Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Nagarjuna : குபேரா படத்தில் கதாநாயகனாக உணர்ந்தேன்.. படம் முழுக்க என்னைச் சுற்றித்தான் இருந்தது.. நாகார்ஜுனா அதிரடி பேச்சு!

Nagarjuna Talk About Deepaks Character In Kuberaa : டோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் நாகார்ஜுனா. இவர் சமீபத்தில் நடிகர் தனுஷின் முன்னணி நடிப்பில் வெளியான குபேரா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். குபேரா படத்தின் வெளியீட்டைத் தொடர்ந்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அவர் இப்படத்தில் ஹீரோவாக உணர்ந்ததாகக் கூறியுள்ளார்.இது தனுஷ் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

Nagarjuna : குபேரா படத்தில் கதாநாயகனாக உணர்ந்தேன்.. படம் முழுக்க என்னைச் சுற்றித்தான் இருந்தது.. நாகார்ஜுனா அதிரடி பேச்சு!
நடிகர் நாகார்ஜுனா Image Source: X
barath-murugan
Barath Murugan | Published: 21 Jun 2025 18:50 PM

நடிகர் தனுஷ்  (Dhanush)  தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவரின் அருமையான நடிப்பில் கடந்த 2025, ஜூன் 20ம் தேதியில் வெளியான திரைப்படம்தான் குபேரா (Kuberaa) . இந்த படமானது தெலுங்கு மற்றும் தமிழ் போன்ற மொழிகளை மையமாகக் கொண்டு உருவாகியிருந்தது. இந்த படத்தை தெலுங்கு திரைப்பட இயக்குநர் சேகர் கம்முலா (Sekhar Kammula)  இயக்கியிருந்தார். இந்த படத்தில் தனுஷுடன் நடிகர்கள் நாகார்ஜுனா (Nagarajuna) , ஜிம் ஷார்ப் மற்றும் ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna) எனப் பல நடிகர்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது முழுக்க மாறுபட்ட வித்தியாசமான கதைகளுடன் வெளியாகியிருந்தது.

இந்த படத்தில் நடிகர் தனுஷ் பிச்சைக்காரன் வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார். இப்படமானது திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது. இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டைத் தொடர்ந்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நாகார்ஜுனா, குபேரா படத்தில் தான் கதாநாயகனாக உணர்ந்ததாகப் பேசியுள்ளார். இது தனுஷின் ரசிகர்கள் மத்தியில் நெருடலை ஏற்படுத்தி வருகிறது.

குபேரா படத்தில் தனது கதாபாத்திரம் பற்றி நாகார்ஜுனா பேச்சு :

குபேரா படமானது கடந்த 2025, ஜூன் 20ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகி வருகிறது. இந்த படத்தின் ரிலீஸை தொடர்ந்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் நாகார்ஜுனா, இந்த படத்தில் தனது தீபக் கதாபாத்திரம்தான் ஹீரோவாக படத்தில் தெரிகிறது என்பதைப் போலப் பேசியுள்ளார். அதில் அவர் ” இந்த படத்தில் நான் ஹீரோவாக உணர்ந்தேன், குபேரா படத்தில் எனது கதாபாத்திரம்தான் மெயின் கேரக்டர். இந்த படத்தின் கதையானது எனது கதாபாத்திரமான தீபக் என்ற கேரக்ட்டரையே சுற்றி இருக்கிறது.

இந்த குபேரா படமானது ஆரம்பம் முதல் இறுதி வரை முழுவதும் தீபக் திரைப்படம்தான். சேகர் கம்முலா அந்த அளவிற்கு இப்படத்தைக் கொடுத்திருக்கிறார்” என நடிகர் நாகார்ஜுனா ஓபனாக பேசியுள்ளார். அவரது அந்த பேச்சு தனுஷின் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படமானது தனுஷின் திரைப்படம் என்ற நிலையில், நாகார்ஜுனா எவ்வாறு இப்படி பேசலாம் என ரசிகர்கள் தங்களின் கருத்துக்களைக் கூறி வருகின்றனர்.

நாகார்ஜுனா பேசிய வீடியோ :

நாகார்ஜுனாவின் கூலி :

நடிகர் நாகார்ஜுனா குபேரா படத்தைத் தொடர்ந்து தமிழில் கூலி என்ற படத்தில் மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் . நடிகர் ரஜினிகாந்த்தின் முன்னணி நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் நடிகர் நாகார்ஜுனா வில்லனாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்த நிலையில், வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதியில் பான் இந்திய மொழிகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.