Ravi Mohan : ஆர்யாகிட்ட பார்த்து நான் வியந்த அந்த விஷயம்.. ரவி மோகன் சொன்ன உண்மை!
Ravi Mohan About Aryas Attitude : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் ரவி மோகன். மேலும் இவர் தற்போது திரைப்பட தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ளார். இந்நிலையில், இவர் முன்னதாக பேசிய நேர்காணல் ஒன்றில் நடிகர் ஆர்யாவைப் பார்த்து ஆச்சர்யப்பட்ட விஷயம் பற்றிப் பேசியுள்ளார். அது குறித்துப் பார்க்கலாம்.

நடிகர் ரவி மோகன் (Ravi Mohan) தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களைக் கொடுத்தவர்களின் ஒருவராக இருந்து வருகிறார். இவர் கடந்த 2003ம் ஆண்டு வெளியான ஜெயம் (Jayam) என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நுழைந்தார். இந்த படத்தை ரவி மோகனின் சகோதரர் மோகன் ராஜா (Mohan Raja) இயக்கியிருந்தார். இந்த படத்தில் ரவி மோகனுக்கு ஜோடியாக நடிகை சதா நடித்து அசத்தியிருந்தார். தனது முதல் படமான ஜெயம் மூலம் மிகவும் பிரபலமானார் ரவி மோகன். அதன் காரணமாக ரவி என்ற இவரின் பெயரை மக்கள் படத்துடன் ஜெயம் ரவி என்று அழைத்துவந்தார். மேலும் கடந்த 2024ம் ஆண்டு இறுதியில்தான் ரவி மோகன் அறிவிப்பை வெளியிட்டு தன்னை ரவி அல்லது ரவி மோகன் என்று அழைக்கும்படி கூறியிருந்தார்.
பல திரைப்பட இயக்குநர்களுடன் பணியாற்றியிருக்கும் நடிகர் ரவி மோகன், தற்போது படங்களைத் தயாரிப்பதில் இறங்கியுள்ளார். ரவி மோகன் ஸ்டூடியோஸ் (Ravi Mohan Studios) என்று புதிய ப்ரொடக்ஷ்ன் நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் தனது ப்ரோகோட் என்ற படத்தை தயாரித்து வருகிறார்.




தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகிவருகிறார் நடிகர் ரவி மோகன். இந்நிலையில், இவர் முன்னதாக ஒரு நேர்காணலில் பேசியிருந்தார். அதில் நடிகர் ஆர்யாவிடம் தான் பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்ட விஷயம் குறித்து பேசியுள்ளார். அது பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.
ரவி மோகனின் இன்ஸ்டாகிராம் பதிவு :
View this post on Instagram
ஆர்யாவைப் பார்த்து ரவி மோகன் வியந்த சம்பவம் :
அந்த நேர்காணலில் பேசிய நடிகர் ரவி மோகன், ஆர்யாவை பொறுத்த வரையிலும் மிகவும் ஆட்டிடியூட் நபர். ஒருநாள் நானும் நடிகர் சந்தனமும் எனது கேரவன் வேனிலிருந்தோம். திடீரென நடிகர் ஆர்யா சொல்லாமல் கொள்ளாமல் எனது கேரவனுக்கு உள்ளே வந்தார். திடீரென சந்தானத்திடம் பேச ஆரம்பித்தார் ஆர்யா. அதன் பிறகுதான் என்னிடம் பேசினார். அப்போது என்ன நடந்தது என்றால், ஆர்யா மற்றும் சந்தானம் இருவரும், “நான் அப்போவே சொன்னேன் பார்த்தியா அந்த படம் ஓடாது” என்று எனப் பேசிக்கொண்டிருந்தனர்.
அவர்கள் வேறு எந்த படத்தை பற்றியும் பேசவில்லை. அவர்கள் இருவரும் இணைந்து நடித்த படத்தை பற்றியே அவ்வாறு பேசி சிரித்துக்கொண்டிருந்தனர். அப்போது ஆர்யாவிடம், என்ன பா உன் படம் சரியா போகல என்று, கேட்டேன். அதற்கு ஆர்யாவும் “அது அவ்வளவுதான். ஒரு படம் போச்சுன்னா அடுத்தடுத்து போய்க்கொண்டே இருக்கனும்” என்று கூறினார். அது தான் நான் ஆர்யாவிடம் பார்த்து மிகவும் வியந்த விஷயம் என்று நடிகர் ரவி மோகன் கூறியிருந்தார்.