AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் சென்ற கார் அதிகாலையில் விபத்து.. சென்னையில் பரபரப்பு!!

AR Rahman Son Car Accident: சென்னை கிண்டி ஒலிம்பியா டெக் பார்க் அருகே இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன் சென்ற சொகுசு கார் மற்றொரு கார் மீது மோதி அதிகாலையில் விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பெரிய அளவிலான காயங்கள் ஏதுமின்றி லேசான காயங்களுடன் தப்பினர். இது குறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் சென்ற கார் அதிகாலையில் விபத்து.. சென்னையில் பரபரப்பு!!
விபத்துக்குள்ளான கார்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 10 Aug 2026 08:21 AM IST

சென்னை, ஆகஸ்ட் 10: உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் குடும்பத்தினரும், அவரது மகன் ஏ.ஆர்.அமீனும் திரைத் துறையிலும் இசைத் துறையிலும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டு இயங்கி வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் இன்று அதிகாலை ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன் பயணித்த சொகுசு கார் எதிர்பாராதவிதமாக மற்றொரு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவு கடந்து அதிகாலை வேளையில் கிண்டி பகுதியில் நடைபெற்ற இந்த விபத்து தொடர்பாகக் காவல் துறையினர் உடனடியாக விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க : ‘நாட்டாமை குடும்பம் என பச்சைக்குத்தி கொள்ளுங்கள், என்னை எளிதில் சந்திக்கலாம் ‘ – ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்திய சரத்குமார்

கிண்டி அருகே நடைபெற்ற விபத்து:

இன்று அதிகாலை சுமார் 3:30 மணி அளவில் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன், தனது நண்பருடன் சேர்ந்து சொகுசு காரில் கிண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்தார். கார் கிண்டி ஒலிம்பியா டெக் பார்க் சிக்னல் அருகே வந்து கொண்டிருந்த போது, பக்கவாட்டுச் சாலையில் இருந்து வந்த மற்றொரு கார் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் இரண்டு கார்களும் பக்கவாட்டில் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தின் தாக்கத்தால் இரண்டு வாகனங்களுக்கும் சிறு சேதங்கள் மட்டுமே ஏற்பட்டதுடன், பெரிய அளவிலான அசம்பாவிதங்கள் எதுவும் தவிர்க்கப்பட்டன.

மருத்துவ சிகிச்சை நிலவரம்:

இந்த விபத்தில் காரில் பயணித்த யாருக்கும் பெரிய அளவில் காயங்கள் ஏற்படவில்லை. ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன் மற்றும் அவரது நண்பருக்கு லேசான கீறல்கள் மற்றும் காயங்கள் மட்டுமே ஏற்பட்டன. உடனடியாக அவர்கள் அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்குச் சென்று முதலுதவி சிகிச்சை பெற்றுக்கொண்டு பாதுகாப்பாக வீடு திரும்பினர். மேலும், எதிர் காரில் வந்த ராபிடோ ஓட்டுநர்/பயணிக்கும் லேசான காயம் ஏற்பட்டதால், அவர் அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்ற பின்னர் வீடு திரும்பியதாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : “விமான நிலைய ஓடு பாதை முதல் 4 வழிச் சாலை வரை!”.. புதுச்சேரியை மாற்றப்போகும் அமித் ஷாவின் பிரம்மாண்ட அறிவிப்பு!!

காவல் துறை வழக்குப்பதிவு:

சம்பவ இடத்திற்கு வந்த அடையாறு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார், விபத்துக்குள்ளான இரண்டு கார்களையும் பறிமுதல் செய்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதிவேகமாக காரை இயக்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதா அல்லது சிக்னல் மற்றும் பக்கவாட்டுச் சாலையில் வந்த வாகனத்தின் தவறு காரணமா என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிர்ஷ்டவசமாக ஏ.ஆர்.அமீன் காயங்களின்றி நலமுடன் வீடு திரும்பிய செய்தி அவரது ரசிகர்களுக்கும் குடும்பத்தினருக்கும் ஆறுதலை அளித்துள்ளது.

Follow Us