PM Kisan : இவர்களுக்கு பிஎம் கிசான் 20வது தவணை கிடைக்காது.. உடனடியாக இதை செய்து முடியுங்கள்!
PM Kisan Samman Nidhi Yojana 20th Installment | பிஎம் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தில் இதுவரை 19 தவணைகள் பணம் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், 20வது தவணையை எதிர்ப்பார்த்து விவசாயிகள் காத்திருக்கும் நிலையில், சிலருக்கு பிஎம் கிசான் பணம் கிடைக்காது என கூறப்படுகிறது.

விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் பிரதான் மந்திரி சம்மன் கிசான் நிதி யோஜனா திட்டத்தை (Pradhan Mantri Samman Kisan Nidhi Yojana Scheme) மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில், இதுவரை 20 தவணைகள் பணம் வழங்கப்பட்டுள்ள நிலையில், 20வது தவணை ஜூன் 2025 இறுதியில் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், பிரதான் மந்திர சம்மன் கிசான் நிதி யோஜனா திட்டத்தின் 20வது தவணையை சிலரால் பெற முடியாது என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், பிஎம் கிசான் சம்மன் நிதி 20வது தவணை பெற யார் யாருக்கு தகுதி இல்லை, என்ன செய்தால் பணம் கிடைக்கும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பிஎம் கிசான் யோஜனா – 19 தவணைகள் பணம் வரவு வைகப்பட்டுள்ளது
பொருளாதாரத்தில் நலிந்த நிலையில் இருக்கும் விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு (Central Government) செயல்படுத்தும் ஒரு அசத்தலான திட்டம் தான் பிரதான் மந்திரி சம்மன் கிசான் நிதி யோஜனா. இந்த திட்டத்தில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 பணம் வழங்கப்படுகிறது. அதாவது ஆண்டுக்கு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2,000 வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இதுவரை 19 தவணைகள் விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 20வது தவணை எப்போது வரவு வைக்கப்படும் என விவசாயிகள் எதிர்ப்பார்த்து காத்திருந்த நிலையில், 2025 ஜூன் இறுதிக்குள் பிஎம் கிசான் பணம் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் சிலருக்கு 20வது தவணை பணம் வரவு வைக்கப்படாது என கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த செயல்முறையை செய்து முடிப்பதின் மூலம் பணத்தை பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது.
பிஎம் கிசான் யோஜனா – 20வது தவணை பெற என்ன செய்ய வேண்டும்?
பிஎம் கிசான் சம்மன் யோஜனா திட்டத்தில் e KYC செய்யாத நபர்களுக்கு 20வது தவணை பணம் ரூ.2,000 வரவு வைக்கப்படாது என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், பிஎம் கிசான் சம்மன் யோஜனா திட்டத்தில் e KYC செய்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
- அதற்கு முதலில் https://pmkisan.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- பிறகு கிசான் கார்னர் பகுதிக்கு சென்று e KYC விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.
- அங்கு ஆதார் மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை பதிவிட வேண்டும்.
- இதற்கு பிறகு உங்கள் மொபைல் எண்ணுக்கு ஓடிபி அனுப்பப்படும்.
- அதனை உள்ளிட்ட KYC-ஐ முடிக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட இந்த நடைமுறைகளை பின்பற்றி மிக சுலபமாக பிஎம் கிசான் சம்மன் யோஜனா திட்டத்தில் e KYC-ஐ எளிதாக செய்து முடித்து விடலாம். அவ்வாறு e KYC செய்து முடிக்கவில்லை என்றால் 20வது தவணை பணம் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.