AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

எடப்பாடி பழனிசாமியுடன் இருந்தால் நல்லவன், இல்லையென்றால் துரோகியா – சி.வி சண்முகம் ஆவேசம்..

முன்பே கட்சியினரை அரவணைத்திருந்தால் தேர்தலில் வெற்றி பெற்று இருக்கலாம்; எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்திருக்கலாம். அதிமுகவில் இணைய வந்த ஓ. பன்னீர்செல்வத்தைக் கூட அடிப்படை உறுப்பினராக ஏற்கவில்லை. ஒருபுறம் பேசலாம் என கூறிவிட்டு, மறுபுறம் பதவியில் இருந்து நீக்குகிறார். பதவி பறிக்கப்படும் என நிர்வாகிகள் மிரட்டப்பட்டுள்ளனர். இதுவரை 31 மாவட்டச் செயலாளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

எடப்பாடி பழனிசாமியுடன் இருந்தால் நல்லவன், இல்லையென்றால் துரோகியா – சி.வி சண்முகம் ஆவேசம்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 19 May 2026 15:33 PM IST

மே 19, 2026: அதிமுக சட்டப்பேரவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்ததற்கு காரணம் எடப்பாடி பழனிசாமிதான் என அதிமுக எம்.எல்.ஏ. சி.வி. சண்முகம் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது பேசிய சி.வி. சண்முகம், “எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது. அதிமுகவின் வாக்கு வங்கியும் தொடர்ந்து சரிவைக் கண்டு வருகிறது. தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆய்வு செய்ய வேண்டும். நீக்கப்பட்டவர்களை மீண்டும் இணைத்து அதிமுகவை வலிமைப்படுத்த வேண்டும். ஆனால், அதிமுக இணைப்பை எடப்பாடி பழனிசாமி ஏற்க மறுத்தார்.

கூட்டணி பேச்சுவார்த்தைக்கு வந்தவர்களை உதாசீனப்படுத்தினார்:

வலிமையான கூட்டணி அமைக்கப்படாததால்தான் தோல்வி அடைந்தோம். சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்க நாங்கள் வலியுறுத்தினோம். ஆனால், அதை அவர் செவிசாய்த்து கூட கேட்கவில்லை. தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு வந்தபோது அவர்களை உதாசீனப்படுத்தினார். அதேபோல், டாக்டர் கிருஷ்ணசாமியையும் கூட்டணியில் சேர்க்க மறுத்துவிட்டார். கூட்டணி அமையக்கூடாது என்பதிலேயே குறியாக இருந்தார். தேமுதிகவை ‘அரை சதவீதக் கட்சி’ என ஏளனமாக பேசினார்.

மேலும் படிக்க: செந்தில் பாலாஜிக்கு சிக்கல்.. ஆதாரங்களுடன் விசாரணைக்கு அனுமதி கோரிய ED.. தவெக அரசின் முடிவு என்ன?

முன்பே கட்சியினரை அரவணைத்திருந்தால் தேர்தலில் வெற்றி பெற்று இருக்கலாம்; எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்திருக்கலாம். அதிமுகவில் இணைய வந்த ஓ. பன்னீர்செல்வத்தைக் கூட அடிப்படை உறுப்பினராக ஏற்கவில்லை. ஒருபுறம் பேசலாம் என கூறிவிட்டு, மறுபுறம் பதவியில் இருந்து நீக்குகிறார். பதவி பறிக்கப்படும் என நிர்வாகிகள் மிரட்டப்பட்டுள்ளனர். இதுவரை 31 மாவட்டச் செயலாளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

பொதுகுழு முடிவை தலைவணங்கி ஏற்போம்:

பொதுக்குழுவை கூட்டுங்கள்; அதில் விவாதிப்போம். அதில் என்ன முடிவு எடுத்தாலும் தலைவணங்கி ஏற்கத் தயாராக இருக்கிறோம். தனது பதவிக்கு ஆபத்து வரும் என்பதால் அனைவரையும் ஒன்றிணைக்க எடப்பாடி பழனிசாமி தற்போது முயற்சிக்கிறார். தனிப்பட்ட விமர்சனங்களை முன்வைப்பது அவரது தலைமைப் பதவிக்கு அழகல்ல. தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்.

உடன் இருந்தால் நல்லவன் இல்லை என்றால் துரோகியா?

எடப்பாடி பழனிசாமியுடன் இருந்தால் நல்லவன், இல்லாவிட்டால் துரோகியா? திமுகவுடன் இணைந்து இ.பி.எஸ். ஆட்சி அமைக்க விரும்பியபோதுதான் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதிமுக நிர்வாகிகள் இ.பி.எஸ். மிரட்டலுக்கு அச்சப்பட வேண்டியதில்லை. ஐந்தில் ஒரு பங்கு பொதுக்குழு உறுப்பினர்களின் கையெழுத்து இருந்தால், 30 நாட்களுக்குள் சிறப்பு பொதுக்குழுவை கூட்ட வேண்டும்.

தோல்வி அடைந்தாலும் அதை குறித்து விவாதிக்கவில்லை. அதிமுக தொடர்ந்து தோல்வியையே சந்தித்து வருகிறது. தோல்வியை ஒப்புக்கொள்ளும் மனப்பக்குவம் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை” எனக் குறிப்பிட்டார்.

Follow Us