AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

CSK: தோனியை வெறுப்பு ஏற்றினேன்! அதனால் நடந்த அதிசயம்.. சிஎஸ்கேவில் வாய்ப்பு கிடைத்தது குறித்து அஸ்வின் டாக்!

Ravichandran Ashwin: சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணியுடனான தனது ஆரம்ப நாட்களை நினைவு கூர்ந்த ரவிசந்திரன் அஸ்வின், எம்.எஸ். தோனி குறித்து ஒரு முக்கியமான தகவலை வெளியிட்டார். அந்த உரையாடலின் போது, ​​தோனி ஒருமுறை தன் மீது எப்படி எரிச்சலடைந்தார். அதனால், சென்னை சூப்பர் கிங்ஸ்அணிக்காக விளையாடும் வாய்ப்பை எப்படிப் பெற்றேன் என்பது குறித்து பேசியுள்ளார்.

CSK: தோனியை வெறுப்பு ஏற்றினேன்! அதனால் நடந்த அதிசயம்.. சிஎஸ்கேவில் வாய்ப்பு கிடைத்தது குறித்து அஸ்வின் டாக்!
ரவிசந்திரன் அஸ்வின்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 08 May 2026 19:18 PM IST

ஐபிஎல்லில் (IPL 2026) சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நீண்ட காலம் விளையாடிய ரவிசந்திரன் அஸ்வின், எம்.எஸ்.தோனி குறித்தும், சென்னை அணியில் விளையாட எப்படி வாய்ப்பு கிடைத்தது என்பது குறித்தும் பேசினார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஜியோஹாட்ஸ்டாரில், சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணியுடனான தனது ஆரம்ப நாட்களை நினைவு கூர்ந்த ரவிசந்திரன் அஸ்வின், எம்.எஸ். தோனி குறித்து ஒரு முக்கியமான தகவலை வெளியிட்டார். அந்த உரையாடலின் போது, ​​தோனி ஒருமுறை தன் மீது எப்படி எரிச்சலடைந்தார். அதனால், சென்னை சூப்பர் கிங்ஸ்அணிக்காக விளையாடும் வாய்ப்பை எப்படிப் பெற்றேன் என்பது குறித்து பேசியுள்ளார்.

ALSO READ: ஐபிஎல்லில் புகை.. ஹோட்டல்களில் விருந்தினருடன் நடை.. வீரர்களுக்கு பிசிசிஐ எச்சரிக்கை!

தோனிக்கு அஸ்வின் மீது ஏன் கோபம்?

ஜியோ ஹாட்ஸ்டாரில் எம்.எஸ்.தோனி குறித்து பேசிய அஸ்வின், ”எங்கள் அணிக்கு எதிரான சேலஞ்சர் டிராபி போட்டியின் போது, ​​என் பந்தில் தோனி இரண்டு முறை ஆட்டமிழந்தார். ஒருமுறை, அவர் டீப் கவர் திசையில் ஒரு ஷாட் அடித்தார். நான் பாய்ந்து அந்த கேட்சைப் பிடித்தேன். நான் தோனியின் விக்கெட்டை சற்று அதிகமாகவே கொண்டாடினேன், அதனால் தோனி என் மீது எரிச்சலடைந்தார், ஆனால் நான் அதை ஒரு புன்னகையுடன் பார்த்தேன். அப்போது தோனி என்னிடம், ‘கொண்டாடுவதற்கு என்ன இருக்கிறது?’ என்று கேட்டார். அதற்கு நான், ‘உங்கள் விக்கெட் எனக்கு ஒரு கனவு போன்றது’ என்று பதிலளித்தேன். ஒருவேளை, இந்த இடத்தில்தான் எனக்கு அதிர்ஷ்டம் கைகூடியது. அடுத்த ஆண்டு சிஎஸ்கே அணியில் விளையாட எனக்கு வாய்ப்பு கிடைத்தது,” என்றார்.

தொடர்ந்து சிஎஸ்கே அணியில் தான் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு வழிவகுத்த தனது மறைந்த வழிகாட்டியான வி.பி. சந்திரசேகருக்கு ரவிசந்திரன் அஸ்வின் நன்றி தெரிவித்தார். அதில், ”நான் அவருக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருப்பேன். சிலர் உங்கள் வாழ்க்கையில் வந்து, உங்களுக்காக ஒரு பாதையை உருவாக்கி, பின்னர் விலகிச் செல்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை, அந்த நபர் வி.பி. சந்திரசேகர். அவர் இப்போது நம்முடன் இல்லை, அவருடைய வாழ்க்கை மிக விரைவில் முடிந்துவிட்டது. சென்னையில் லீக் கிரிக்கெட்டில், டி20 வடிவம் புதிதாக இருந்த காலத்தில், சுழற்பந்து வீச்சாளர்களுக்கு, குறிப்பாக விரல் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று மக்கள் நினைத்தபோது, ​​நான் பச்சையப்பா மைதானத்தில் கெம்ப்ளாஸ்ட் அணிக்காக எம்.ஆர்.எஃப் அணிக்கு எதிராக விளையாடிக் கொண்டிருந்தேன்.

அப்போது, ஐபிஎல் ஏலத்தின்போதே சிஎஸ்கே முத்தையா முரளிதரனைத் தேர்ந்தெடுத்துவிட்டது, அதனால் என் வாய்ப்புகள் போய்விட்டன என்று நான் நினைத்தேன். பிறகு, சென்னையில் லீக் கிரிக்கெட்டின் இறுதிப் போட்டி சேப்பாக்கில் நடந்தது. அது சிஎஸ்கே-வின் உரிமையாளராக இருந்த இந்தியா சிமெண்ட்ஸ் அணிக்கு எதிராக செம்ப்ளாஸ்ட் அணி மோதிய போட்டியாகும். நான் அந்த போட்டியில் 6 விக்கெட்டுகளை எடுத்தேன். காசி விஸ்வநாதனும் கிரிஸ் ஸ்ரீகாந்தும் அங்கு இருந்தனர். எனக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தபோது, ​​ஸ்ரீகாந்த், ‘சிஎஸ்கே உன்னைத் தேர்ந்தெடுக்கவில்லையா? ஏய் காசி, அவனை எடுத்துக்கொள், நீ நல்ல வீரர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அது என் வாழ்க்கையின் திரும்புமுனை” என்று கூறினார்.

ALSO READ: பந்துவீச்சாளராக தோனி? வலைப்பயிற்சியில் பிராக்டிஸ்.. சிஎஸ்கே ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!

சிஎஸ்கே அணிக்குத் திரும்பிய பிறகு, அடுத்த 2 அல்லது 3ஆண்டுகளுக்கு அதே அணியுடன் விளையாட விரும்பியதாகவும், ஆனால் அது நடக்கவில்லை என்றும் அஷ்வின் கூறினார். அவர் மேலும் கூறுகையில், “மீண்டும் சிஎஸ்கே அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்தபோது, ​​நான் எனது கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கிய இடத்திலேயே முடித்துக்கொள்ளலாம் என்பதே எனது முதல் எண்ணமாக இருந்தது. நான் 2-3 ஆண்டுகள் விளையாட எண்ணியிருந்தேன். அது நடக்கவில்லை; அது வேறு கதை. எனது ஐபிஎல் வாழ்க்கையை சேப்பாக்கம் மைதானத்தில் முடித்துக்கொள்ள வேண்டும் என்ற மற்றொரு சிறிய கனவும் எனக்கு இருந்தது, ஆனால் அதுவும் நடக்கவில்லை” என்றார்.

Follow Us