AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“அமைச்சர் பதவிக்காகத் துரோகம்”.. வேலுமணி, சி.வி. சண்முகம் மீது இபிஎஸ் கடும் குற்றச்சாட்டு!!

அதிமுக மற்றும் திமுக இடையே கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக உலவி வரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை. "அதிமுக உருவானதே திமுகவிற்கு எதிரான கொள்கையில்தான். திமுகவை எதிர்த்துத் தோன்றிய ஒரு இயக்கம், அந்த கட்சியுடன் எப்படி கூட்டணி வைக்க முடியும்?" என்று கேள்வி எழுப்பினார்.

“அமைச்சர் பதவிக்காகத் துரோகம்”.. வேலுமணி, சி.வி. சண்முகம் மீது இபிஎஸ் கடும் குற்றச்சாட்டு!!
எடப்பாடி பழனிசாமி
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 13 May 2026 13:56 PM IST

தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் போது, அதிமுகவில் பெரும் பிளவு ஏற்பட்டது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட உத்தரவை மீறி, அக்கட்சியின் ஒரு தரப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக வாக்களித்தனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிருப்தி உறுப்பினர்கள் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார். சட்டமன்றத்தில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்று அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவர் என்ற முறையில் தான் உத்தரவிட்டதாகவும், இதற்காகக் கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி மூலம் அனைத்து உறுப்பினர்களுக்கும் மின்னஞ்சல், எஸ்எம்எஸ் மற்றும் பதிவுத் தபால் மூலம் தகவல் அனுப்பப்பட்டதாகவும் இபிஎஸ் தெரிவித்தார். ஆனால், சில முன்னாள் அமைச்சர்கள் திட்டமிட்டு கட்சிக்குத் துரோகம் விளைவிக்கும் வகையில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

இதையும் படிக்க: ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நியமனத்தை திரும்பப்பெற்றது தமிழக அரசு..

அமைச்சர் பதவி ஆசை:

தமிழக வெற்றி கழகத் தலைமையிலான ஆட்சியில் தங்களுக்கு அமைச்சர் பதவி மற்றும் வாரியத் தலைவர் பதவிகள் கிடைக்கும் என்ற ஆசையில், சில முன்னாள் அமைச்சர்கள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களைத் தவறான வழிக்கு அழைத்துச் சென்றுள்ளதாக இபிஎஸ் குற்றம் சாட்டினார். சுமார் 6 பேருக்கு அமைச்சர் பதவி, 10 பேருக்கு வாரியத் தலைவர் பதவி தருவதாக ஆசை வார்த்தைகளைக் கூறி, சுமார் 25-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைத் தங்கள் பக்கம் இழுத்து “குதிரை பேரம்” நடத்தியுள்ளனர் என்று அவர் சாடினார்.

முதலமைச்சர் விஜய் மீதான விமர்சனம்:

“தூய்மையான ஆட்சி நடத்துவேன்” என்று கூறும் முதலமைச்சர் விஜய், ஒரு கட்சியின் உட்கட்சிப் பிரச்சனையைப் பயன்படுத்தி, பிரிந்து சென்றவர்களின் வீட்டிற்குச் செல்வது எந்த விதத்தில் நியாயம்? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். தமிழக வரலாற்றிலேயே இல்லாத ஒரு தவறான முன்னுதாரணத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்துள்ளதாக அவர் வருத்தம் தெரிவித்தார் .

திமுகவுடன் கூட்டணி பேசவில்லை:

அதிமுக மற்றும் திமுக இடையே கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக உலவி வரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை. “அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) உருவானதே திமுகவிற்கு எதிரான கொள்கையில்தான். திமுகவை எதிர்த்துத் தோன்றிய ஒரு இயக்கம், அந்த கட்சியுடன் எப்படி கூட்டணி வைக்க முடியும்?” என்று கேள்வி எழுப்பினார். இந்த வதந்திகள் திட்டமிட்டுப் பரப்பப்படுவதாகக் குற்றம் சாட்டிய அவர், சிலர் தற்போது அமைந்துள்ள தமிழக வெற்றி கழகத்தின் அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்ற ஆசையில் இதுபோன்ற தவறான செய்திகளை நிர்வாகிகளிடமும், மக்களிடமும் பரப்பி வருவதாகத் தெரிவித்தார்.

மேலும் படிக்க: தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு.. எஸ்.பி வேலுமணி தரப்பிலான அதிமுக உறுப்பினர்கள் ஆதரவு..

அதிமுகவின் பலம் மற்றும் எதிர்காலம்:

தேர்தலில் வெற்றி தோல்வி என்பது இயல்பானது என்றும், 47 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றதே ஒரு மிகப்பெரிய சாதனை என்றும் அவர் குறிப்பிட்டார். அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சுமார் 1.34 கோடி வாக்குகளைப் பெற்றுள்ளதாகவும், அதிமுக ஒரு வலிமையான இயக்கம் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது என்றும் அவர் கூறினார். துரோகம் செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் தெரிவித்தார்.

Follow Us