Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சிம்புவின் நடிப்பில் அரசன் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது

Arasan Movie Update: நடிகர் சிலம்பரசன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் அரசன். இந்தப் படத்தில் நடிகர் சிலம்பரசன் உடன் இணைந்து முன்னணி நடிகர்கள் பலர் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் படத்தின் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.

சிம்புவின் நடிப்பில் அரசன் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது
அரசன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 23 Dec 2025 17:31 PM IST

நடிகர் சிலம்பரசன் நடிப்பில் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் படம் அரசன். இந்தப் படத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்கி உள்ளார். இவர் முன்னதாக இயக்கிய விடுதலை பாகம் 2 படத்தினை இயக்கி இருந்தார். இந்தப் படதில் நடிகர்கள் சூரி மற்று விஜய் சேதுபதி ஆகியோர் முன்னணி வேடத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் நடிகர் சூர்யாவின் நடிப்பில் வாடிவாசல் படத்தினை இயக்க உள்ளதாக இருந்த நிலையில் பல பிரச்னைகள் காரணமாக படத்தினை ஒத்தி வைத்தனர். இதனைத் தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் நடிகர் சிம்புவை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி ரசிகரக்ளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தொடர்ந்து இந்தப் படம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் படத்தின் அறிமுக வீடியோவில் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் நடித்து இருந்தார். இது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தில் நடிகர் சிலம்பரசன் உடன் இணைந்து நடிகர்கள் பலர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வந்தது.

அரசன் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது:

இந்த நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து கோவில்பட்டியில் அரசன் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்றது. இதனைத் தொடர்ந்து படத்தின் இந்தப் படப்பிடிப்புத் தளத்தில் நடிகர் விஜய் சேதுபதி இருந்த புகைப் படங்களும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Also Read… ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் வோர்ல்ட் ஆஃப் பராசக்தி கண்காட்சி…!

இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:

Also Read… ஜெயிலர் 2 படத்தில் ரஜினியை அழகாக பயன்படுத்தியிருக்கார் நெல்சன் – சிவராஜ்குமார்