IND vs SL: முகமது சிராஜுடன் களமிறங்கும் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் யார்? காலி டெஸ்டில் யாருக்கு வாய்ப்பு?
India vs Srilanka Test Series: ஜஸ்பிரித் பும்ரா டெஸ்ட் தொடரில் காயம் காரணமாக இல்லாததால், வேகப்பந்து வீச்சு குறித்து முடிவெடுப்பது சற்று கடினமானது. இந்தத் தொடரில் பும்ரா இருந்திருந்தால், முகமது சிராஜூடன் பந்துவீசியிருப்பார். ஆனால் இப்போது பும்ரா இல்லாததால், சிராஜுக்கு மற்றொரு வேகப்பந்துவீச்சாளர் என்ற நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. எனவே, இந்திய அணியில் 3 போட்டியாளர்கள் உள்ளனர்.
இந்தியா மற்றும் இலங்கை (IND vs SL) அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி 2026 ஆகஸ்ட் 15ம் தேதி காலி ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டி இரு அணிகளுக்கும் தொடரில் முன்னிலையைத் தக்கவைத்துக் கொள்ளவும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான (WTC 2025-27) நம்பிக்கையை உயிர்ப்புடன் வைத்திருக்கவும் இதில் வெற்றி பெறுவது அவசியம். இதற்கிடையில், இந்தப் போட்டியில் விளையாடும் 11 பேர் கொண்ட அணி குறித்து மிகுந்த ஆர்வம் நிலவுகிறது. இலங்கையின் பிட்ச் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக உள்ளன. எனவே, விளையாடும் 11 பேர் கொண்ட அணி எப்படி இருக்கும் என்பது குறித்து விளையாட்டு ரசிகர்களிடையே பெரும் விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிக வாய்ப்பு இல்லை. எனவே, இந்திய அணி 2 வேகப்பந்து வீச்சாளர்களை மட்டுமே களமிறக்கும் என்று கூறப்படுகிறது. இதில், முகமது சிராஜின் பெயர் உறுதியாகியுள்ளது. அப்படியென்றால், இரண்டாவது வேகப்பந்து வீச்சாளர் யார்? இதுகுறித்து மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. குர்னூர் பிரார் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகலாம் அல்லது அனுபவமிக்க பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கலாம்.
ALSO READ: காலி ஸ்டேடியத்தில் இந்திய அணியின் சாதனை என்ன..? யார் அதிக ரன்கள்? யார் அதிக விக்கெட்கள்?




2வது வேகப்பந்து வீச்சாளர் யார்..?
ஜஸ்பிரித் பும்ரா டெஸ்ட் தொடரில் காயம் காரணமாக இல்லாததால், வேகப்பந்து வீச்சு குறித்து முடிவெடுப்பது சற்று கடினமானது. இந்தத் தொடரில் பும்ரா இருந்திருந்தால், முகமது சிராஜூடன் பந்துவீசியிருப்பார். ஆனால் இப்போது பும்ரா இல்லாததால், சிராஜுக்கு மற்றொரு வேகப்பந்துவீச்சாளர் என்ற நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. எனவே, இந்திய அணியில் 3 போட்டியாளர்கள் உள்ளனர். அவர்களில், ஆகிப் நபி கருத்தில் கொள்ளப்பட மாட்டார். ஆகையால், இது குர்னூர் பிரார் மற்றும் பிரசித் கிருஷ்ணா இடையேயான போட்டியாகும். எனவே, இருவரில் ஒருவரைத் தேர்ந்தெடுப்பது பெரும் தலைவலியைத் தரும்.
ஏனெனில், பயிற்சிப் போட்டியில் இருவரின் புள்ளிவிவரங்களிலும் பெரிய வித்தியாசம் இல்லை. முதல் இன்னிங்ஸில், பிரசித் கிருஷ்ணா 8 ஓவர்களில் 32 ரன்கள் எடுத்தார், ஆனால் விக்கெட் எதுவும் எடுக்கவில்லை. ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில், அவர் 8 ஓவர்களில் 35 ரன்களுக்கு 1 விக்கெட் எடுத்தார். குர்னூர் முதல் இன்னிங்ஸில் 12 ஓவர்களில் 49 ரன்களுக்கு 1 விக்கெட்டையும், இரண்டாவது இன்னிங்ஸில் 8 ஓவர்களில் 37 ரன்களுக்கு 2 விக்கெட்டையும் எடுத்திருந்தார்.
ALSO READ: இந்தியா – இலங்கை டெஸ்ட் தொடர்.. விராட் கோலி 9 ஆண்டுகால சாதனை முறியடிக்கப்போவது யார்?
குர்னூர் பிராருக்கு வாய்ப்புள்ளதா?
பிரசித் கிருஷ்ணாவுக்கு இந்திய அணியில் பல வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் அவரால் அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. அவரது கடந்தகால சாதனை அவ்வளவு சிறப்பாக இல்லை. எனவே, குர்னூர் பிரார், முகமது சிராஜுடன் பந்துவீசலாம். அவருக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைக்கலாம். ஏனெனில், குர்னூரால் பந்துவீச்சில் மட்டுமல்ல, பேட்டிங்கிலும் பங்களிக்க முடியும். பயிற்சிப் போட்டியில் குனூர் பிரார் ஒரே ஓவரில் 4 சிக்ஸர்களை அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.