Team India: விராட் கோலி உடற்தகுதியுடன் உள்ளாரா? ஜூன் 22ம் தேதி பிட்னஸ் டெஸ்ட்.. உற்றுநோக்கும் பிசிசிஐ!
Virat Kohli Fitness Test: இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஒருநாள் தொடருக்கான அணித் தேர்வுக்கு முன்னதாக, விராட் கோலி உட்பட மேலும் 5 இந்திய கிரிக்கெட் வீரர்கள் குறித்து ஒரு முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது. ஹர்திக் பாண்டியா தனது காயத்திலிருந்து இன்னும் குணமடையவில்லை என்றும், அதனால் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து ஹர்திக் பாண்ட்யா விலகுவார் என்றும் கூறப்படுகிறது.
இங்கிலாந்தில் நடைபெறும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி (Indian Cricket Team) இன்னும் அறிவிக்கப்படவில்லை. விராட் கோலியின் உடற்தகுதி சோதனைக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் 2026 சீசனின் இறுதி போட்டியின் போது விராட் கோலிக்கு (Virat Kohli) தொடை தசைநார் காயம் ஏற்பட்டது, இதன் காரணமாக கோலி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்தும் விலகினார். இருப்பினும், இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான ஒருநாள் அணித் தேர்வுக்கு முன்பு கோலியின் உடற்தகுதி சோதனைக்கு உட்படுத்தப்படும். இதன் பிறகு விராட் கோலி இங்கிலாந்தில் விளையாடுவாரா இல்லையா என்பது முடிவு செய்யப்படும். 2027 ஒருநாள் உலகக் கோப்பை விரைவில் நடைபெறவுள்ள நிலையில் இந்தியாவின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் முக்கியமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ALSO READ: உலகக் கோப்பையில் ரோஹித், கோலிக்கு வாய்ப்பு கிடைக்குமா? பிசிசிஐ செயலாளர் மழுப்பலான பதில்!
2026 ஜூன் 22ம் தேதி விராட் கோலிக்கு உடற்தகுதி சோதனை:
தினிக் ஜாக்ரன் பத்திரிகையின் அறிக்கையின்படி, பிசிசிஐ-யின் பெங்களூருவில் உள்ள சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ், லண்டனில் உள்ள விராட் கோலியைத் தொடர்புகொண்டு , அவருக்கு சிகிச்சைக்கான திட்டத்தை வழங்கியுள்ளது. இதன் காரணமாக, தொடைத்தசை காயத்திலிருந்து விராட் கோலி வேகமாக குணமடைந்து வருகிறார். அவர் தற்போது வருகின்ற 2026 ஜூன் 22ம் தேதி உடற்தகுதி சோதனைக்காக சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸுக்குச் செல்வார். விராட்டின் உடற்தகுதி அறிக்கை கிடைத்த பின்னரே, இங்கிலாந்தில் நடைபெறவிருக்கும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படும்.




ஹர்திக் பாண்ட்யா விளையாடுவாரா?
இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஒருநாள் தொடருக்கான அணித் தேர்வுக்கு முன்னதாக, விராட் கோலி உட்பட மேலும் 5 இந்திய கிரிக்கெட் வீரர்கள் குறித்து ஒரு முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது. ஹர்திக் பாண்டியா தனது காயத்திலிருந்து இன்னும் குணமடையவில்லை என்றும், அதனால் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து ஹர்திக் பாண்ட்யா விலகுவார் என்றும் கூறப்படுகிறது. ஹர்திக் பாண்ட்யா மட்டுமின்றி, துருவ் ஜுரல், கே.எல். ராகுல், ரிஷப் பண்ட் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரும் இங்கிலாந்தில் நடைபெறும் ஒருநாள் தொடருக்கு முழு உடற்தகுதியுடன் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த வீரர்கள் குறித்த தனது அறிக்கையை சிறப்பு மையம் தேர்வாளர்களுக்கு அனுப்பியுள்ளது.
ALSO READ: ஒரே ஆள்.. ஒரே மாதிரி கேட்ச்.. 3 விக்கெட் போச்சு.. ரோஹித் – பிரசித் செய்த சிறப்பு சாதனை!
இந்தியா-இங்கிலாந்து ஒருநாள் தொடர்
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் வருகின்ற 2026 ஜூலை 14ம் தேதி முதல் தொடங்குகிறது. முதல் ஒருநாள் போட்டியானது பர்மிங்காமில் நடைபெறும். இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி 2026 ஜூலை 16ம் தேதி கார்டிஃபில் நடைபெறும். 3வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி 2026 ஜூலை 19ம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும்.