அதிமுக வென்றால் கூட்டணி ஆட்சியா? ஒரே வார்த்தையில் திட்டவட்டமாக சொன்ன அமித் ஷா

AIADMK BJP Alliance : தமிழகத்தில் அதிமுக பாஜக கூட்டணி அமையும் என மத்திய உள்துறை அமித் ஷா மீண்டும் பேசியுள்ளார். கூட்டணி ஆட்சிக்கு அதிமுக தலைவர்கள் மறுத்து வரும் நிலையில், மீண்டும் அமித் ஷா திட்டவட்டமாக கூறியிருப்பது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதிமுக வென்றால் கூட்டணி ஆட்சியா? ஒரே வார்த்தையில் திட்டவட்டமாக சொன்ன அமித் ஷா

அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி

Updated On: 

12 Jul 2025 14:11 PM

 IST

சென்னை, ஜூலை 12 : தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி (AIADMK BJP Alliance) வெற்றி பெற்றால், ஆட்சியில் பாஜக அங்கம் வகிக்குமா என்ற கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா (Amit Shah) ஆம் என பதில் கொடுத்துள்ளார். தமிழகத்தில் அதிமுக பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என அமித் ஷா மீண்டும் பேசியுள்ளது தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் தேர்தலுக்கு 9 மாதங்களே உள்ளதால், அரசியல் களம் சூடுபிடித்துளளது. மேலும், கூட்டணி தொடர்பாக சலசலப்புகள் இருந்து வருகிறது. ஏற்கனவே, அதிமுக பாஜக கூட்டணி உறுதியாகி விட்டது. மேலும், தங்கள் கூட்டணிக்குள் மற்ற கட்சிகளை இழுக்க பாஜக முயற்சித்து வருகிறது. அதே நேரத்தில், கூட்டணிக்குள்ளே சில பிரச்னைகள் எழுந்துள்ளது. அதாவது, தொடக்கத்தில் இருந்தே அமித் ஷா, கூட்டணி ஆட்சி என்று தான் கூறி வருகிறார்.

ஆனால், அதிமுக தலைவர்கள் கூட்டணி ஆட்சி இல்லை என்றே கூறி வருகின்றனர். இதனால், தமிழக அரசியலில் கடந்த சில மாதங்களா விவாதப் பொருளாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில், ஆங்கில பத்திரிக்கைக்கு பேட்டி அளித்த அமித் ஷா, மீண்டும் அதுபற்றி திட்டவட்டமாக கூறி இருக்கிறார். அதாவது, தி நியூ இந்திய எக்ஸ்பிரஸுக்கு பேட்டி அளித்த அமித் ஷா, கூட்டணி தொடர்பாக முக்கிய விஷயங்களை பகிர்ந்துள்ளார். அவர் பேசுகையில், தமிழகத்தில் அதிமுக பாஜக கூட்டணி அமோக வெற்றி பெறும் என கூறினார்.

Also Read : பாஜகவின் டம்மி வாய்ஸா எடப்பாடி பழனிசாமி..? முதல்வர் ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் பதிலடி!

அமித் ஷா பேச்சு

மேலும், தமிழகத்தில் அதிமுக பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் அமைச்சரவையில் பாஜக இடம்பெறுமா என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ஆம் என ஒரே வார்த்தையில் அமித் ஷா பதிலளித்துள்ளார். தொடர்ந்து, கூட்டணியில் விஜய் இணைவாரா என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், இப்போது அதுபற்றி சொல்ல முடியாது. கட்சிகளை ஒரே அணியில் கொண்டு வர முயற்சித்து வருகிறோம் என கூறினார்.

தொடர்ந்து, அவரிடம் தமிழகம் எதிர்கொண்டிருக்கும மிகப்பெரிய பிரச்னை என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டு இருக்கிறது. இதற்கு பதில் அளித்த அமித் ஷா, “திமுக ஆட்சியில் ஊழல்கள் நடக்கிறது. அந்த பட்டியில், பல்லாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வெகு நீளமானது. மதுபான ஊழலில் ரூ.39,775 கோடி, எரிசக்தி ஊழலில் ரூ.4,400 கோடி, எல்காட் ஊழலில் ரூ.3,000 கோடி, ஊட்டச்சத்து ஊழலில் ரூ.450 கோடி, இலவச வேட்டி ஊழலில் ரூ.60 கோடி நடந்துள்ளது.

Also Read : ” 1000 ரூபாய்க்கு ஆசைப்பட்டு, 1500 ரூபாய் தவற விட்டீர்களே” – எடப்பாடி பழனிசாமி பேச்சு..

இவை தவிர வேலைக்கு பணம், 100 நாள் வேலை திட்டத்திலும் ஊழல் நடந்துள்ளது. ஸ்டாலினுக்கு நான் சொல்ல வேண்டியது இதுதான். தமிழில் மருத்துவம் கற்றுக்கொடுங்கள். ஏன் நீங்கள் கூடாது? தமிழில் பொறியியல் கற்றுக்கொடுங்கள். ஏன் நீங்கள் அதைச் செய்யக்கூடாது?” என கேள்வி எழுப்பினார்.

 

Related Stories
தமிழ்நாட்டினருக்கு அனுமதி இல்லை… தவெக பொதுக்கூட்டம் – புதுச்சேரி காவல்துறை விதித்த கட்டுப்பாடுகள்
234 வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகம் செய்யும் நாம் தமிழர் கட்சி.. திருச்சியில் அடுத்த ஆண்டு மக்களின் மாநாடு..
அந்த கனவை நொறுக்கி விட்டீர்கள்…. கோபியில் செங்கோட்டையனை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி
29 மாவட்ட செயலாளர்களுக்கு வார்னிங் கொடுத்த எடப்பாடி பழனிசாமி.. களப்பணியில் கவனம் செலுத்த வேண்டும் என உத்தரவு..
யாருடன் கூட்டணி? டிச. 30 ஆம் தேதி முடிவு எடுக்கப்படும் – பாமக நிறுவனர் ராமதாஸ் திட்டவட்டம்..
கர்நாடக காங்கிரஸில் அதிகாரப் போட்டி தீவிரம்…. டெல்லிக்கு விரைந்த எம்எல்ஏக்கள் – என்ன நடக்கிறது.
அதிகரித்து வரும் தங்க குத்தகை.. என்ன காரணம்?
மக்களை காக்கும் வவ்வால்கள் - கிராம மக்களின் விசித்திர நம்பிக்கை
உங்கள் அறையின் ஓரத்தில் நிற்பது பேயல்ல. அது ஸ்லீப் பேரலிசிஸ்!
ஏலியனுடன் தொடர்பில் இருந்த ஜார்ஜ் புஷ்? அமேசான் பிரைம் ஆவண படத்தால் சர்ச்சை