Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஹனிமூனில் கணவனை காதலர் உதவியுடன் கொலை செய்த மனைவி – உண்மையில் நடந்தது என்ன?

Meghalaya Honeymoon Murder: மத்திய பிரதேசத்தை சேர்ந்த ராஜா ரகுவன்ஷி மற்றும் சோனம் ஆகியோர் திருமணம் முடிந்து ஹனிமூனுக்காக கடந்த மே 20, 2025 அன்று மேகாலாயா சென்றிருக்கின்றனர். இந்த நிலையில் மர்ம நபர்களால் ராஜா ரகுவன்ஷி கொலை செய்யப்பட்டிருக்கிறார். விசாரணையில் சோனம் தனது காதலருடன் இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றியிருப்பது தெரியவந்திருக்கிறது. இந்த சம்பவம் குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

ஹனிமூனில் கணவனை காதலர் உதவியுடன் கொலை செய்த மனைவி – உண்மையில் நடந்தது என்ன?
ராஜா ரகுவன்ஷி - சோனம்
karthikeyan-s
Karthikeyan S | Updated On: 10 Jun 2025 17:43 PM

மத்தியப் பிரதேசத்தை (Madhya Pradesh) சேர்ந்த ராஜா ரகுவன்ஷி மற்றும் சோனம் தம்பதியினருக்கு கடந்த மே 15, 2025 அன்று திருமணம் நடைபெற்றிருக்கிறது, திருமணம் முடிந்த கையோடு, இருவரும் கடந்த மே 20,2025 அன்று மேகாலயாவுக்கு (Meghalaya), ஹனி மூன் சென்றனர். அங்கு மூன்று நாட்கள் புதுமண தம்பதியினர் இருவரும் மேகாலயா பகுதிகளின் அழகை ரசித்து வந்திருக்கிறார்கள். இந்த நிலையில் கடந்த மே 23, 2025 அன்று சோனம் தனது கணவரிடம் புகைப்படம் எடுக்கலாம் என்று சொல்லி வனப்பகுதிக்கு அழைத்து சென்றிருக்கிறார். அப்போது எதிர்பாராதவிதமாக 3 பேர் ராஜா ரகுவன்ஷியைத் தாக்கி கொலை செய்திருக்கின்றனர். ராஜா ரகுவன்ஷி மற்றும் சோனம் ஆகிய இருவரும் காணவில்லை என காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 2 ஆம் தேதி ராஜாவின் உடல் பள்ளத்தாக்கில் கிடைத்திருக்கிறது.

ராஜா கத்தி போன்ற கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டிருக்கிறார். அவரது உடலை பிரேத பரிசோதனை செய்தபோது, அவரை தலையின் முன்பும் பின்பும் தாக்கி கொலை செய்திருப்பது தெரியவந்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து சோனம் குறித்து விசாரித்த போது அவர் கடந்த ஜூன் 8, 2025 அன்று உத்தரப் பிரதேசத்தில் உள்ள காசிபூரில் உள்ள ஒரு தாபாவில் மயங்கிய நிலையில் கிடந்திருக்கிறார். அவரை மீட்ட கவல்துறையினர் அருகில் உள்ள காசிப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருக்கின்றனர்.

சோனமை விசாரணைக்காக மேகாலயா அழைத்து செல்லும் காவல்துறையினர்

 

காவல்துறையினரின் விசாரணையில் சிக்கிய சோனம்

இந்த நிலையில் குணமடைந்த சோனமிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது, யாரோ தன்னை மயக்கமடைய செய்து இங்கே கொண்டு வந்தார்கள் என தெரிவித்திருக்கிறார். இது காவல்துறையினரின் சந்தேகத்தை மேலும் அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில் காவல்துறையினரின் தீவிர விசாரணையில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டிருக்கிறார்.

உண்மையில் நடந்தது என்ன?

கடந்த மே 20, 2025 அன்று மேகாலயாவுக்கு ராஜா ரகுவன்ஷி மற்றும் சோனம் ஹனி மூன் சென்ற போது சோனமின் காதலர் ராஜ் குஷ்வாஹா கூலிப்படையைச் சேர்ந்த 3 பேரை ராஜாவை கொலை செய்வதற்காக அனுப்பியிருக்கிறார். இதற்கு சோனமும் உடந்தையாக இருந்திருக்கிறார். இந்த நிலையில் மேகாலயா வந்த 3 பேரும் ஆன்லைனில் கத்தியை ஆர்டர் செய்து வாங்கியிருக்கின்றனர். பின்னர் திட்டமிட்டபடி சோனம் தனது கணவர் ராஜாவை வனப்பகுதிக்குள அழைத்து வர, அவரை மூன்று பேரும் சேர்ந்து கொலை செய்திருக்கின்றனர்.

காவல் துறையினரின் விசாரணையில் இந்த உண்மை தெரியவந்திருக்கிறது. இதனையடுத்து சோனம், அவரது காதலர் ராஜ் குஷ்வாஹா மற்றும் 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

உடனடியாக பாஸ்போர்ட் வேண்டுமா? தட்கல் பாஸ்போர்ட் மூலம் பெறலாம்!
உடனடியாக பாஸ்போர்ட் வேண்டுமா? தட்கல் பாஸ்போர்ட் மூலம் பெறலாம்!...
நிறைவடைந்தது விஷ்ணு விஷாலின் இரண்டு வானம் படத்தின் ஷூட்டிங்...
நிறைவடைந்தது விஷ்ணு விஷாலின் இரண்டு வானம் படத்தின் ஷூட்டிங்......
ஷ்ரேயாஸ் ஐயர் ஒதுக்கப்பட வேண்டிய வீரர் அல்ல - சவுரவ் கங்குலி
ஷ்ரேயாஸ் ஐயர் ஒதுக்கப்பட வேண்டிய வீரர் அல்ல - சவுரவ் கங்குலி...
Google Pay, Paytm யூஸ் பண்றீங்களா? அப்போ இத தெரிஞ்சுக்கோங்க!
Google Pay, Paytm யூஸ் பண்றீங்களா? அப்போ இத தெரிஞ்சுக்கோங்க!...
தொடங்கியது ஷூட்டிங்... போஸ்டர் வெளியிட்ட சூர்யா 46 படக்குழு!
தொடங்கியது ஷூட்டிங்... போஸ்டர் வெளியிட்ட சூர்யா 46 படக்குழு!...
தோளில் துண்டு போடும் போலி விவசாயி நான் இல்லை - முதல்வர் ஸ்டாலின்
தோளில் துண்டு போடும் போலி விவசாயி நான் இல்லை - முதல்வர் ஸ்டாலின்...
கொடைக்கானலில் இப்படி ஒரு இடம் இருக்கிறதா? என்ன இடம் அது?
கொடைக்கானலில் இப்படி ஒரு இடம் இருக்கிறதா? என்ன இடம் அது?...
”எங்க வீட்டுப்பையன் விஜய்" பிரேமலதா விஜயகாந்த் பேச்சு
”எங்க வீட்டுப்பையன் விஜய்
மிதுன ராசியில் குரு பகவான்.. இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட மழை!
மிதுன ராசியில் குரு பகவான்.. இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட மழை!...
இரண்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. எந்தெந்த பகுதிகளில்?
இரண்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. எந்தெந்த பகுதிகளில்?...
லோகேஷ் கனகராஜின் சினிமாட்டிக் யுனிவர்ஸில் இணையும் அனுஷ்கா ஷெட்டி?
லோகேஷ் கனகராஜின் சினிமாட்டிக் யுனிவர்ஸில் இணையும் அனுஷ்கா ஷெட்டி?...