IPL 2027: இந்தியாவில் மினி ஐபிஎல் ஏலம்.. பிசிசிஐயின் முக்கிய முடிவு! இம்பாக்ட் வீரர் விதி தொடருமா?
IPL 2027 Mini Auction: ஐபிஎல் 2027ம் ஆண்டுக்கான மெகா ஏலம் மீண்டும் வெளிநாட்டில் நடத்தப்படலாம். இதன் பொருள், இந்தியாவில் ஏலத்தை நடத்தும் முடிவு தற்போது இந்த ஆண்டுக்கான மினி ஏலத்திற்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது என்பதாகும் . WPL 2027 ஏலம் வருகின்ற 2026 அக்டோபர் 28ம் தேதி கொச்சியில் நடைபெற வாய்ப்புள்ளது.
ஐபிஎல் 2027ம் (IPL 2027) ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தை இந்தியாவில் நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) முடிவு செய்துள்ளது. ஐபிஎல் நிர்வாகக் குழுவின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இம்முறை ஏலமானது ஒரு ‘மினி-ஏலமாக’ இருக்கும். இருப்பினும், இந்த நிகழ்விற்காகத் தேர்ந்தெடுக்கப்படும் இந்தியாவில் நகரம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் ஏலம் தொடர்ந்து வெளிநாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது. 2023ம் ஆண்டு ஏலம் கொச்சியில் நடைபெற்றது. ஆனால் பின்னர் அது வெளிநாட்டிற்கு மாற்றப்பட்டது. அதன் பிறகு, துபாய், ஜெட்டா மற்றும் அபுதாபி போன்ற நகரங்களில் ஐபிஎல் ஏலங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும், 2027 மினி-ஏலத்திற்காக, இந்த போக்கை மாற்ற பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
ALSO READ: ஐபிஎல் 2027 ஏலம் எப்போது? இந்தியாவில் இந்த முறை.. நடக்கப்போவது என்ன?
அறிக்கைகளின்படி, ஐபிஎல் 2027ம் ஆண்டுக்கான மெகா ஏலம் மீண்டும் வெளிநாட்டில் நடத்தப்படலாம். இதன் பொருள், இந்தியாவில் ஏலத்தை நடத்தும் முடிவு தற்போது இந்த ஆண்டுக்கான மினி ஏலத்திற்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது என்பதாகும் . WPL 2027 ஏலம் வருகின்ற 2026 அக்டோபர் 28ம் தேதி கொச்சியில் நடைபெற வாய்ப்புள்ளது. மேலும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) வரவிருக்கும் சீசனுக்கான இடத் திட்டங்களையும் வகுத்து வருகிறது.




ஃபிரான்சைசி திட்ட மாற்றங்கள்:
கடந்த சில ஆண்டுகள் வெளிநாட்டில் மினி ஏலத்தை நடத்துவது குறித்து ஐபிஎல் உரிமையாளர்கள் குரல் எழுப்பியது. அதில், ஐபிஎல்லில் பங்கேற்கும் 10 அணிகள் தங்கள் முழு குழுவையும் வெளிநாட்டிற்கு விமானத்தில் அனுப்புவது, ஏற்பாடுகள் மற்றும் செயல்பாடுகள் ஆகிய இரண்டிலும் சவாலானதாகும். கடந்த 2026ம் ஆண்டு அபுதாபியில் நடைபெற்ற ஏலத்தின்போதும் உரிமையாளர்கள் இதேபோன்ற கவலைகளை வெளிப்படுத்தியிருந்தனர். இதைத் தொடர்ந்து, அவர்களின் கருத்துக்களைக் கருத்தில் கொண்ட பிசிசிஐ, இந்த முறை ஏலத்தை இந்தியாவில் நடத்த முடிவு செய்தது.
ஏலம் எந்த நகரத்தில் நடைபெறும்?
ஐபிஎல் 2027 மினி ஏலத்தின் தேதியும் நகரமும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இது சம்பந்தமாக, உரிமையாளர்களுக்கும் அவர்களது குழுவினருக்கும் ஹோட்டல்கள் கிடைப்பதே மிக முக்கியமான காரணியாக இருக்கும். இந்தியாவில் அதிக திருமணம் நடைபெறும் காலமட்டமாக வருகின்ற 2026 அக்டோபர் முதல் 2026 டிசம்பர் வரை ஆகும். எனவே, இந்தக் காலகட்டத்தில் முக்கிய நகரங்களில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டல்களில் அறைகள் கிடைப்பது ஒரு பெரும் சவாலாக அமையக்கூடும்.
இம்பாக்ட் வீரர் ரூல்:
நிர்வாகக் குழுக் கூட்டத்தில் ‘இம்பாக்ட் ரூல் வீரர் விதி’ குறித்தும் விவாதிக்கப்பட்டது. ஆனால் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. பிசிசிஐ இந்த விவகாரத்தை இப்போதைக்குத் திறந்தே வைத்துள்ளது. சுமார் ஒரு மாதத்தில் ஐபிஎல் நிர்வாக குழுவின் மற்றொரு கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் ‘இம்பாக்ட் வீரர் விதி’யின் எதிர்காலம் குறித்த இறுதி முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளது.
ALSO READ: பயிற்சி முகாமில் தீவிரம் காட்டிய தோனி.. சிஎஸ்கே வீரர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
இம்பாக்ட் வீரர் விதி:
பெரும்பாலான ஃபிரான்சைஸ்கள் ‘இம்பாக்ட் வீரர் விதி’ தொடர்வதற்கு ஆதரவாக இல்லை. இருப்பினும், இந்த விதியை நீக்கினால், அடுத்த 2027ம் ஆண்டிலிருந்து அதைச் செய்வது நல்லது என்று பல அணிகளும் கருதுகின்றன. இந்த விதியைக் கருத்தில் கொண்டே தங்கள் அணிகளைச் சமநிலைப்படுத்தியுள்ளதாகவும் சில ஃபிரான்சைஸ்கள் வாதிட்டுள்ளன. எனவே, இந்த விதியை திடீரென நீக்குவதற்குப் பதிலாக, குறைந்தபட்சம் இன்னும் ஒரு சீசனுக்காவது அதைத் தொடர்வது குறித்து பரிசீலிக்கலாம். அடுத்த ஒழுங்குமுறை கவுன்சில் கூட்டம் இந்த விஷயத்தில் தெளிவுபடுத்தும். தற்போதைக்கு, ஐபிஎல் 2027 மினி ஏலத்தை வெளிநாட்டில் நடத்துவதற்குப் பதிலாக இந்தியாவில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்பது உறுதியாகியுள்ளது.