AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

5 கட்சிகளின் ஆதரவில் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கும் பொய்க்கால் குதிரையின் நடனம் சில காலம்தான் – எடப்பாடி பழனிசாமி..

நமக்கு வாக்களித்த மக்களையும், அங்கீகாரத்தையும், அடையாளத்தையும் கொடுத்த கழகத்தையும் நம்புங்கள். எல்லா கட்சிகளிலும் பிரச்சினைகள் உள்ளன. அதுபோல, நமது கட்சியிலும் பிரச்சினைகள் இருந்தால், அதை நாமே பேசி தீர்த்துக்கொள்வோம். ஐந்து கட்சிகளின் ஆதரவில் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கும் இந்த பொய்க்கால் குதிரையின் நடனம் சில காலம்தான்.

5 கட்சிகளின் ஆதரவில் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கும் பொய்க்கால் குதிரையின் நடனம் சில காலம்தான் – எடப்பாடி பழனிசாமி..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 18 May 2026 20:13 PM IST

மே 18, 2026: அதிமுகவில் உட்கட்சி விவகாரம் தெருவுக்கு வந்துள்ள சூழலில், தினந்தோறும் புதுப்புது பிரச்சினைகள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “ஐந்து கட்சிகளின் ஆதரவில் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் இந்த பொய்க்கால் குதிரையின் நடனம் சில காலம்தான். அம்மாவின் ஆட்சி விரைவில் அமையும்” என தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

கூட்டணி கட்கிகளிடம் காலில் விழுந்த தவெக அரசு:

“தூய சக்தி என்று தன்னை சொல்லிக்கொள்ளும் பொய்க்கால் குதிரை அரசு, தன்னை காப்பாற்றிக்கொள்வதற்காக திமுக கூட்டணிக் கட்சிகளின் கால்களில் நேரடியாக விழுந்துள்ளது. அதே நேரத்தில், தூய சக்தி துஷ்ட சக்தியாக மாறி, குதிரைப் பேர அரசியல் வியாபாரம் நடத்தி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதுகில் குத்தியுள்ளது.

பொதுவாக எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் குறித்து பல்வேறு கற்பனைச் செய்திகள் பரவும். அதுபோல, திமுகவுக்கு எதிராக தொடங்கப்பட்ட இயக்கம், திமுக ஆதரவுடன் ஆட்சி அமைக்க திட்டமிட்டதாக பொய்யான செய்திகள் பரப்பப்பட்டன. இந்தச் செய்தி உண்மையா என்று நேரில் கேட்டவர்களுக்கு தெளிவான விளக்கம் அளித்தோம். அப்படி நடப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று மக்களும், நமது கட்சியின் நிர்வாகிகளும் உறுதியாக நம்பினர்.

மேலும் படிக்க: முற்றிய உட்கட்சி விவகாரம்.. நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு..

ஆனால், தமிழக வெற்றிக் கழகம், நமது கட்சிக்குள் குதிரைப் பேர வியாபாரம் நடத்தியும், பதவி ஆசை காட்டியும், சில நிர்வாகிகளை நம்மிடமிருந்து பிரிக்க முயன்றது என்பது வேதனையான உண்மை. தமிழக வெற்றிக் கழகம் இப்போதைக்கு  பொய்க்கால் குதிரை அரசை அமைத்துவிட்டது.

பொய்க்கால் குதிரையின் நடனம் சில காலம்தான்:

நமக்கு வாக்களித்த மக்களையும், அங்கீகாரத்தையும், அடையாளத்தையும் கொடுத்த கழகத்தையும் நம்புங்கள். எல்லா கட்சிகளிலும் பிரச்சினைகள் உள்ளன. அதுபோல, நமது கட்சியிலும் பிரச்சினைகள் இருந்தால், அதை நாமே பேசி தீர்த்துக்கொள்வோம். ஐந்து கட்சிகளின் ஆதரவில் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கும் இந்த பொய்க்கால் குதிரையின் நடனம் சில காலம்தான்.

கழகத்தின் காவல் தெய்வங்களான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி ஜெயலலிதா ஆகிய நமது இருபெரும் தலைவர்களின் புகழ் இருக்கும் வரை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் செழித்து வளரும். அம்மாவின் ஆட்சி விரைவில் அமையும்” என குறிப்பிட்டுள்ளார்.

Follow Us