AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சர்க்கரை இறக்குமதி விதிகளில் மாற்றம்: இரண்டு மாதங்களுக்குள் சுத்திகரித்து விற்பனை செய்ய உத்தரவு..

வியாபாரிகள் மற்றும் மொத்த நுகர்வோரின் ஊக அடிப்படையிலான கொள்முதல், எதிர்பார்த்ததைவிட குறைவான உற்பத்தி உள்ளிட்ட காரணங்களால் சமீபத்திய விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக ISMA தலைவர் நிரஜ் ஷிர்காவ்கர் தெரிவித்துள்ளார். அரசுத் தரவுகளின்படி, ஒரு கிலோ சர்க்கரையின் சராசரி சில்லறை விலை ரூ.63.05 ஆக உயர்ந்துள்ளது. ஒரு மாதத்திற்கு முன்பு இது ரூ.48.73 ஆக இருந்தது. இதன்படி, ஒரு மாதத்தில் சர்க்கரை விலை சுமார் 29 சதவீதம் உயர்ந்துள்ளது.

சர்க்கரை இறக்குமதி விதிகளில் மாற்றம்: இரண்டு மாதங்களுக்குள் சுத்திகரித்து விற்பனை செய்ய உத்தரவு..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 25 Aug 2026 19:28 PM IST

ஆகஸ்ட் 25, 2026: சர்க்கரை விலை உயர்ந்து வரும் நிலையில், TRQ திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்படும் கச்சா சர்க்கரைக்கான விதிமுறைகளில் மத்திய அரசு மாற்றம் செய்துள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் கச்சா சர்க்கரையை வெள்ளை அல்லது சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையாக மாற்றி, பில் ஆஃப் என்ட்ரி தாக்கல் செய்த நாளிலிருந்து இரண்டு மாதங்களுக்குள் உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்ய வேண்டும்.

சர்க்கரை இறக்குமதியில் முக்கிய மாற்றங்கள்:

இந்த மாற்றம், ஆகஸ்ட் 20, 2026 அன்று வெளியிடப்பட்ட பொது அறிவிப்பு எண் 27/2026-2027-க்கான திருத்த அறிவிப்பின் மூலம் வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநரகம் (DGFT) அறிவித்துள்ளது.

முன்னதாக, இறக்குமதி செய்யப்படும் கச்சா சர்க்கரையை சுத்திகரித்து, 2026 அக்டோபர் 31ஆம் தேதிக்குள் உள்நாட்டு சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வர வேண்டும் என விதிமுறை இருந்தது. தற்போது, ஒரே குறிப்பிட்ட தேதியை அடிப்படையாகக் கொள்ளாமல், ஒவ்வொரு சரக்கிற்கும் தனித்தனியாக இரண்டு மாத காலக்கெடு கணக்கிடப்படும்.

மேலும் படிக்க: இந்தியாவின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் புதிய புரட்சி: UPI-யின் 10 ஆண்டு பயணம்

இதனிடையே, உள்நாட்டில் சர்க்கரை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நாட்டில் சர்க்கரை தட்டுப்பாடு இல்லை என்றும், வரும் நாட்களில் சில்லறை விலை குறைய வாய்ப்புள்ளதாகவும் இந்திய சர்க்கரை மற்றும் பயோ-எனர்ஜி உற்பத்தியாளர்கள் சங்கம் (ISMA) தெரிவித்துள்ளது.

வரும் நாட்களில் சர்க்கரை விலை குறைய வாய்ப்பு:

வியாபாரிகள் மற்றும் மொத்த நுகர்வோரின் ஊக அடிப்படையிலான கொள்முதல், எதிர்பார்த்ததைவிட குறைவான உற்பத்தி உள்ளிட்ட காரணங்களால் சமீபத்திய விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக ISMA தலைவர் நிரஜ் ஷிர்காவ்கர் தெரிவித்துள்ளார்.

அரசுத் தரவுகளின்படி, ஒரு கிலோ சர்க்கரையின் சராசரி சில்லறை விலை ரூ.63.05 ஆக உயர்ந்துள்ளது. ஒரு மாதத்திற்கு முன்பு இது ரூ.48.73 ஆக இருந்தது. இதன்படி, ஒரு மாதத்தில் சர்க்கரை விலை சுமார் 29 சதவீதம் உயர்ந்துள்ளது.

மேலும் படிக்க: தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்த காவிரி மேலாண்மை ஆணையம்? என்ன நடந்தது.

சர்க்கரை இறக்குமதிக்கு அனுமதி மற்றும் கையிருப்பு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், வரும் நாட்களில் விலை குறைய வாய்ப்புள்ளதாக ISMA தெரிவித்துள்ளது.

Follow Us