IPL 2026: ஐபிஎல் வரலாற்றில் ஒரு முறை கூட டக் அவுட் இல்லை.. சிறப்பு சாதனையுடன் சாய் சுதர்சன்..!
Sai Sudharsan Record: ஐபிஎல் வரலாற்றில் இன்றுவரை 'டக்' (0 ரன்களில் ஆட்டமிழப்பு) அவுட்டை சந்திக்காத ஒரு பேட்ஸ்மேன் இருக்கிறார். இது மட்டுமின்றி, 0 ரன்களில் ஆட்டமிழக்காமல் அதிக ரன்கள் எடுத்த வீரரும் அவரே. இத்துடன், அவர் ஒருமுறை ஆரஞ்சு கேப் வென்றுள்ளார். அந்தவகையில், அந்த வீரர் யார்..? எப்போது ஆரஞ்சு கேப் வென்றார் என்பதை தெரிந்து கொள்வோம்.
ஐபிஎல் 19வது சீசன் (IPL 2026) வருகின்ற 2026 மார்ச் 28ம் தேதி தொடங்க உள்ளது. இந்த மிகப்பெரிய லீக்கில் அதிக ரன்கள் குவிக்கும் பேட்ஸ்மேனுக்கு ‘ஆரஞ்சு கேப்’ வழங்கப்படுகிறது. இது ஒரு சீசன் முழுவதும் சீரான ஃபார்மில் இருந்து தொடர்ந்து ரன்கள் குவிப்பதற்கு வழங்கப்படும் அங்கீகாரம் ஆகும். இதை எல்லா பேட்ஸ்மேன்களாலும் சாதிக்க முடியாது. ஏனெனில் ஒரே ஒரு போட்டியில் டக் அவுட்டானால் கூட, அந்த சீசன் முழுவதும் மேற்கொண்ட கடின உழைப்பையும் பாழாக்கிவிடும். ஆனால், ஐபிஎல் வரலாற்றில் இன்றுவரை ‘டக்’ (0 ரன்களில் ஆட்டமிழப்பு) அவுட்டை சந்திக்காத ஒரு பேட்ஸ்மேன் இருக்கிறார். இது மட்டுமின்றி, 0 ரன்களில் ஆட்டமிழக்காமல் அதிக ரன்கள் எடுத்த வீரரும் அவரே. இத்துடன், அவர் ஒருமுறை ஆரஞ்சு கேப் வென்றுள்ளார். அந்தவகையில், அந்த வீரர் யார்..? எப்போது ஆரஞ்சு கேப் வென்றார் என்பதை தெரிந்து கொள்வோம்.
ALSO READ: ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.. டாப் 2வில் மும்பை, பெங்களூரு!
0 ரன்களில் ஆட்டமிழக்காமல் அதிக ரன்கள் எடுத்ததற்கான சாதனை
ஐபிஎல்லில் ஒரு முறை டக் அவுட்டாகாமல் அதிக ரன்கள் எடுத்தவர் பட்டியலில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் இளம் பேட்ஸ்மேனான சாய் சுதர்ஷன் வசம் உள்ளது. 24 வயதான சாய் சுதர்சன், 2022 முதல் ஐபிஎல் தொடரில் 40 போட்டிகளில் விளையாடி 49.81 என்ற சிறப்பான சராசரியில் 2 சதங்கள் மற்றும் 12 அரை சதங்களுடன் 1793 ரன்கள் எடுத்துள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 145.89 ஆகும்.மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த இன்னிங்ஸ்கள் அனைத்திலும், எந்த ஒரு பந்துவீச்சாளராலும் அவரை ரன் ஏதும் எடுக்க விடாமல் ஆட்டமிழக்கச் செய்ய முடியவில்லை.




2025 சீசனில் ஆரஞ்சு கேப் வின்னர்:
ஐபிஎல் 2025-ன் கடந்த சீசனில் சாய் சுதர்ஷன் 15 போட்டிகளில் ஒரு சதம் மற்றும் 6 அரை சதங்கள் உட்பட 759 ரன்கள் எடுத்தார். அவரது சராசரி 54.21 ஆகவும், ஸ்டிரைக் ரேட் 156.17 ஆகவும் இருந்தது. இந்த சிறப்பான ஆட்டத்தின் காரணமாக, சுதர்சன் ஆரஞ்சு கேப் வென்று, அந்த சீசனின் அதிக ரன்கள் எடுத்த வீரர் ஆனார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக தொடக்க ஆட்டக்காரராக அல்லது டாப் ஆர்டரில் விளையாடிய சாய் சுதர்சன், பல போட்டிகளில் அணிக்கு ஒரு வலுவான தொடக்கத்தை அளித்ததுடன், மிடில் ஓவர்களில் ரன் விகிதத்தை அதிகரிப்பதில் முக்கியப் பங்காற்றினார்.
ALSO READ: ஒரு போட்டியில் ஒட்டுமொத்தமாக அதிக ரன்கள்.. கெத்து காட்டும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
மேலும் ஒரு வீரர்:
சாய் சுதர்ஷனைத் தவிர, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ரிங்கு சிங் மட்டுமே ஐபிஎல் தொடரில் ரன் ஏதும் எடுக்காமல் 1000 ரன்களுக்கு மேல் எடுத்த ஒரே பேட்ஸ்மேன் ஆவார். ரிங்கு சிங் தனது ஆட்டத்தை முடிக்கும் திறனால் பெரிய பெயரைப் பெற்றுள்ளார், மேலும் அவரது நிலைத்தன்மையும் பாராட்டத்தக்கது. ரிங்கு சிங் இதுவரை ஐபிஎல் தொடரில் 59 போட்டிகளில் விளையாடி, 4 அரை சதங்களின் உதவியுடன் 1099 ரன்களை எடுத்துள்ளார்.