Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஏன் கல்யாணி… இணையத்தில் கவனம் பெறும் கூலி நடிகர் கண்ணா ரவி போஸ்ட்!

Actor Kanna Ravi: கோலிவுட் சினிமாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியான படம் கூலி. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாயகனாக நடித்த இந்தப் படத்தில் பல நடிகர்கள் நடித்து இருந்தனர். இந்த நிலையில் இந்தப் படத்தில் நடித்த கண்ணா ரவி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.

ஏன் கல்யாணி… இணையத்தில் கவனம் பெறும் கூலி நடிகர் கண்ணா ரவி போஸ்ட்!
கண்ணா ரவிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 24 Aug 2025 16:25 PM

தமிழ் சினிமாவில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான வீரா படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது தொடர்ந்து நடிகர் கண்ணா ரவி (Actor Kanna Ravi) தமிழ் சினிமாவில் கைதி, மண்டேலா, சாணி காதிதம், குறிதி ஆட்டம் ஆகியப் படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த 2022-ம் ஆண்டு வெளியான ரத்தசாட்சிப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ரத்தசாட்சிப் படத்தை தொடர்ந்து நடிகர் மணிகண்டன் நாயகனாக நடித்த லவ்வர் படத்தில் நடிகர் கண்ணா ரவி முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார். இதில் இவரது கதாப்பாத்திரத்தை தவறாக புரிந்துகொண்ட  நெட்டிசன்கள் சிலர் பாய் பெஸ்டி என ட்ரோல் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் கூலி படத்தில் இவர் நடிக்கிறார் என்ற தகவல் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. அதேபோல கூலி படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே அவரது கதாப்பாத்திரம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இணையத்தில் கவனம் பெறும் நடிகர் கண்ணா ரவியின் போஸ்ட்:

இந்த கூலி படத்தில் நடிகர் கண்ணா ரவி நாகர்ஜுனாவின் மகனாக நடித்து இருந்தார். இதில் அவரை காதலித்து ஏமாற்றும் கதாப்பாத்திரத்தில் நடிகை ரச்சிதா ராம் நடித்து இருந்தார். அதன்படி படத்தில் நடிகர் ரஜினிகாந்த் அந்த காதலில் இருந்து கண்ணா ரவியை காப்பாற்றுவார்.

ஆனால் மறுபடியும் ரச்சிதாராமின் காதல் வார்த்தைகளில் மயங்கி கண்ணா ரவி ஏமாறுவார். இதனை ரசிகர்கள் மீஸ்களாக இணையத்தில் கலாய்த்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஏன் கல்யாணி ஏன் என்ன ஏமாத்தின என்று நடிகர் கண்ணா ரவி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… மெர்சல் படத்தில் நித்யாமேனன் கதாப்பாத்திரம் எனக்குதான் வந்தது – ஜோதிகா சொன்ன விசயம்!

கண்ணா ரவி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு இதோ:

 

View this post on Instagram

 

A post shared by KANNA RAVI (@kanna__ravi)

Also Read… என்னுடைய முதல் விமர்சகர் அவர்தான் – நடிகர் சூரி ஓபன் டாக்