Cinema Rewind: சேது படத்தில் நடிக்க மறுத்த பிரபலங்கள்.. சிங்கம்புலி பகிரும் தகவல்!
Singampuli About Sethu Movie : தமிழ் சினிமாவில் மாறுபட்ட திரைக்கதைகளைக் கொடுத்த, ரசிகர்கள் மத்தியில் பெரும் மரியாதையை ஏற்படுத்தியவர் இயக்குநர் பாலா. இவரின் இயக்கத்தில் கடந்த 1999ம் ஆண்டு வெளியான படம்தான் சேது. இந்த படத்தில் முதலில் நடிக்கவிருந்த நடிகர் பற்றி நடிகர் சிங்கம்புலி சொன்ன உண்மையைப் பற்றிப் பார்க்கலாம்.

கோலிவுட் சினிமாவில் கடந்த 1999ம் ஆண்டு வெளியாகிய திரைப்படம்தான் சேது (Sethu). இந்த திரைப்படத்தை இயக்குநர் பாலா (Bala) இயக்கியிருந்தார். இவன் இயக்கத்தில் வெளியான இந்த சேது இடமானது பான் இந்திய அளவிற்குப் பிரபலமான ஹிட் படமாக்கியது. இந்த் திரைப்படத்தில் தமிழ் பிரபல நடிகர் விக்ரம் (Vikram) இணைந்த நடித்திருந்தார். இந்தப் படம்தான் நடிகர் விக்ரமின் சினிமா வாழ்க்கையே புரட்டிப்போட்டது என்றே கூறலாம். அந்த அளவிற்கு இப்படமானது மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது. தமிழ் வரவேற்பைத் தொடர்ந்து இந்த படமானது இந்தி மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் ரீமேக் செய்யப்ட்டிருந்தது. இந்தியில் வெளியான இப்படத்தில் நடிகர் சல்மான்கான் (Salman Khan) நடித்திருந்தார். அந்த அளவிற்கு இப்படமானது அந்த இந்தியா அளவிற்கு மிகவும் பிரபலமானது. இந்த படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக நடிகை அபிதா (Abitha) நடித்திருந்தார்.
இந்தப் படத்தில் நடிப்பதற்கு நடிகர் விக்ரம் பல கஷ்டங்களை மேற்கொண்டிருக்கிறார். இந்நிலையில் இவருக்கு முன் இப்படத்தில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா? இந்த படத்தில் முதலில் நடிகர் முரளிதான் (Murali) நடிக்கவிருந்தாராம். அவர் இப்படத்தில் முதலில் நடிக்கவிருந்தார் என நடிகர் சிங்கம்புலி (Singam puli) கூறியுள்ளார். அவர் சொன்னது பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
சேது படத்திற்காக நடிகர்களை தேடியலைந்த சம்பவம் பற்றி சிங்கம்புலி :
முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் சிங்கம் புலி, “சேது படத்தின் கதைகளை பல நடிகர்கள் மறுத்த நிலையில், நான் நடிக்கிறேன் என்று சொன்ன நடிகர் முரளிதான் என்று கூறியிருந்தார். அதில் நடிகர் சிங்கம் புலி, “நீங்கள் யாரும் நம்பவே மாட்டீர்கள் கடந்த 1992 – 1993ம் ஆண்டில் நானும், இயக்குநர் பாலா சாரும் சேது படத்திற்காகப் பல நடிகர்களிடம் பேசினோம். அப்போது அவர்கள் எங்களிடம் இந்த ஒரு படத்திற்காக எங்களை மொட்டை அடிக்கச் சொல்கிறீர்களா?, நான் இருக்கும் லெவலுக்கு உங்களுடன் மொட்டை அடித்துக்கொண்டு 2 வருடங்கள் இருக்கவேண்டுமா என்று எல்லாம் பல நடிகர்கள் இந்த கதையைக் கூறும்போது எங்களிடம் சொன்னார்கள். அப்படியே நானும் பாலா சாரும் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தோம், அப்படியே வருடங்கள் சில கடந்தது.




அந்த இடத்திற்கு ஆரம்பத்தில் அகிலன் என்றுதான் பெயர் வைத்திருந்தோம், ஒரு நடிகரிடம் சென்று கதை சொல்லிவிட்டு வரலாம் என்று நானும் பாலா சாரும் போனோம். அந்த நடிகரும் கதையைக் கேட்டுவிட்டு நன்றாக இருக்கிறது, நான் நிச்சயமாகப் பண்ணுகிறேன், என்னைக்கி நான் மொட்டை அடிக்கவேண்டும் என்று கூறுங்கள். நான் ஒரு படத்தை மட்டும் முடித்துவிட்டு வருகிறேன், எங்கேயும் போய்விடாதிறீர்கள். சாப்பிட்டீர்களா என்று அந்த நடிகரும் எங்களிடம் கேட்டார். அந்த நடிகர் யார் என்று சொன்னால் நம்பவே மாட்டீர்கள். அவர் வேறு யாருமில்லை. அதர்வாவின் தந்தை முரளிதான் என்று நடிகர் சிங்கம் புலி தெரிவித்திருந்தார்.