AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2027: பாலியல் வன்கொடுமை வழக்கால் சிக்கல்.. கைது செய்யப்பட்ட ஐபிஎல் வீரர்!

Abhishek Porel Arrest: அபிஷேக் போரலுக்கான கைது செய்ய கடந்த 2026 ஜூலை 14ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதில், கொல்கத்தா உயர் நீதிமன்றம், போரல் மற்றும் மற்றொரு குற்றவாளியைக் கைது செய்யவும், அவர்கள் வசம் இருந்த பென் டிரைவைப் பறிமுதல் செய்யவும் உத்தரவிடப்பட்டது. பென் டிரைவ் பறிமுதல் செய்யப்பட்டு தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது.

IPL 2027: பாலியல் வன்கொடுமை வழக்கால் சிக்கல்.. கைது செய்யப்பட்ட ஐபிஎல் வீரர்!
அபிஷேக் போரெல்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 11 Aug 2026 22:39 PM IST

கடந்த சில ஐபிஎல் (IPL) சீசன்களாக டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடிய அபிஷேக் போரெல், மேற்கு வங்க காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடும் அபிஷேக் போரெல் மீது பாலியல் வன்கொடுமை வழக்கின் கீழ் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டை போரெல் மீது ஒரு மருத்துவ மாணவி சுமத்தியுள்ளார். 23 வயதான அபிஷேக் போரெல் (Abishek Porel), ஒரு மருத்துவ மாணவியை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து, பின்னர் அவருடன் நெருக்கமாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், அந்தப் பெண்ணை வீடியோ எடுத்ததாகவும் போரெல் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

ALSO READ: ஹர்திக் பாண்ட்யாவை கொடுக்க மறுக்கும் மும்பை? விடாது ஆர்வம் காட்டும் கொல்கத்தா!

பாலியல் வழக்கில் அபிஷேக் போரெல் கைது:

அபிஷேக் போரலுக்கான கைது செய்ய கடந்த 2026 ஜூலை 14ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதில், கொல்கத்தா உயர் நீதிமன்றம், போரல் மற்றும் மற்றொரு குற்றவாளியைக் கைது செய்யவும், அவர்கள் வசம் இருந்த பென் டிரைவைப் பறிமுதல் செய்யவும் உத்தரவிடப்பட்டது. பென் டிரைவ் பறிமுதல் செய்யப்பட்டு தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது. குறிப்பிடத்தக்க வகையில், காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகார்தாரர் குற்றம் சாட்டியிருந்தார். அதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தை அணுகி, போரல் தனது தனிப்பட்ட புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டியதாகக் கூறினார்.

மிரட்டல் மற்றும் பணயக்கைதிகளை பிடித்தல் தொடர்பான குற்றச்சாட்டுகள்

அபிஷேக் போரெல் அந்தப் பெண்ணை பணயக்கைதியாக வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். தகவல்களின்படி, பாதிக்கப்பட்ட பெண் 2023-ஆம் ஆண்டில் போரெலுடன் நெருக்கமாக இருந்ததாக தெரிகிறது. இரு குடும்பங்களுக்கும் இடையே திருமணம் குறித்து பேச்சுவார்த்தை நடந்ததாகவும், அதன்பிறகு 2026 ஏப்ரல் 2 அன்று டெல்லியில் அந்த பெண்ணை தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அந்தப் பெண், தான் பணயக்கைதியாக வைக்கப்பட்டிருந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார், இருப்பினும் இந்தக் குற்றச்சாட்டுகள் இன்னும் நிரூபிக்கப்படவில்லை.

ALSO READ: இந்திய அணியின் புதிய டி20 தொடர்.. தேதியை அறிவித்த ஆப்கானிஸ்தான்.. எப்போது தெரியுமா?

அபிஷேக் போரலின் கிரிக்கெட் வாழ்க்கை என்ன ஆகும்..?

கைது செய்யப்பட்டதை அடுத்து அபிஷேக் போரெல் தற்போது பெரும் சிக்கலில் உள்ளார். அவரது கிரிக்கெட் வாழ்க்கையே கேள்விக்குறியாகலாம். இடது கை விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான அபிஷேக் போரெல், 35 ஐபிஎல் போட்டிகளில் 4 அரை சதங்கள் உட்பட, 25.6 சராசரியில் 769 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், போரெல் பெங்கால் அணிக்காக 32 முதல் தரப் போட்டிகள், 23 லிஸ்ட் ஏ போட்டிகள் மற்றும் 61 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

 

Follow Us