Ashwath Marimuthu: டிராகன் படத்தில் சிம்பு கூட நடிச்சிருக்கலாம்.. இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து ஓபன் டாக்!
Aswath Marimuthu Speech : தமிழ் சினிமாவில் கடந்த 2025, பிப்ரவரி மாதத்தில் வெளியாகி மிகவும் பிரபலமான படங்களில் ஒன்றுதான் டிராகன். இப்படத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் முன்னணி நாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தில் அவருக்கு பதிலாக வேறு எந்த நடிகரும் நடித்திருக்கலாம் என்று இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து கூறியுள்ளார்.

கோலிவுட் சினிமாவில் பிரபல இயக்குநர் மற்றும் நடிகராக இருந்து வருபவர் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan). இவரின் நடிப்பில் இறுதியாக வெளியாகி மிகப் பிரம்மாண்ட வெற்றியை கொடுத்த திரைப்படம் டிராகன் (Dragon). இந்த படத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் மிகவும் மாறுபட்ட தோற்றத்தில் நடித்து அசத்தியிருந்தார். மிகவும் வித்தியாசமான கதைக்களம் கொண்ட இப்படத்தினை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து (Ashwath Marimuthu) இயக்கியிருந்தார். இவர் இப்படத்திற்கு முன் நடிகர் அசோக் செல்வன் மற்றும் ரித்திகா சிங் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே என்ற படத்தை இயக்கியிருந்தார். மேலும் இந்த டிராகன் படமானது கடந்த 2025, பிப்ரவரி 23ம் தேதியில் உலகமெங்கும் வெளியானது. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிகைகள் கயாடு லோஹர் (Kayadu Lohar) மற்றும் அனுபமா பரமேஷ்வரன் இணைந்து நடித்திருந்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இப்பட இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்குப் பதிலாக சிலம்பரசன் அல்லது ரஜினிகாந்த்தும் கூட நடித்திருக்கலாம் என்று, டிராகன் படத்தின் கதை தன்மை பற்றிப் பேசியிருந்தார். அவர் பேசியதை பற்றி விவரமாக பார்க்கலாம்.




இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து பேசிய விஷயம் :
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து கலந்துகொண்டிருந்தனர். அதில் அவரிடம் டிராகன் படத்தில் பாடல் மற்றும் சிலம்பரசனை வைத்து வீடியோ எடுத்து, மேலும் அவர் இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தால் எவ்வாறு இருந்திருக்கும் என்பது குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, “நானும் முதலில் யோசித்தேன், மேலும் இந்த டிராகன் படத்தின் கதையின் தன்மை பற்றிச் சொல்லவேண்டும் என்றால், இதில் எந்த நடிகராக இருந்தால் கூட நடிக்கமுடியும்.
இப்போது நான் சொல்கிற படி சிலம்பரசன் இப்படத்தில் நடித்திருந்தால், ஒரு 40 வயது நபர் கல்லூரியில் பிரபலமான மன்மதனாக இருக்கிறார். ஆனால் அவர் ஒரு பிராடு, அவர் கல்லூரியில் மன்மதன் போலச் சுற்றித் திரிவார் பின் , வேலைக்குச் சென்று மீண்டும் என காலேஜ் வந்து பயிலும் மாணவனாக இருக்கிறார் என்பதை நம்மால் யோசித்துப் பார்க்க முடியும்தான். மேலும் இதே கதைக்களத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்திருந்தாலும், இப்படத்தின் கதைக்கு செட் ஆகியிருக்கும். அந்த அளவிற்கு இந்த டிராகன் படத்தின் கதையின் தன்மை இருக்கிறது” என்று இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து பேசியிருந்தார்.
அஸ்வத் மாரிமுத்து மற்றும் சிம்புவின் கூட்டணி :
காதல் இருக்கும் பயத்தினில் தான் கடவுள் பூமிக்கு வருவதில்லை…
மீறி அவன் பூமி வந்தால்…?❤️🔥🔥#vintagestrmood#STR51 #AGS27
@Dir_Ashwath @archanakalpathi @aishkalpathi @Ags_production @venkat_manickam @malinavin @onlynikil @prosathish #KalpathiSAghoram #KalpathiSGanesh… pic.twitter.com/mnZuqYONsp— Silambarasan TR (@SilambarasanTR_) February 3, 2025
இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து டிராகன் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிலம்பரசனுடன் STR51 திரைப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் கதைக்களம் முற்றிலும் வித்தியாசமாக அமைந்துள்ளதகா கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிகர் சிலம்பரசனை தவிர வேறு எந்த நடிகர்கள் இணைந்துள்ளனர் என்பது குறித்து இன்னும் செய்திகள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷ்ன் வேலைகள் நடந்துவரும் நிலையில், மேலும் யாரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விரைவில் இது குறித்த தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.