எழுப்பினார். ஒருவேளை முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காகவே இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்றால், அந்தப் பயணத்தில் மாநில தொழில் துறை அமைச்சர் ஏன் உடன் செல்லவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அரசு செலவில் யாரெல்லாம் உடன் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்கள் என்ற விவரங்கள் வெளிப்படையாகத் தெரியவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

முதலீடுகள் குறித்த தெளிவான அறிக்கை தேவை:

வெறும் மூன்று அல்லது நான்கு நாட்கள் மட்டுமே கொண்ட இந்த குறுகிய பயணத்தில் எத்தனை முதலீட்டாளர்களை முதலமைச்சர் சந்திக்க முடியும் என்பது சந்தேகத்திற்குரிய கேள்வியாக உள்ளது என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். இந்த பயணத்தை முடித்துக் கொண்டு தமிழகம் திரும்பியவுடன், யார் யாரையெல்லாம் சந்தித்தார், இதன் மூலம் தமிழகத்திற்கு எவ்வளவு கோடி ரூபாய் முதலீடுகள் வரவுள்ளன என்பதை முதலமைச்சர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். சொந்த வேலைக்காக சென்றிருந்தால் அதைப்பற்றிப் பேச ஒன்றுமில்லை, ஆனால் முதலீடுகளுக்காகச் சென்றிருந்தால் அதற்குரிய விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றார்.

அரசியல் பார்வைகளும் அரசு தரப்பின் பொறுப்பும்:

பொதுவாக ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது, அரசு நிர்வாகச் செலவுகள், ஒப்பந்தங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஆகியவை வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் பிரதான கோரிக்கையாக உள்ளது. அதுமட்டுமின்றி, சர்வதேச அளவில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான பயணங்களில் துறை சார்ந்த செயலாளர்கள் மற்றும் தொழில்துறை அமைச்சரின் பங்கேற்பு இன்றியமையாத ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இத்தகைய சூழலில், முதலமைச்சரின் லண்டன் பயணம் குறித்தான இந்த விமர்சனங்கள், ஆட்சி நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மை குறித்து மக்கள் மத்தியிலும் அரசியல் வட்டாரத்திலும் புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளன.

இதையும் படிக்க: “மேடை போட்டு ஆபாசமாக பேசுவதுதான் கடைசி ஆயுதமா?”.. மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் நிர்மல் குமார் சரமாரி கேள்வி!!

கூட்டணிகளின் தெளிவற்ற நிலைப்பாடு:

தொடர்ந்து பேசிய அவர், அரசியல் கட்சிகள் ஏதேனும் ஒரு சம்பவத்தையோ அல்லது முடிவையோ ஒன்று ஆதரிக்க வேண்டும் அல்லது எதிர்க்க வேண்டும் எனத் தெரிவித்தார். தெளிவான காரணங்களைக் கூறி ஆதரவோ எதிர்ப்போ தெரிவிக்காமல், ஏதோ ஒரு சுய காரணத்திற்காக வெளியிலிருந்து ஆதரவு அளிப்பது போன்ற போக்கு நிலவுவதைச் சுட்டிக்காட்டினார். விஜய்க்கு ஆதரவு கொடுத்தாலும் சரி அல்லது வேறு நபருக்கு ஆதரவு அளித்தாலும் சரி, அரசியல் கட்சிகள் தங்களின் நிலைப்பாட்டை உறுதியாக எடுக்க வேண்டும் என்றும், அவ்வாறு இல்லாத பட்சத்தில் அது சந்தர்ப்பவாத அரசியல் என்றே கருதப்படும் என்றும் விமர்சித்தார்.

Follow Us