AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“கூட்டணி இல்லையென்றால் ஜெயித்திருக்க முடியுமா?”.. பேரவையில் திமுக-அதிமுக-காங்கிரஸ் இடையே காரசார விவாதம்!!

TN Assembly Debate: தமிழக சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை விவாதத்தின் போது கூட்டணி மற்றும் தேர்தல் வெற்றி குறித்து திமுக, அதிமுக, காங்கிரஸ் உறுப்பினர்களிடையே கடும் விவாதம் எழுந்தது. தனித்து நின்று வெற்றி பெற முடியுமா என அமைச்சர் அன்பழகன் கேள்வி எழுப்பிய நிலையில், கூட்டணி தயவால்தான் அதிமுக ஆட்சி அமைத்தது என கே.என். நேரு மற்றும் கோவி. செழியன் பதிலடி கொடுத்தனர்.

“கூட்டணி இல்லையென்றால் ஜெயித்திருக்க முடியுமா?”.. பேரவையில் திமுக-அதிமுக-காங்கிரஸ் இடையே காரசார விவாதம்!!
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கே.என்.நேரு
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 25 Aug 2026 08:55 AM IST

சென்னை, ஆகஸ்ட் 25: தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது, தேர்தலில் வெற்றி பெற்றது யார் தயவால் என்பது தொடர்பாக திமுக, அதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களிடையே இடையே கடும் காரசார விவாதம் நடைபெற்றது. உயர்கல்வி மற்றும் பள்ளிக்கல்வி உள்ளிட்ட 6 மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் கோவி. செழியன் பேசி முடித்ததும், உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் பேசிய கருத்து பேரவையில் காரசார விவாதத்திற்கு வித்திட்டது.

இதையும் படிக்க: பரந்தூர் விமான நிலையத்திட்டத்தை கைவிடுவதால் புதிய தொழில் நிறுவனங்கள் சென்னைக்கு வர தயங்கும் – உதயநிதி ஸ்டாலின்..

நீங்கள் அமைச்சராகி இருக்க முடியாது:

விவாதத்தின் போது பேசிய அமைச்சர் விஸ்வநாதன், திமுக உறுப்பினர்களைப் பார்த்து, “நீங்கள் ஏதோ இந்த நாட்டிற்குப் போராடியது போலவும், சமூகப் புரட்சிக்கு வித்திட்டது போலவும் பேசுகிறீர்கள்” என்று விமர்சித்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய திமுக உறுப்பினர் கோவி. செழியன், “சட்டமன்றத் தேர்தலில் மேலூர் என்ற தொகுதியில் உங்களை (அமைச்சர் விஸ்வநாதன்) நிற்க வைத்து, எங்களுடைய தலைவர் மற்றும் எதிர்கட்சித் தலைவரின் பிரச்சாரம், கருப்பு சிவப்பு வேட்டி கட்டிய உண்மையான தொண்டர்கள் போட்டி இடவில்லை என்றால் நீங்கள் அமைச்சராகி இருக்க முடியாது” எனக் காட்டமாகக் குறிப்பிட்டார்.

தனியாக நின்று 50 தொகுதிகளை வெல்லட்டும்:

இதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் இல்லையென்றால் 10 இடங்களில் கூட திமுகவால் வெற்றி பெற்றிருக்க முடியாது. கூட்டணி கட்சிகளிடம் இருந்து 15 சதவீதம் வாக்குகள் வரவில்லை என்றால் சென்னையில் அந்த 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்க முடியாது. எங்களைப் போன்று திமுக தனியாக நின்று 50 தொகுதிகளைத் தொட்டுப் பார்க்கட்டும், அப்போதுதான் கூட்டணி கட்சிகளின் அருமை திமுகவுக்குத் தெரியும்” என்று சவால் விடுத்தார்.

அவர்களை தவிர்த்து ஆட்சி அமைத்து பாருங்கள்:

தொடர்ந்து பேசிய கோவி. செழியன், “ராஜீவ் காந்தி படுகொலையான சமயத்தில் நடைபெற்ற தேர்தலில் மட்டுமே அதிமுக வென்றது, அதையும் கருணாநிதி சுட்டிக்காட்டியுள்ளார். பூஜ்ஜியத்தில் இருந்து இந்த தமிழ்நாட்டை ராஜ்யமாக ஆண்ட இயக்கம் திமுக. தேர்தலில் வெற்றி, தோல்வி வருவது இயல்பு” என்றார். தொடர்ந்து, பேசிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கே.என்.நேரு, “எங்களுடைய கூட்டணியில் இருந்து வெற்றி பெற்றவர்களின் ஆதரவால்தான் நீங்கள் ஆட்சி அமைத்துள்ளீர்கள். உங்களுக்கு அவ்வளவு ரோஷம் இருந்தால் அவர்களை வெளியே அனுப்பிவிட்டு ஆட்சியை அமைத்துப் பாருங்கள். 1980-ல் காங்கிரஸ் தோற்ற போது திமுக கை கொடுக்கவில்லை என்றால் அதிமுக வந்திருக்காது” என்றார்.

இதையும் படிக்க: அடேங்கப்பா இது லிஸ்ட்லயே இல்லையே… 9-ஆம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு இலவச டேப்லெட்.. முதல்வர் அதிரடி அறிவிப்பு!

ஆதிக்க மனப்பான்மை தவறானது:

இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ஒவ்வொரு கட்சிக்கும் தனித்துவமான அடையாளம் இருப்பதாகவும், கூட்டணி என்பது தேர்தலுடன் முடிந்துவிடும் ஒன்று என்பதால் தாங்கள்தான் கூட்டணி கட்சிகளை வெற்றி பெற வைத்தோம் என்ற ஆதிக்க மனப்பான்மை தவறானது என்றும் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து விவாதத்தில் பங்கேற்ற சட்டப்பேரவை முன்னவர் செங்கோட்டையன், 2006-ல் திமுக 97 உறுப்பினர்களைக் கொண்டு காங்கிரஸ் ஆதரவில் ஆட்சி அமைத்ததை நினைவு கூர்ந்தார். அதற்குப் பதிலளித்த கே.என்.நேரு, 2006-ல் காங்கிரஸ் மட்டுமல்லாது பாமகவின் 22 உறுப்பினர்களின் ஆதரவும் அதிமுகவிற்கு எதிராகத் தங்களுக்கு இருந்ததாகக் கூறினார்.

Follow Us