AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வெல்டிங் மிஷினை வைத்து ஏடிஎமை உடைத்து நூதன கொள்ளை – பரபரப்பு தகவல்

Kancheepuram ATM Robbery : காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் அருகே செயல்பட்டு வந்த ஐசிஐசிஐ ஏடிஎம் இயந்திரத்தை வெல்டிங் மிஷினை வைத்து பணப்பெட்டியை கும்பல் கொள்ளையடித்து சென்றுள்ளது. முதற்கட்ட விசாரணையில் சிசிடிவி கேமராக்களுக்கு ஸ்பிரே பெயிண்ட் அடித்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது.

வெல்டிங் மிஷினை வைத்து ஏடிஎமை உடைத்து நூதன கொள்ளை – பரபரப்பு தகவல்
ஏடிஎம் மிஷின் கொள்ளை
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 25 Aug 2026 10:11 AM IST
காஞ்சிபுரம், ஆகஸ்ட் 25 : காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் அருகே செயல்பட்டு வந்த ஐசிஐசிஐ ஏடிஎம் இயந்திரத்தை வெல்டிங் மிஷினை வைத்து பணப்பெட்டியை கும்பல் கொள்ளையடித்து சென்றுள்ளது. முதற்கட்ட விசாரணையில் சிசிடிவி கேமராக்களுக்கு ஸ்பிரே பெயிண்ட் அடித்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெல்டிங் மிஷினை வைத்து ஏடிஎமை உடைத்து நூதன கொள்ளை

எச்சரிக்கை அலாரம் ஒலிக்கும் இணைப்பை துண்டித்து விட்டு பணத்தை கொள்ளையடித்து தப்பியோடியிருக்கின்ரனர். இந்த நிலையில் குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுகியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க : சென்னையில் இன்றுமுதல் குறிப்பிட்ட மின்சார ரயில்கள் ரத்து – வெளியான அறிவிப்பு

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையில் ஈடுபடும் சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்திருக்கின்றன. இருப்பினும் சிசிடிவி கேமரா, எச்சரிக்கை அலாரம் என பாதுகாப்பு விஷயங்கள் இருந்தும் அவற்றை செயலிழக்க செய்து இந்த கொள்ளை சம்பவம் நடந்திருக்கிறது. இதனையடுத்து ஏடிஎம் இயந்திரங்கள் பற்றி துல்லியமாக தெரிந்த நபர்கள் தான் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டிருக்க வேண்டும் என கூறப்படுகிறது.

இதே போல கடந்த 2026, ஜூலை மாதம் ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே ஐசிஐசிஐ வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை வெல்டிங் மிஷின் கொண்டு உடைத்து ரூ.7 லட்சத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். ஏடிஎம் மிஷின் பழுதான காரணத்தால் அது மூடி வைக்கப்பட்டிருந்திருக்கிறது. இந்த நிலைில் வங்கியின் மேனேஜர் ஆய்வு மேற்கொண்ட போது தான் ஏடிஎம் கொள்ளையடிக்கப்பட்டதே தெரிய வந்திருக்கிறது.

இதையும் படிக்க : “நீர் திறந்து விட முடியாது!”.. ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்தும் பிடிவாதம் பிடிக்கும் கர்நாடகா.. காவிரி விவகாரத்தில் பின்னடைவு!!

திருவான்மியூர், திருவள்ளூவர் நகரில் உள்ள பாரத் ஸ்டேட் வங்கிக் கிளை ஏடிஎம்மில் கடந்த 2025, மே மாதம் ஏடிஎம்மில் நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் வெளியாகி தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதன் படி அதிகாலையில் ஏடிஎம் இயந்திரத்துக்கு சென்ற அவர்கள் பணம் வரக்கூடிய இடத்தில் கருப்பு நிற அட்டையை வைத்து பூட்டிவிட்டு சென்றிருக்கிறார்கள்.

இந்த நிலையில் வாடிக்கையாளர் பணம் எடுக்க முயன்றும் பணம் வெளியே வராமல் உள்ளேயே நின்றுவிடும். பிறகு போலி சாவி மூலம் லாக்கரை திறந்து அங்கே இருக்கும் பணத்தை இவர்கள் எடுத்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

Follow Us