Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
EPFO

EPFO

EPFO என்பது Employees’ Provident Fund Organisation என்பதற்கான சுருக்கமாகும். தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு மத்திய அரசு அமைப்பு. EPFO அமைப்பு 1952ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் முக்கிய நோக்கம் தொழிலாளர்களுக்கு அவரது ஓய்வு காலத்தில் நிதி பாதுகாப்பை வழங்குவதாகும்.ஒரு ஊழியர் EPFO-வில் பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தில் வேலைக்கு சேரும் போதே, அவருக்கு ஒரு UAN (Universal Account Number) எண் வழங்கப்படும். இது அவரது பிஎஃப் கணக்கை நிர்வகிக்க உதவும். ஒரு ஊழியரின் மாத ஊதியத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்துக்கொள்ளப்படும். அதேபோல நிறுவனமும் அதே அளவிற்கான ஒரு தொகையை ஊழியரின் பெயரில் EPFO கணக்கிற்கு செலுத்தும். இந்த தொகைக்கு வட்டியும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு மாதம் பிடிக்கப்படும் இந்த தொகை அந்த ஊழியர் பணி ஓய்வு பெற்ற பின் பெரிய தொகையாக கிடைக்கும். இது பணி ஓய்வுக்கு பின் பொருளாதார சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும். அதே போல, மருத்துவம், வீடு வாங்குதல், குழந்தை கல்வி போன்ற அவசர தேவைகளுக்கு பிஎஃப் கணக்கில் இருந்து குறிப்பிட்ட தொகையை எடுத்து பயன்படுத்த முடியும். EPFO தொடர்பான செய்திகளை நாம் காணலாம்

Read More

EPFO : சென்னையில் இபிஎஃப்ஓ குறைதீர் முகாம்.. எப்போது தெரியுமா?

Employee Provident Fund Organization Camp | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் ஏராளமான ஊழியர்களின் பெயர்களில் கணக்கு தொடங்கப்பட்டு அந்த கணக்குகளில் மாதம் மாதம் குறிப்பிட்ட தொகை வரவு வைக்கப்பட்டு வரும். இந்த தொகையை ஊழியர்கள் தங்களது திருமணம், மருத்துவம், வீடு கட்டுதல் மற்றும் வீடு வாங்குதல் உள்ளிட்ட தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.

EPFO : பிஎஃப் வட்டியை வரவு வைக்கும் இபிஎஃப்ஓ.. சுலபமாக தெரிந்துக்கொள்வது எப்படி?

How to Check EPF Interest Credit Online | உறுப்பினர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை பிஎஃப் கணக்கில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் வட்டி தொகையை செலுத்தும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான வட்டியை இபிஎஃப்ஓ உறுப்பினர்களின் வங்கி கணக்கில் செலுத்தி வரும் நிலையில், வட்டி வந்துவிட்டதா என்பது குறித்து தெரிந்துக்கொள்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

EPFO : PF பயனர்களுக்கு குட் நியூஸ்.. வீடு வாங்குவதற்கு, கட்டுவதற்கு பணம் எடுப்பதற்கான விதிகளில் அதிரடி மாற்றம்!

EPFO New Rule | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் ஏற்கனவே உறுப்பினர்களுக்கு பல சிறப்பு அம்சங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில், தற்போது வீடு வாங்குவதல், கட்டுதல் மற்றும் வீட்டுக்கான மாத தவணை செலுத்துவதற்கான விதிகளில் அதிரடி மாற்றம் செய்துள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மத்திய அரசின் வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை திட்டம்.. ஆகஸ்ட் 1 முதல் அமல்!

Indian Government's 1 Lakh Crore Rupees ELI Scheme | இந்தியாவில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் ரூபாய் 1 லட்சம் கோடி மதிப்பில் வேலை வாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை வழங்கும் இஎல்ஐ திட்டத்தை மாத்தி அரசு சமீபத்தில் அறிவித்தது. இந்த நிலையில், இந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையர் விஜய் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

EPFO: தொடர்ச்சியாக பிஎஃப் அட்வான்ஸ் பெற முடியுமா? என்ன காரணங்களுக்கு அட்வான்ஸ் பெற முடியும்?

PF Advance Withdraw Rule: குறிப்பிட்ட சில காரணங்களுக்காக பிஎஃப் தொகையில் இருந்து அட்வான்ஸ் பெற இபிஎஃப்ஓ அனுமதிக்கிறது. ஆனால் சிலருக்கு பிஎஃப் தொகையில் இருந்து பலமுறை அட்வான்ஸாக பெற முடியுமாஎ என்ற சந்தேகம் இருக்கும். அது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

EPFO: பிஎஃப் கணக்கில் 8.25% வட்டி வரவு – உங்களுக்கு கிரெடிட் ஆகிவிட்டதா?

EPFO Interest Update : கடந்த 2024–25 நிதியாண்டுக்கான பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPF0) வட்டி தொகையை பிஎஃப் கணக்குகளில் வரவு வைக்க தொடங்கியுள்ளது. பிஎஃப் கணக்கில் வட்டி வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை எப்படி தெரிந்துகொள்வது என இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

EPFO 3.0 : விரைவில் ATM மற்றும் UPI மூலம் PF பணத்தை எடுக்கலாம்.. வெளியான முக்கிய தகவல்!

EPFO ATM and UPI Withdrawals | தற்போதைய நிலவரத்தின் படி, இபிஎஃப்ஓ உறுப்பினர்கள் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் இணையதளம் மூலம் விண்ணப்பித்து பிஎஃப் பணத்தை எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், உறுப்பினர்கள் நேரடியாக ஏடிஎம் மற்றும் யுபிஐ மூலம் பணத்தை எடுத்துக்கொள்வதற்கான அம்சம் விரைவில் அறிமுகமாக உள்ளது.

EPFO : இனி இபிஎஃப்ஓவில் ரூ.5 லட்சம் வரை சுலபமாக பணம் எடுக்கலாம்.. எப்படி?

EPFO Raises Auto Claim Settlement Limit | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சக உறுப்பினர்கள் தங்களது தேவைகளுக்காக பிஎஃப் பணத்தை எடுக்கின்றனர். இந்த நிலையில், உறுப்பினர்கள் பயனடையும் வகையில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் மூலம் ரூ.5 லட்சம் வரை ஆடோமெடிக் க்ளெய்ம் செட்டில்மென்ட் செய்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ளது.

EPFO: குட் நியூஸ்! இனி அவசர தேவைகளுக்கு ரூ.5 லட்சம் வரை பெறலாம்!

EPFO Auto Claim : ஓய்வூதிய நிதி அமைப்பான இபிஎஃப்ஓ (EPFO), அவசர தேவைகளுக்காக உறுப்பினர்கள் தங்களது பணத்தை விரைவில் பெறும் முறையில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போது இதன் உச்சவரம்பு ரூ.1 லட்சம் முறையில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

EPFO: பிஎஃப் பணம் எடுத்துவிட்டீர்களா? பென்சன் தொகை பாதிக்குமா?

EPF-EPS Explained : பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃப்ஓ அதன் உறுப்பினர்களை அவசர காலங்களில் பணம் எடுக்க அனுமதிக்கிறது. ஆனால் பிஎஃப் பணம் எடுப்பதால் எதிர்காலத்தில் பென்சன் தொகையில் பாதிப்பை ஏற்படுத்துமா என பலருக்கும் சந்தேகம் இருக்கும். இந்த கட்டுரையில் பென்சன் திட்டம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

EPFO 3.0 : விரைவில் நடைமுறைக்கு வரும் இபிஎஃப்ஓ 3.0.. இத்தனை சிறப்பு அம்சங்களா?

EPFO 3.0 Will Launch Soon | இந்தியாவில் உள்ள அரசு மற்றும் அங்கீகாரம் பெற்ற தனியார் துறை ஊழியர்கள் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் 2.0 மூலம் பயனடைந்து வரும் நிலையில், விரைவில் இபிஎஃப்ஓ 3.0 அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதன் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

EPFO : ஒரே போன் கால்… ரூ.1.4 கோடி பறிபோனது.. எப்படி நடந்தது இந்த மோசடி?

EPFO Scam Alert: பிஎஃப் அலுவலர் என்று பேசியதை நம்பி மும்பையைச் சேர்ந்த நபர் ஒருவர் 1.4 கோடி ரூபாயை இழந்திருக்கிறார். மோசடியில் ஈடுபட்ட நபர் பாதிக்கப்பட்டவருக்கு வாட்ஸ்அப்பில் இபிஎஃப்ஓ சம்மந்தப்பட்ட டாக்குமென்ட்டை அனுப்பியிருக்கிறார். அதனை நம்பி பாதிக்கப்பட்ட நபர் பணத்தை இழந்திருக்கிறார். இந்த மோசடி எப்படி நடந்தது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

EPFO : பிஎஃப் அட்வான்ஸ் தொகை குறைவாக கிடைப்பதற்கு காரணம் என்ன? எப்படி தவிர்ப்பது?

Understanding Your PF Claim : பணியாளர்கள் வருங்கால வைப்பு நிதி ஆணையம் ஊழியர்களுக்கு நிதி பாதுகாப்பை வழங்குகிறது. ஓய்வு காலத்தில் மட்டும் இல்லாமல், அவசர தேவைகளுக்கும் பணம எடுத்துக்கொள்ளலாம். ஆனால் சில நேரங்களில் நாம் கோரிய தொகையை விட குறைவாக கிடைக்கலாம். அதற்கான காரணம் குறித்து இந்த கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

PF Accounts Merge: உங்களிடம் பல பிஎஃப் கணக்குகள் இருக்கா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்!

PF Accounts Merge: ஒருவரிடம் பல பிஎஃப் கணக்குகள் இருந்தால் எதிர்காலத்தில் கணக்கை நிர்வகிப்பதில் சிக்கல் ஏற்படும். மேலும் அவசர தேவைகளின் போது பணம் எடுப்பதும் சவாலான பணியாக மாறும். இந்த கட்டுரையில் பல பிஎஃப் கணக்குகள் இருந்தால் அவற்றை எப்படி இணைப்பது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

EPFO : ஜூன் 30-க்குள் UAN ஆக்டிவேட் செய்ய வேண்டும்.. காலக்கெடுவை நீட்டித்த இபிஎஃப்ஓ!

EPFO Extends UAN Activation Deadline | உறுப்பினர்கள் தங்களது யுனிவர்சல் அக்கவுன்ட் எண்ணை ஆக்டிவேட் செய்ய வேண்டும் என்று ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், யுஏஎன் எண்ணை ஆக்டிவேட் செய்வதற்காக கால அவகாசத்தை ஜூன் 30, 2025 வரை நீட்டித்துள்ளது.