Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வெத நான் போட்டது… 33 ஆண்டுகளை நிறைவு செய்தது தேவர் மகன் படம்

33 Years Of Thevar Magan Movie: தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற படம் தேவர் மகன். இந்தப் படம் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் பலருக்கும் ஒரு பாடப் புத்தம் போல என பல பிரபலங்கள் பேட்டிகளில் தொடர்ந்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

வெத நான் போட்டது… 33 ஆண்டுகளை நிறைவு செய்தது தேவர் மகன் படம்
தேவர் மகன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 25 Oct 2025 14:33 PM IST

உலக நாயகன் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகர் கமல் ஹாசன் (Actor Kamal Haasan) நடிப்பில் கடந்த 25-ம் தேதி அக்டோபர் மாதம் 1992-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் தேவர் மகன். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியகாவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை இயக்குநர் பரதன் இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்திற்கு நடிகர் கமல் ஹாசன் திரைக்கதை எழுதி இருந்தார். படத்தில் நடிகர் கமல் ஹாசன் நாயகனாக நடித்து இருந்த நிலையில் இவருடன் இணைந்து நடிகர்கள் சிவாஜி கணேசன், ரேவதி, கௌதமி, நாசர், காக்கா ராதாகிருஷ்ணன், வடிவேலு, கல்லபார்ட் நடராஜன், சங்கிலி முருகன், தலைவாசல் விஜய், எஸ்.என்.லட்சுமி, காந்திமதி, ரேணுகா, மதன் பாப், அஜய் ரத்னம், நீலிமா ராணி என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.

படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பாக நடிகர் கமல் ஹாசன் தயாரித்து இருந்தார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து இருந்தார். படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 33 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை படக்குழு மற்றும் ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர்.

33 ஆண்டுகளை நிறைவு செய்தது தேவர் மகன் படம்:

தேவர் சமூகத்தை சார்ந்த சிவாஜி கணேசனின் இளைய மகனாக நடிகர் கமல் ஹாசன் நடித்து இருப்பார். ஊரைவிட்டு வெளியே சென்று பெரிய படிப்பு படித்த அவர் பிசினஸ் செய்து பெரிய ஆளாக வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் அவரது தந்தை சிவாஜி கணேசன் மகன் சொந்த ஊரிலேயே இருந்து தனது மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்.

இவர்களுக்கு எதிரியாக சிவாஜி கணேசனின் அண்ணன் குடும்பமும் அவரது அண்ணன் மகனான நாசர் இருக்கிறார். ஊர் மரியாதை தங்களுக்குதான் வேண்டும் என்று சிவாஜி கணேசனின் குடும்பத்தை அளிக்க நினைக்கிறார் நாசர். இப்படி இருக்கும் சூழலில் எதிர்பாராதவிதமாக சிவாஜி கணேசன் உயிரிழந்துவிடுகிறார். இதனைத் தொடர்ந்து தனது அப்பாவின் பொறுப்புகளை ஏற்று ஊர் தலைவராக ஆகிறார் கமல் ஹாசன். அதனைத் தொடர்ந்து நாசர் தரும் பிரச்னைகளை எல்லாம் சமாளித்து எப்படி அந்த ஊரை அமைதியான சூழலுக்கு மாற்றுகிறார் என்பதே படத்தின் கதை.

Also Read… சூர்யா 46 படத்தின் இசை குறித்து கேள்வி எழுப்பிய ரசிகர்… மாஸான அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ் குமார்.

தேவர் மகன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ஸ்கூல் படிக்கும்போதே துருவ் விக்ரமிற்கு வந்த சினிமா வாய்ப்பு… சூப்பர் ஹிட் படத்திற்கு நோ சொன்ன விக்ரம்!