Cinema Rewind: படம் தோல்வி.. நான் மட்டும் பொறுப்பாக முடியாது.. அஜித் ஓபன் டாக்!
Ajith About Directors Responsibility in Movies : தமிழ் சினிமாவில் முன்னணி நாயகர்களில் ஒருவராகக் கலக்கி வருபவர் அஜித் குமார். இவரின் நடிப்பில் பல படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. இந்நிலையில் அவர் முன்னதாக பேசியிருந்த நேர்காணல் ஒன்றில், படத்தின் தோல்வியில் இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பங்களிப்பினை பற்றி பேசியிருந்தார், அதைப் பற்றி பார்க்கலாம்.

நடிகர் அஜித் குமார் (Ajith kumar) என்றாலே அவருக்குத் தமிழ் சினிமாவையும் கடந்து பான் இந்தியா வரை ரசிகர்கள் அதிகமாக உள்ளனர். தமிழில் கடந்த 1993ம் ஆண்டு வெளியான “அமராவதி” (Amaravathi) என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார் அஜித் குமார். இந்த படத்தை இயக்குநர் செல்வா (Selva) இயக்கியிருந்தார். இந்த படமானது அஜித்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைக் கொடுத்திருந்தது. இப்படத்தின் வெற்றிக்குப் பின் தெலுங்கிலும் 1993ம் ஆண்டு வெளியான “பிரேம புஸ்தகம்” (Prema Pusthakam) என்ற படத்தில் நடித்தது அறிமுகமானார். ஆனால் இவருக்குத் தெலுங்கில் போதுமான வரவேற்புகள் இல்லை. அதன் காரணமாக மீண்டும் தமிழிலே கதாநாயகனாகப் படங்களில் நடிக தொடங்கினார். ஆசை, காதல் கோட்டை, வான்மதி, ராசி என அடுத்தடுத்த படங்களில் கதாநாயகனாக நடித்து அசத்தியிருந்தார்.
மேலும் அடுத்தடுத்த படங்களிலும் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கினார். மேலும் சமீபத்தில் அஜித் குமாரின் நடிப்பில் வெளியான படம் குட் பேட் அக்லி (Good Bad Ugly) . இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த 2025, ஏப்ரல் 10ம் தேதியில் இந்த படம் வெளியாகியிருந்தது. இந்த ஆண்டில் அதிகம் வசூல் செய்த தமிழ்ப் படமாக இது இருந்தது என்றே கூறலாம்.
இப்படங்களை தொடர்ந்து தற்போது கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் . முன்னதாக நடிகர் அஜித் குமார் பேசியிருந்த பேட்டி ஒன்றில் படத்தின் தோல்விகள் குறித்தும், அதில் இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பங்களிப்பு பற்றியும் ஓபனாக பேசியிருந்தார். அதை பற்றி பார்க்கலாம்.




திரைப்படங்களின் தோல்வியில் இயக்குநர்களின் பங்களிப்பு பற்றி அஜித் குமார் பேச்சு :
அதில் நடிகர் அஜித் குமார் , “நான் ஒரு நடிகர், நான் கதை கேட்டு இயக்குநர்களிடம் அறிவுரை கூறும் அளவிற்கு எனக்கு அறிவிருந்தால், நான் நடிகராக இருக்கக் கூடாது. அவ்வாறு நான் இருந்தாலே ஒரு இயக்குநராகத்தான் வந்திருப்பேன். ஒரு இயக்குநரிடம் அவ்வாறு நடிகர்கள் பேசக்கூடாது. ஒருபடத்தில் கதையை எவ்வாறு எடுத்துச் செல்லவேண்டும் என்பது இயக்குநரின் கடமை. ஒரு படம் வெற்றிபெற்றால் மட்டும் அந்த படத்தின் வெற்றிக்குக் காரணம் இயக்குநர் என்று கூறுகிறார்கள், ஆனால் அந்த படம் தோல்வியில் முடிந்தால் மட்டும் நான் பொறுப்பேற்கமுடியுமா? அது எனது தவறில்லை, இயக்குநரின் தவறு.
மேலும் இயக்குநர்களின் கதையைக் கேட்டுத்தானே தயாரிப்பாளர்களும் படத்தில் முதலீடு செய்கின்றனர். எனது நடிப்பில் கடந்த 1997ம் ஆண்டிலிருந்து எனது நடிப்பில் வெளியான 5 படங்களும் தொடர் தோல்வியைச் சந்தித்தது. அதற்கு எவ்வாறு நான் மட்டும் காரணமாக இருக்கமுடியும், கதை கேட்டு நடித்த எனக்கு எவ்வளவு பொறுப்புகள் இருக்கிறதோ, அதைப்போலத்தான் முதலீடு போட்ட தயாரிப்பாளருக்கும் பொறுப்பு இருக்கிறது என தெரிவித்திருந்தார்.