Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மீண்டும் மீண்டும் உல்லாசத்திற்கு அழைத்த பெண்.. ஆத்திரத்தில் கல்லால் அடித்து கொலை செய்த இளைஞர்!

Bengaluru Woman Murdered by Lover | பெங்களூரில் ஃபேஸ்புக்கில் அறிமுகமான இளைஞருடன் சுற்றுலா சென்ற பெண் அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இந்த நிலையில், இளைஞரை அந்த பெண் மீண்டும் மீண்டும் உல்லாசத்திற்கு அழைத்த நிலையில், ஆத்திரமடைந்த இளைஞர் அந்த பெண்ணை கல்லால் தலையில் தாக்கி கொலை செய்துள்ளார்.

மீண்டும் மீண்டும் உல்லாசத்திற்கு அழைத்த பெண்.. ஆத்திரத்தில் கல்லால் அடித்து கொலை செய்த இளைஞர்!
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Updated On: 26 Jun 2025 07:54 AM

பெங்களூரு, ஜூன் 26 : பெங்களூரில் (Bengaluru) ஃபேஸ்புக் (Facebook) மூலம் இளைஞருடன் பழகிய பெண் அவருடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண் இளைஞருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த நிலையில், மீண்டும் மீண்டும் இளைஞரை உல்லாசத்திற்கு அழைத்ததால் ஆத்திரமடைந்த அந்த நபர் பெண்ணை கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், திருமணத்தை மீறிய உறவில் இருந்த பெண் காதலரால் கொலை செய்யப்பட்டது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஃபேஸ்புக் மூலம் பழக்கம் – இளைஞருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த பெண்

கர்நாடகா மாநிலம், ஹாசன் மாவட்டம், ஹொசகொப்பலு கிராமத்தை சேர்ந்தவர் பிரீத்தி. 38 வயதாகும் இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள்
உள்ளனர் . எப்போதும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என்று சமூக ஊடகங்கள் மூழ்கி கிடக்கும் பிரீத்திக்கு, ஃபேஸ்புக் மூலம் இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் ஒரு சில நாட்களில் திருமணத்தை மீறிய உறவாக மாறி உள்ளது. அதாவது ஜூன் 19, 2025 அன்று ஃபேஸ்புக் பயன்படுத்திக் கொண்டிருந்த பிரீத்தி, புனித் என்ற இளைஞர்களுடன் பேச தொடங்கியுள்ளார். இரவு முழுவதும் இருவரும் பேசிக்கொண்டிருந்த நிலையில், அடுத்த நாள் காலை அதாவது ஜூன் 20, 2025 அன்று புனித், பிரீத்தியை செல்போனில் தொடர்ப்புக்கொண்டு பேசியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஜூன் 21, 2025 அன்று புனித்தை சந்திப்பதற்காக பிரீத்தி அழைத்துள்ளார். அவரது அழைப்பின் பேரில், ஜூன் 22, 2002 அன்று இருவரும் நேரில் சந்தித்துக் கொண்டுள்ளனர். அப்போது தன்னை காரில் எங்காவது தூரமாக அழைத்துச் செல்லும்படி பிரீத்து கேட்டுள்ளார். இதன் காரணமாக புனித், பிரத்தியை மைசூருக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்த இருவரும், அருகில் இருந்த விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். அப்போது இருவரும் உல்லாசமாக இருந்த நிலையில், ப்ரீத்தி புனித்திடம் மீண்டும் உல்லாசமாக இருப்பதற்கு அழைத்துள்ளார். ஆனால் புனித் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

மீண்டும் மீண்டும் உல்லாசத்திற்கு அழைத்த பெண் – கொலை செய்த இளைஞர்

பிரீத்தி தன்னை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து செல்லுமாறு புனித்திடம் கூறியுள்ளார். அதன்படி அவர் பிரீத்தியை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது பிரீத்தி மீண்டும்  உல்லாசமாக இருப்பதற்காக அழைத்துள்ளார். இதனால் ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த புனித், பிரீத்தியை சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த நிலையில், புனித் பிரீத்தியை தலையில் கல்லால் தாக்கிய நிலையில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதனால் பிரீத்தியின் உடலை காரில் எடுத்துச் சென்று அதனை அருகில் இருந்த விவசாய தோட்டத்தில் புனித் வீசியுள்ளார். இதற்கிடையே வெகு நேரமாகியும் பிரித்தி வீடு திரும்பாததால், அவரது செல்போனுக்கு பிரீத்தியின் கணவர் போன் செய்துள்ளார். அந்த அழைப்பை ஏற்ற புனித் தன்னை ஒரு டாக்ஸி டிரைவர் என்றும், பிரீத்தி ஃபோனை காரில் மறந்து வைத்துவிட்டு சென்றதாகவும் கூறியுள்ளார். இந்த நிலையில், பிரீத்தியின் கொலை குறித்து தெரிய வந்த போலீசார் தப்பித்து ஓடிய புனித்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.