Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தடியடி நடத்தப்பட்டதா? மின்சாரம் ஏன் நிறுத்தப்பட்டது – அரசு தரப்பில் வெளியான விளக்கம்

Karur Stampede : கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர் பலர் படுகாயமைடந்தனர். இந்த நிலையில் கரூரில் என்ன நடந்தது என்பது குறித்து தமிழக அரசு சார்பில் ஊடகத்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் விளக்கம் அளித்துள்ளார்.

தடியடி நடத்தப்பட்டதா? மின்சாரம் ஏன் நிறுத்தப்பட்டது – அரசு தரப்பில் வெளியான விளக்கம்
அமுதா ஐஏஎஸ்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 30 Sep 2025 18:39 PM IST

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri Kazhagam)  விஜய்யின் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர் பலர் படுகாயமைடந்தனர். இந்த நிலையில் கரூரில் என்ன நடந்தது என்பது குறித்து தமிழக அரசு சார்பில் ஊடகத்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “தவெகவினர் முதலில் கேட்ட இடத்தில் அமராவதி ஆற்றுப் பாலமும், பெட்ரோல் பங்க்கும் உள்ளது, இரண்டாவதாக உழவர் சந்தை பகுதி மிகக் குறுகிய இடம் என்பதால் 5,000 பேர் மட்டுமே திரள முடியும். வேலுசாமிபுரம் ஒதுக்கீடு செய்வதாகக் கூறியபோது அதனை தவெகவினர் ஏற்றுக் கொண்டனர் என்றார்.

தடியடி நடத்தப்பட்டதா?

மேலும் பேசிய அவர் விஜய் வரும்போதே ஏற்கனவே இங்கே கூட்டம் அதிகமாக இருக்கிறது. அவருடன் சேர்ந்து மேலும் கூட்டம் வருகிறது. அவர் வண்டி முன்னே செல்ல வழியில்லாமல் நிற்கிறது. உடனடியாக டிஜிபி உள்ளிட்ட காவல்துறையினர் மக்களை விலக்கிவிடுகிறார்கள். ஒரு கட்டத்தில் கூட்டம் அதிகரிக்கவே, டிஎஸ்பி விஜய் தரப்பினரிடம் முன்னே செல்ல வேண்டாம் என கேட்டுக்கொண்டார்கள். ஆனால் தவெக நிர்வாகிகள் ஏற்றுக்கொள்ளாமல், இன்னும் முன்னே செல்வோம் என்றார்கள்.  இந்த நிலையில் கரூரில் என்ன நடந்தது என்பது தொடர்பாக வீடியோவையும் வெளியிட்டனர்.

இதையும் படிக்க : கரூர் சம்பவம்.. முன்ஜாமீன் கோரி புஸ்ஸி ஆனந்த் நீதிமன்றத்தில் மனு!

மின்சாரம் நிறுத்தப்பட்டது ஏன்?

மேலும் பேசிய அமுதா ஐஏஎஸ், “ஜெனரேட்டரை சுற்றியுள்ள தகடுகளை தவெகவினர் பிரித்துச் சென்றதால் பாதுகாப்பு கருதி மின்சாரம் நிறுத்தப்பட்டது, தவெக துண்டு அணிந்தவர்தான் மின்சார ஜெனரேட்டரை ஆஃப் செய்தனர். இதனால் பெரும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது. 10,000 பேர் வருவார்கள் என த.வெ.க. தரப்பில் கடிதம் எழுதியிருந்தார்கள். முந்தைய கூட்டங்களை வைத்து 20,000 பேர் வருவார்கள் எனக் கணித்து அதற்கேற்ப காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பொதுவாக 50 பேருக்கு ஒரு காவலர் என்பதே நடைமுறை, ஆனால் கரூரில் 20 பேருக்கு ஒரு காவலர் போடப்பட்டது.

இதையும் படிக்க : கரூர் சம்பவம்.. மற்றொரு தவெக நிர்வாகி கைது.. புஸ்ஸி ஆனந்தை நெருங்கும் தனிப்படை?

நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை

விஜய் பேசும்போது நாங்கள் எங்களுக்கு வழங்கிய இடத்தில் தான் பேசினோம். அரசியல் காரணங்களை தள்ளி வைத்து விட்டு மக்களின் பாதுகாப்பை மனதில் வைத்து அதற்கான இடங்களை தேர்வு செய்து அனுமதி கேட்டோம். ஆனா நடக்க கூடாதது நடந்து விட்டது. கிட்டத்தட்ட 5 மாவட்டத்துக்கு பிரச்சாரத்துக்கு போனோம். இது மாதிரி எதுவும் நடக்கவில்லை. ஆனால் கரூரில் மட்டும் இதுபோன்று நடக்கிறது. எப்படி நடந்தது.மக்கள் எல்லோரையும் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். கரூர் மக்கள் உண்மைகளை சொல்லும்போது அந்த மக்களே நேரடியாக வந்து உண்மைகளை சொல்வது போல இருந்தது. சீக்கிரமே எல்லா உண்மைகளும் வெளியே வரும்.  நாங்கள் எந்த தவறும் செய்ய வில்லை என்றார்.