IND A vs SL A: வைபவ் சூர்யவன்ஷியிடம் வம்பு.. இலங்கை வீரர்களுடன் மோதல்.. என்ன நடந்தது?
Vaibhav Sooryavanshi Fight Controversy: இரு அணிகளுக்கு இடையிலான சூப்பர் ஓவரில், முதலில் பேட் செய்த இலங்கை ஏ அணி 16 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு ஆடிய இந்திய ஏ அணியால் 9 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. சூப்பர் ஓவருக்குப் பிறகு, இலங்கை வீரர் ஒருவர் வைபவிடம் ஏதோ சொன்னதாகவும், அது 15 வயது சிறுவனான சூர்யவன்ஷியை கோபப்படுத்தியதாகவும் செய்திகள் வெளியாகின.
இலங்கையில் நடைபெற்று வரும் முத்தரப்புத் தொடரின் (Tri Series) 4வது போட்டி ஆரம்பம் முதலே சர்ச்சையில் நிரம்பியதாகவே இருந்தது. திலக் வர்மா தலைமையிலான இந்திய ‘ஏ’ அணியை (India A Team), இலங்கை ‘ஏ’ அணி சூப்பர் ஓவரில் தோற்கடித்தது. வைபவ் சூர்யவன்ஷி பேட்டிங்கில் சிறப்பாகச் செயல்படத் தவறினாலும், இலங்கை வீரர்களுடனான அவரது மோதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான சூப்பர் ஓவரில், முதலில் பேட் செய்த இலங்கை ஏ அணி 16 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு ஆடிய இந்திய ஏ அணியால் 9 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. சூப்பர் ஓவருக்குப் பிறகு, இலங்கை வீரர் ஒருவர் வைபவிடம் ஏதோ சொன்னதாகவும், அது 15 வயது சிறுவனான சூர்யவன்ஷியை கோபப்படுத்தியதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால், இந்த சர்ச்சையின் பின்னணியில் உள்ள முழு உண்மையை பற்றி தெளிவாக தெரிந்து கொள்வோம்.
ALSO READ: இந்திய ஏ அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுமா? சமன்பாடு என்ன..?




பாதியில் நிறுத்தப்பட்ட போட்டி..
போதிய வெளிச்சம் இல்லாத நிலையிலும், சூப்பர் ஓவரின் போது வேகப்பந்து வீச்சாளர்கள் பந்து வீச அனுமதிக்கப்பட்டதால், அந்தப் போட்டி சர்ச்சைக்குள்ளானது. மங்கலான வெளிச்சம் காரணமாக ஆட்டம் கணிசமான நேரத்திற்கு நிறுத்தப்பட்டது.
இந்த சர்ச்சை ஏன் எழுந்தது?
Vaibhav Sooryavanshi in a heated argument with the Srilankan players 😭🔥 pic.twitter.com/QCPl7ZqGkt
— Sanju™ (@SixerSanju) June 15, 2026
சூப்பர் ஓவருக்குப் பிறகு, இலங்கை ஏ அணியின் ஆல்ரவுண்டர் விஷன் ஹாலம்பகே, வைபவ் சூர்யவன்ஷியிடம், “ஆட்டம் முடிந்துவிட்டது, இப்போது வீட்டிற்குச் செல்லுங்கள்” என்று கூறியதாகத் தெரிகிறய்ஜி. இதனால் ஆத்திரமடைந்த சூர்யவன்ஷி, அந்த இலங்கை வீரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நிலைமை மிகவும் மோசமடைந்ததால், இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
முன்னதாக, சூப்பர் ஓவருக்கு பிறகு சூர்யான்ஷ் ஷெட்ஜ் மற்றும் இலங்கை வீரர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனால், வைபவ் சூர்யவன்ஷி அருகில் வந்தபோது, அவர் ஒரு இலங்கை வீரரைத் தள்ளினார். மற்ற இலங்கை வீரர்கள் தலையிட்டனர். வைபவ், வீரர்கள் அமரும் இடத்தை நோக்கி நடந்து சென்றுகொண்டிருந்தபோது, தன் கையால் சைகை காட்டி ஏதோ சொன்னார்.
ALSO READ: ஆஸ்திரேலிய கிரிக்கெட்டை ஆளும் இந்திய வம்சாவளி ஐரா ஏரி.. யார் இந்த வைரல் பேரழகி..?
இலங்கை வீரர்கள் மன்னிப்பு கேட்க தயாரா..?
கிடைத்த தகவலின்படி, இந்த முழு சர்ச்சையும் இலங்கை ‘ஏ’ அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமில் இது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இந்த விவாதத்தின் போது, சூப்பர் ஓவரின் இரண்டாவது இன்னிங்ஸில் மோசமான வெளிச்சத்தின் காரணமாக பேட்டிங் செய்வது மிகவும் கடினமாக இருந்ததால், சில இலங்கை வீரர்கள் இந்திய அணியிடம் மன்னிப்பு கேட்க விரும்புவதாகத் தெரிவித்தனர்.