Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

13 ஆண்டுகளை நிறைவு செய்தது தளபதி விஜயின் துப்பாக்கி படம்

13 Years Of Thuppakki Movie: நடிகர் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் துப்பாக்கி. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 13 ஆண்டுகள் நிறைவடைந்ததைப் படக்குழு தற்போது பதிவுகளை வெளியிட்டு கொண்டாடி வருகின்றது.

13 ஆண்டுகளை நிறைவு செய்தது தளபதி விஜயின் துப்பாக்கி படம்
துப்பாக்கி படம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 13 Nov 2025 17:26 PM IST

தமிழ் சினிமாவில் கடந்த 13-ம் தேதி நவம்பர் மாதம் 2012-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகரக்ளிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது துப்பாக்கி படம். மேலும் இந்தப் படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் எழுதி இயக்கிய இந்தப் படத்தில் தளபதி விஜய் (Thalapathy Vijay) நாயகனாக நடித்து இருந்தார். இவருக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நாயகியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் சத்யன், வித்யுத் ஜம்வால், ஜெயராம், மனோபாலா, ஜாகீர் உசேன், ரனீஷ், மீனாட்சி, சங்கர நாராயணன், தீப்தி நம்பியார், அனுபமா குமார், கவுதம் குருப், எம்டி ஆசிஃப், சஞ்சனா, மங்கள ராதாகிருஷ்ணன், அக்ஷரா கவுடா, பிரயாஸ் மான், பிரசாந்த் நாயர், ஏ ஆர் முருகதாஸ் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.

இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான வி கிரியேஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளர் கலைபுலி எஸ் தாணு இந்தப் படத்தை தயாரித்து இருந்தார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருந்தார். படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியகி இன்றுடன் 13 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் படத்தின் தயாரிப்பாளர் தாணு எக்ஸ் தள பதிவை வெளியிட்டு இருந்தார்.

விஜயின் துப்பாக்கி படத்தின் கதை என்ன?

இராணுவத்தில் பணியாற்றும் விஜய் ஒவ்வொரு முறை விடுமுறையில் ஊருக்கு வரும் போதும் தனது காவல்துறை நண்பன் சத்யனுடன் சென்று பல வழக்குகளின் குற்றவாளிகளைப் பிடிக்க உதவி செய்கிறார். அதன்படி விடுமுறைக்கு ஒருநாள் வரும் போது அவருக்கு திருமணத்திற்கு காஜல் அகர்வாலை பெண் பார்க்க செல்கிறார். அவர் மறுத்துவிட நண்பன் சத்யனுடன் சுற்றித் திரிகிறார்.

இப்படி சத்யன் உடன் சுற்றித் திரியும் போதே மீண்டும் காஜல் அகர்வாலுக்கு விஜய் மீது காதல் ஏற்பட்டது. இந்த நிலையில் சத்யன் கூடு வழக்குகளை பார்த்துக்கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக ஒரு தீவிரவாத கும்பல் தொடர்பான வழக்கை கண்டுபிடிக்கிறார். அதனைத் தொடர்ந்து எப்படி அந்த வழக்கை கையாண்டார் என்பதே படத்தின் கதை.

Also Read… சிலம்பரசனின் அரசன் படம் குறித்து வைரலாகும் அப்டேட் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

தயாரிப்பாளர் கலைபுலி தாணு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… பிக்பாஸ் கொளுத்திப்போட்ட டாஸ்க்… சரவெடியாய் வெடிக்கும் போட்டியாளர்கள்