AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கொழுக்கட்டை வேண்டாம்… இந்த ஸ்பெஷல் மோதாக் செய்து பாருங்க!

Ukadiche Modak Recipe: விநாயகர் சதுர்த்திக்கு அரிசி மாவு, தேங்காய் மற்றும் வெல்லம் கொண்டு சுவையான உக்கடிச்சே மோதாக் தயாரிக்கலாம். தேங்காய்–வெல்லப் பூரணத்தை தயாரித்து, அரிசி மாவில் நிரப்பி பாரம்பரிய மோதாக் வடிவம் கொடுக்க வேண்டும். பின்னர் ஆவியில் வேகவைத்து விநாயகருக்கு நைவேத்தியமாக படைக்கலாம்.

கொழுக்கட்டை வேண்டாம்… இந்த ஸ்பெஷல் மோதாக் செய்து பாருங்க!
உக்கடிச்சே மோதாக் Image Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 12 Sep 2026 14:30 PM IST

விநாயகர் சதுர்த்திக்கு பாரம்பரிய முறையில் உக்கடிச்சே மோதாக் தயாரிக்கலாம். இதற்கு அரிசி மாவு, தேங்காய், வெல்லம், ஏலக்காய், உப்பு மற்றும் சிறிதளவு நெய் பயன்படுத்தப்படுகிறது. முதலில் தேங்காய் மற்றும் வெல்லத்தை சேர்த்து பூரணம் தயாரித்து ஆறவிட வேண்டும். கொதிக்கும் தண்ணீரில் அரிசி மாவை சேர்த்து மென்மையான மாவாக பிசைய வேண்டும். மாவை சிறிய உருண்டைகளாக செய்து கிண்ணம் போல் தட்டி அதன் நடுவில் பூரணத்தை வைக்க வேண்டும். பின்னர் ஓரங்களை மடித்து மோதாக் வடிவம் கொடுத்து ஆவியில் வேகவைக்க வேண்டும். மென்மையாக வெந்த மோதாக்களை விநாயகருக்கு நைவேத்தியமாக படைத்து குடும்பத்துடன் சுவைக்கலாம்.

தேவையான பொருட்கள்:

விநாயகர் சதுர்த்தி விழாவில் விநாயகருக்கு பிடித்தமான இனிப்புகளில் மோதாக் முக்கிய இடம் பெறுகிறது. அரிசி மாவை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் உக்கடிச்சே மோதாக், மென்மையான வெளிப்புறமும் இனிப்பான தேங்காய்–வெல்லப் பூரணமும் கொண்ட பாரம்பரிய உணவாகும். இதற்கு அரிசி மாவு, தண்ணீர், சிறிதளவு உப்பு மற்றும் நெய் ஆகியவை தேவையாகும்.

பூரணம் தயாரிப்பு:

முதலில் கடாயில் துருவிய தேங்காய் மற்றும் வெல்லத்தை சேர்த்து மிதமான தீயில் கிளற வேண்டும். வெல்லம் உருகி தேங்காயுடன் நன்றாக கலந்ததும் ஏலக்காய் தூள் சேர்த்து, கலவை அதிக ஈரப்பதமின்றி இருக்கும் வரை சமைக்க வேண்டும். பின்னர் இந்தப் பூரணத்தை ஆறவிடுவது அவசியம்.

மாவு பிசைதல்:

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் சிறிதளவு உப்பு மற்றும் நெய் சேர்க்க வேண்டும். கொதிக்கும் தண்ணீரில் அரிசி மாவை சிறிது சிறிதாக சேர்த்து கட்டிகள் இல்லாமல் கிளறி, அடுப்பை அணைத்து சிறிது நேரம் மூடி வைக்க வேண்டும். மாவு கை பொறுக்கும் சூட்டுக்கு வந்ததும் நன்றாக பிசைந்து மென்மையான பதத்திற்கு கொண்டு வர வேண்டும்.

Also Read: விநாயகர் சதுர்த்திக்கு கொழுக்கட்டையை இப்படி செய்து அசத்துங்க…!

மோதாக் வடிவமைத்தல்:

பிசைந்த மாவிலிருந்து சிறிய உருண்டைகளை எடுத்து கைகளால் மெதுவாக தட்டி கிண்ணம் போன்ற வடிவத்தில் செய்ய வேண்டும். அதன் நடுவில் தேங்காய்–வெல்லப் பூரணத்தை வைத்து, மாவின் ஓரங்களை மடித்து மேல்பகுதியில் அழகான மடிப்புகளுடன் மூடி மோதாக் வடிவம் கொடுக்கலாம்.

ஆவியில் வேகவைத்தல்:

தயாரான மோதாக்களை இட்லி பாத்திரம் அல்லது ஸ்டீமரில் வைத்து ஆவியில் வேகவைக்க வேண்டும். பொதுவாக சில நிமிடங்கள் ஆவியில் வேகவைத்த பிறகு, மோதாக் மென்மையாகவும் பளபளப்பாகவும் மாறும். பின்னர் அவற்றை எடுத்து சிறிது நெய் தடவி, விநாயகருக்கு நைவேத்தியமாக படைத்து குடும்பத்தினருடன் பகிர்ந்து சுவைக்கலாம்.

பொறுப்புத் துறப்பு: இத்தளத்தில் உள்ள லைப்ஸ்டைல், ஆரோக்கியம் மற்றும் உணவு சார்ந்த தகவல்கள் பொதுவான விழிப்புணர்விற்காக மட்டுமே; இவை மருத்துவ ஆலோசனையல்ல. இதில் உள்ள குறிப்புகளைப் பின்பற்றும் முன் தகுந்த நிபுணர் அல்லது மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.

Follow Us