Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அந்த மாதிரியான காட்சிகளில் நடிப்பது எனக்குஅசௌகரியமாக இருக்கும் – நடிகை மதுபாலா ஓபன் டாக்

Madhu Bala: நடிகை மதுபாலா தமிழ் சினிமாவில் விரல் விட்டு எண்ணும் அளவில் படங்களில் நடித்து இருந்தாலும் அவருக்கு என ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இந்த நிலையில் நடிகை மதுபாலா சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது.

அந்த மாதிரியான காட்சிகளில் நடிப்பது எனக்குஅசௌகரியமாக இருக்கும் – நடிகை மதுபாலா ஓபன் டாக்
நடிகை மதுபாலாImage Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 19 Jun 2025 12:26 PM

தமிழ் சினிமாவில் 90களில் நாயகியாக அறிமுகம் ஆகி தனக்கு என ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகை மதுபாலா (Actress Madhoo). தமிழில் இயக்குநர் பாலசந்தர் இயக்கத்தில் நடிகர் மம்முட்டி நடிப்பில் வெளியான அழகன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார் மதுபாலா. அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள் மணிரத்னம் (Director Maniratnam), சங்கர் என பல முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றி உள்ளார். இவரது நடிப்பில் வெளியான ரோஜா, ஜென்டில் மேன் ஆகிய படங்கள் தமிழ் சினிமாவில் உச்சத்திற்கு கொண்டு சென்றது. தமிழ் சினிமாவில் நாயகியா அறிமுகம் ஆகி இருந்தாலும் தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, கன்னடா, இந்தி, மலையாளம் என பான் இந்திய மொழிகளில் தொடர்ந்து நடித்து வந்தார்.

இந்த நிலையில் தற்போது பான் இந்திய மொழிகளிலும் படங்களிலும், இணையதள தொடர்களிலும் தொடர்ந்து முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நடிகை மதுபால சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சினிமாவில் அந்தரங்க காட்சிகளில் நடிப்பது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அது தற்போது ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகின்றது.

அந்தரங்க காட்சிகளில் நடிப்பது குறித்து பேசிய நடிகை மதுபாலா:

அதன்படி நடிகை மதுபாலா பேசியதாவது, நான் மிகவும் பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் பிறந்தவள். அதனால் அந்த மாதிரியான சில நெருக்கமான காட்சிகளில் நடிப்பது எனக்கு மிகவும் அசௌகரியமாக இருக்கும். இதனாலே பட படங்களின் வாய்பை நான் நிராகரித்து விட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஒரு படத்தில் நடிக்க தொடங்குவதற்கு முன்பு நெறுக்கமான காட்சி இருக்கு என்று கூறாமால் படப்பிடிப்பு தளத்தில் முத்தக் காட்சி அதுவும் உதட்டு முத்த காட்சியில் நடிக்க வேண்டும் என்று கூறினார்கள். நான் மறுத்ததும் என்னை சமாதானம் செய்து படத்திற்கு அந்த காட்சி எவ்வளவு முக்கியம் என்று கூறி என்னை நடிக்க வைத்தார்கள். ஆனால் அந்தக் காட்சியில் நடிக்கும் போது மிகவும் அசௌகரியமாக உணர்ந்தேன் என்று நடிகை மதுபாலா அந்தப் பேட்டியில் பேசியது தற்போது ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகின்றது.

நடிகை மதுபாலா வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Actress FACECARD (@actressfacecard)

தொடர்ந்து பான் இந்திய மொழிகளில் நடித்து வரும் நடிகை மதுபாலா தற்போது பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள கண்ணப்பா படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார், இந்தப் படத்தில் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.