சிதையும் தாய்மை: கர்ப்பிணிகளை அச்சுறுத்தும் ‘எடை பயம்’..!
Pregnancy and Weight Gain Fear: கர்ப்ப காலத்தில் உடல் எடை அதிகரிக்கும் என்ற அச்சத்தால் பல பெண்கள் 'ஈட்டிங் டிஸ்ஆர்டர்' எனப்படும் உணவுக் கோளாறால் பாதிக்கப்பட்டு, சத்தான உணவுகளை உட்கொள்ளத் தவறுகின்றனர். இதனால் தாய்க்கு இரத்த சோகை ஏற்படுவதோடு, வயிற்றில் வளரும் குழந்தைக்கு குறைந்த பிறப்பு எடை மற்றும் குறைப்பிரசவம் போன்ற தீவிர ஆபத்துகள் உண்டாகின்றன.
கர்ப்ப காலத்தில் உடல் எடை அதிகரித்துவிடும் என்ற தேவையற்ற அச்சம், பல பெண்களுக்கு ‘ஈட்டிங் டிஸ்ஆர்டர்’ எனப்படும் ஆபத்தான உணவுக் கோளாறை ஏற்படுத்துகிறது. சமூக ஊடகங்களில் சித்தரிக்கப்படும் போலி அழகியல் பிம்பங்களும், பிரபலங்களின் வாழ்க்கை முறையுமே கர்ப்பிணிகளுக்கு இத்தகைய மன அழுத்தத்தை உருவாக்குகின்றன. எடையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் பெண்கள் சத்தான உணவுகளைத் தவிர்ப்பதால், அவர்களின் உடலில் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடும் இரத்த சோகையும் ஏற்படுகின்றன. இந்த உணவுக் கட்டுப்பாடு தாயை மட்டுமின்றி, வயிற்றில் வளரும் சதை வளர்ச்சியையும் கடுமையாகப் பாதித்து குறைந்த பிறப்பு எடைக்கு வழிவகுக்கிறது. மேலும், இது குறைப்பிரசவம் போன்ற சிக்கல்களை உண்டாக்கி, பிரசவத்தின் போது தாயின் உயிரையும் ஆபத்தில் தள்ளக்கூடும். இத்தகைய பிரச்சனைகளில் இருந்து பெண்களை மீட்க ‘குழந்தைக்காகச் சாப்பிடு’ என மன உளைச்சல் தராமல், குடும்பத்தினர் பரிவோடு பேசி ஆதரவளிக்க வேண்டும்.
கர்ப்பகாலத்தில் அதிகரிக்கும் எடைக் கவலையும் உணவுக் கோளாறுகளும்
தாய்சேய் நலன் சார்ந்த காலகட்டத்தில், பெண்களுக்கு உடல் எடைக் கூடும் என்ற அச்சம் பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. சமூக ஊடகங்களில் பரவும் போலி அழகியல் பிம்பங்கள் மற்றும் பிரபலங்களின் வாழ்க்கை முறையைப் பார்த்து, பல கர்ப்பிணிகள் தங்கள் உடல் வடிவம் மாறிவிடுமோ என்று அஞ்சுகின்றனர். இதனால் ‘ஈட்டிங் டிஸ்ஆர்டர்’ (Eating Disorder) எனப்படும் ஆபத்தான உணவுக் கோளாறு பாதிப்புக்கு ஆளாகி, போதிய ஊட்டச்சத்து உணவுகளை உட்கொள்ளத் தயங்குகின்றனர்.
மறைந்திருக்கும் அறிகுறிகளும் கண்டறியும் வழிகளும்
இந்தக் கோளாறால் பாதிக்கப்பட்ட பெண்கள், உணவருந்திய பிறகு குற்ற உணர்ச்சிக்கு ஆளாகி, உணவைக் கடுமையாகத் தவிர்ப்பது அல்லது அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்வதில் ஈடுபடுகின்றனர். இயல்பாக கர்ப்ப காலத்தில் ஏற்படும் காலை நேர வாந்திக்கும், சுயதூண்டல் மூலம் எடுக்கும் செயற்கை வாந்திக்கும் உள்ள வேறுபாடுகளைக் கண்டறிவது அவசியமாகும். அடிக்கடி எடையைச் சரிபார்த்தல், நீர்ச்சத்து குறைபாடு, மற்றும் கடுமையான உணவுக் கட்டுப்பாடு ஆகியவை இதன் முக்கிய எச்சரிக்கை அறிகுறிகளாகும்.
தாய்க்கும் சேய்க்கும் ஏற்படும் சுகாதாரச் சவால்கள்
கர்ப்பிணிகள் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளைத் தவிர்ப்பதால், இரத்த சோகை மற்றும் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இது குழந்தையின் வளர்ச்சியை நேரடியாகப் பாதித்து, குறைந்த பிறப்பு எடை மற்றும் குறைப்பிரசவத்திற்கு வழிவகுக்கும். மேலும், பிரசவத்தின் போது ஏற்படும் அதிக இரத்த இழப்பைத் தாங்கும் சக்தியை தாய்மார்கள் இழப்பதுடன், அறுவை சிகிச்சைக்குப் பின் காயங்கள் ஆறிலும் தாமதம் ஏற்படும்.
Also Read: நாவூறும் ஆகஸ்ட் சமையல்: இணையத்தைக் கலக்கும் டாப் 10 ரெசிபிகள்!
குடும்பத்தின் ஆதரவும் மருத்துவ வழிகாட்டுதலும்
இப்பிரச்சனையிலிருந்து பெண்களை மீட்க, குடும்பத்தினரின் அன்பான அணுகுமுறையும் சமூகத்தின் புரிதலும் மிகவும் இன்றியமையாதது. கர்ப்பிணிகளைக் குற்றம் சாட்டாமல் அல்லது கட்டாயப்படுத்தாமல், அவர்களின் மனநிலையப் புரிந்துகொண்டு ஆதரவு அளிக்க வேண்டும். ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் மனநல ஆலோசகர்களின் சரியான வழிகாட்டுதலைப் பெறுவது, தாயின் மன ஆரோக்கியத்தையும் சேயின் உடலாரோக்கியத்தையும் உறுதியாகப் பேண உதவும்.
பொறுப்புத் துறப்பு: இத்தளத்தில் உள்ள லைப்ஸ்டைல், ஆரோக்கியம் மற்றும் உணவு சார்ந்த தகவல்கள் பொதுவான விழிப்புணர்விற்காக மட்டுமே; இவை மருத்துவ ஆலோசனையல்ல. இதில் உள்ள குறிப்புகளைப் பின்பற்றும் முன் தகுந்த நிபுணர் அல்லது மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.