AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

PF : உங்கள் பிஎஃப் கோரிக்கை இனி தேவையில்லாத காரணங்களால் நிராகரிகப்படாது.. வந்தது புதிய விதி!

PF Claim Will Become More Easy | பிஎஃப் பணத்தை எடுக்க விண்ணப்பிக்கும்போது தேவையில்லாத காரணங்களால் அது நிராகரிக்கப்படுவதை தடுக்க ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் ஒரு அசத்தல் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. அது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 01 Aug 2026 11:46 AM IST
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் புதிய பிஎஃப் சட்டத்தின் மூலம் பல்வேறு புதிய விதிகளை அறிமுகம் செய்துள்ளது. பிஎஃப் பணத்தை விரைவாக எடுக்கவும், பிஎஃப் கணக்கு தொடர்பான சேவைகளை ஊழியர்கள் மிக விரைவாகவும், சிக்கல்கள் இன்றி பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த விதிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் புதிய பிஎஃப் சட்டத்தின் மூலம் பல்வேறு புதிய விதிகளை அறிமுகம் செய்துள்ளது. பிஎஃப் பணத்தை விரைவாக எடுக்கவும், பிஎஃப் கணக்கு தொடர்பான சேவைகளை ஊழியர்கள் மிக விரைவாகவும், சிக்கல்கள் இன்றி பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த விதிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 

1 / 5
இந்த சட்டங்களில் ஒன்றுதான் பிஎஃப் பணம் எடுப்பது, பென்ஷன் மற்றும் காப்பீடு தொடர்பான கோரிக்கைகளை ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் 20 நாட்களுக்குள் முடித்து தர வேண்டும் என்பது. அவ்வாறு, ஊழியர்களின் கோரிக்கைகள் 20 நாட்களுக்கு முடித்துதரப்படவில்லை என்றால் அதற்கான தண்டனைகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன. 

இந்த சட்டங்களில் ஒன்றுதான் பிஎஃப் பணம் எடுப்பது, பென்ஷன் மற்றும் காப்பீடு தொடர்பான கோரிக்கைகளை ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் 20 நாட்களுக்குள் முடித்து தர வேண்டும் என்பது. அவ்வாறு, ஊழியர்களின் கோரிக்கைகள் 20 நாட்களுக்கு முடித்துதரப்படவில்லை என்றால் அதற்கான தண்டனைகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன. 

2 / 5
பிஎஃப் பணத்தை எடுக்க ஊழியர் இபிஎஃப்ஓவின் இணையதளம் மூலம் விண்ணப்பித்து, பணம் வங்கி கணக்குக்கு வரும் வரை காத்திருக்க வேண்டும். ஒருவேளை ஏதேனும் காரணங்களால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டிய தேவை ஏற்படும். இந்த சிக்கலை தவிர்க்க தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

பிஎஃப் பணத்தை எடுக்க ஊழியர் இபிஎஃப்ஓவின் இணையதளம் மூலம் விண்ணப்பித்து, பணம் வங்கி கணக்குக்கு வரும் வரை காத்திருக்க வேண்டும். ஒருவேளை ஏதேனும் காரணங்களால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டிய தேவை ஏற்படும். இந்த சிக்கலை தவிர்க்க தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

3 / 5
அதாவது, உறுப்பினர் முறையான அனைத்து ஆவணங்களுடனும், கோரிக்கைகளை சமர்ப்பித்திருந்தால் அதனை அடுத்த 20 நாட்களுக்குள்ளாக ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் தீர்த்து வைக்க வேண்டும். ஒருவேளை முறையான காரணம் இன்றி 20 நாட்களுக்கும் மேலாக கோரிக்கை நிறைவேற்றப்படாமல் இருந்தால் அதிகாரிக்கும் அபராதம் விதிக்கப்படும். 

அதாவது, உறுப்பினர் முறையான அனைத்து ஆவணங்களுடனும், கோரிக்கைகளை சமர்ப்பித்திருந்தால் அதனை அடுத்த 20 நாட்களுக்குள்ளாக ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் தீர்த்து வைக்க வேண்டும். ஒருவேளை முறையான காரணம் இன்றி 20 நாட்களுக்கும் மேலாக கோரிக்கை நிறைவேற்றப்படாமல் இருந்தால் அதிகாரிக்கும் அபராதம் விதிக்கப்படும். 

4 / 5
முறையான காரணங்கள் இன்றி கோரிக்கையை நிறைவேற்றாத அதிகாரிக்கு 12 ஆண்டுகளுக்கான வட்டி அபராதமாக விதிக்கப்படும். இந்த அபராதம் அந்த சம்மந்தப்பட்ட அதிகாரியின் மாத ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் இனி காரணமின்றி கோரிக்கை நிறைவேற்றப்படாமல் இருப்பது குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

முறையான காரணங்கள் இன்றி கோரிக்கையை நிறைவேற்றாத அதிகாரிக்கு 12 ஆண்டுகளுக்கான வட்டி அபராதமாக விதிக்கப்படும். இந்த அபராதம் அந்த சம்மந்தப்பட்ட அதிகாரியின் மாத ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் இனி காரணமின்றி கோரிக்கை நிறைவேற்றப்படாமல் இருப்பது குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

5 / 5
Follow Us