AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

முற்றிய உட்கட்சி விவகாரம்.. நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு..

ADMK Internal Clash: இரண்டு அணிகளும் சட்டமன்றத்தில் தங்களது தரப்பினரை கொறடாவாக நியமிக்க வேண்டி சபாநாயகரிடம் மனு அளித்திருந்தனர். இதற்கிடையில், தமிழக வெற்றிக்கழக அரசு மீது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் சி.வி. சண்முகம் தரப்பு அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முற்றிய உட்கட்சி விவகாரம்.. நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 18 May 2026 16:28 PM IST

சென்னை, மே 18, 2026: அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். நாளை காலை 9 மணிக்கு சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் இந்த கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவைப் பொறுத்தவரையில், கடந்த சில நாட்களாக உட்கட்சி பூசல் பூதாகரமாக வெடித்து, இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகிறது. அதில், ஒரு அணியை எடப்பாடி பழனிசாமியும், மற்றொரு அணியை முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகமும் தலைமையேற்று வருகின்றனர்.

இரண்டு அணிகளாக பிரிந்த அதிமுக:

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் அதிருப்தி ஏற்பட்ட சூழலில், அவரை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த பிரச்சனை உருவானது. ஒரு தரப்பினர் இதற்கு ஆதரவு தெரிவித்த நிலையில், மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால், கட்சி இரண்டு அணிகளாகப் பிரிந்து செயல்பட்டு வருகிறது.

மேலும் படிக்க: அவங்களா கிளப்பி விடுறாங்க… முதல்வர் பதவி விவகாரத்தில் திருமாவளவன் கொடுத்த அதிரடி விளக்கம்!

இரண்டு அணிகளும் சட்டமன்றத்தில் தங்களது தரப்பினரை கொறடாவாக நியமிக்க வேண்டி சபாநாயகரிடம் மனு அளித்திருந்தனர். இதற்கிடையில், தமிழக வெற்றிக்கழக அரசு மீது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் சி.வி. சண்முகம் தரப்பு அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அப்போது சட்டப்பேரவையிலேயே பேசிய எடப்பாடி பழனிசாமி, “பொதுச்செயலாளர் இருக்கும்போது மற்ற உறுப்பினர்கள் எப்படி தனியாக முடிவு எடுக்க முடியும்? இது என்ன குதிரைப்பேரமா?” என கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும் படிக்க:  “பொதுவாழ்வில் இருந்து தற்காலிகமாக விலகுகிறேன்”.. முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர். அதிரடி அறிவிப்பு!

கட்சி பதவியை பறித்த எடப்பாடி பழனிசாமி:

அதேபோல், நம்பிக்கை வாக்கெடுப்பின் போது 25 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக வெற்றிக்கழகத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, சி.வி. சண்முகம் தரப்பைச் சேர்ந்த 26 மாவட்டச் செயலாளர்களின் பதவிகளை பறித்து, புதிய மாவட்டச் செயலாளர்களை எடப்பாடி பழனிசாமி அதிரடியாக நியமித்தார். இந்த நடவடிக்கை கட்சிக்குள் மேலும் விரிசலை ஏற்படுத்தியது.

நாளை கூடும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்:

இந்த நிலையில், சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி தரப்பினர் பொதுக்குழுவை கூட்ட முயற்சி செய்து வருகின்றனர். இத்தகைய உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள சூழலில், எடப்பாடி பழனிசாமி கூட்டியுள்ள இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us