தினமும் மேக்கப் போட்டதால் வந்த வினை.. பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி.. இதை மட்டும் பண்ணாதீங்க!
Chinese Women Suffer Skin Damage After wore Makeup : சீனாவைச் சேர்ந்த இளம்பெண் 22 வருடங்களாக தொடர்ந்து மேக்கப் போட்டு வந்ததால், தீவிரமான தோள் பிரச்னையை எதிர்கொண்டுள்ளார். இந்த பிரச்னை குறித்து பாதிக்கப்பட்ட பெண் தனது சோஷியல் மீடியால் பகிர்ந்துள்ளார். இவர் 22 வருடங்களாக மேக்கப் போட்டு, அதனை அமகற்றாமல் இருந்துள்ளார். இது அவரது சருமத்தை மோசமாக்கியது.

சீனா, ஜூன் 28 : தினமும் மேக்கப் போட்டதால் பெண் ஒருவருக்கு நடந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதனை அந்த பெண் வருத்தத்துடன் சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். மேலும், இந்த தவறை மற்றவர்கள் பண்ண வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார். தங்கள் முகத்தை அழகாக காண்பிக்க பெண்கள் ஒப்பனை பொருட்களை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக லட்சக்கணக்கிலும் பணத்தை செலவழித்து வருகின்றனர். ஆனால், ஒப்பனை பொருட்களை சரியாக பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் பல சிக்கல்களை நாம் எதிர்கொள்ளலாம். அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது அரங்கேறியுள்ளது. தினமும் மேக்கப் போட்டுக் கொண்டிருந்த பெண்ணுக்கு பெரிய பிரச்னை ஏற்பட்டுள்ளது. அது என்னவென்று பார்ப்போம்.
தினமும் மேக்கப் போட்டதால் வந்த வினை
சீனாவின் ஜிலின் மாகாணத்தைச் சேர்ந்தவர் 37 வயதான நியூமோமியன். இவர் கடந்த 22 ஆண்டுகளாக தினமும் மேக்கப் போட்டு வருகிறார். அதாவது, தனது 15 வயதில் இருந்து பெண் நியூமோமியன் மேக்கப் போட்டு வந்துள்ளார். 22 வருடங்களாக இடைவிடாமல் தினமும் ஒப்பனை பொருட்களை பயன்படுத்தி வந்துள்ளார்.
14 வயதிலேயே இவர் சரும பிரச்னையை எதிர்கொண்டு இருந்தார். அவர் பயன்படுத்திய முகப்பரு கிரீமால் அவர் சரும பிரச்னைகளை எதிர்கொண்டார். அப்போது, அவர் மிடீல் கிலாஸ் குடும்பம் என்பதால் தோள் டாக்டரை அணுக முடியாத சூழல் ஏற்பட்டது. இதனை அடுத்து, அவர் குறைந்த விலை கிரீம்களை பயன்படுத்தினர்.




இது காலப்போக்கில் அவரது சருமத்தை மோசமாக்கியது. மேலும், மேக்கப் மற்றும் ஹேர் டிரஸ்ஸிங் நிறுவனத்தி அவர் பணிபுரிந்தார். அப்போது, அவர் கட்டாயம் மேக்கப் போட வேண்டிய சூழல் இருந்தது. பணிபுரியம்போதே அவரது சருமத்தில் பல கெமிக்கல்கள் பட்டுள்ளது.
இது அவரது சருமத்தை மேலும் மோசமாக்கியது. அதோடு, 2011 ஆம் ஆண்டு, தனது தோற்றத்தை மேம்படுத்த முகத்திற்கான ஊசிகளை போட்டுள்ளார். அது சிகிச்சை உதவும் நினைத்து போட்டுக் கொண்ட பெண், அது அவரை மேலும் மோசமாக்கியது. இதனால், அவரது முகம் வீக்கம் அடைந்து, முகம் சிவந்து, தடிப்புகள் ஏற்பட்டது.
பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்
தோல் பிரச்னைகள் இவ்வளவு தீவிரமாக இருப்பதை நான் சிறுவயதில் உணரவில்லை என அவர் சோஷியல் மீடியாவில் புலம்பி உள்ளார். இதுகுறித்து பெண் நியூயோமியன் கூறுகையில், “எனக்கு 25 வயதாகும் முன்பு, ஹார்மோன் தோல் பிரச்சினைகள் எவ்வளவு தீவிரமானவை என்பதை நான் உணரவில்லை.
சிறிது சிவத்தல் அல்லது அரிப்புக்கு சில களிம்புகளைப் பூசினால் தீர்வு காண முடியும் என்று நினைத்தேன். ஆனால் 25 வயதிற்குப் பிறகு, எல்லாம் மாறிவிட்டது. ரோசாசியா மற்றும் டெமோடெக்ஸ் மைட் தொற்றுகள் தனக்கு இருப்பது கண்டறிந்தேன். ஆயிரக்கணக்கான சிறிய எறும்புகள் என் முகத்தில் ஊர்ந்து செல்வது போல் நான் உணர்ந்தேன்.
நான் சரியாக மேக்கப்பை அகற்றாமல் இருந்திருக்கிறேன் இது என் சருமத்தை மோசமாக்கியது. இந்த தவறை யாரும் பண்ணாதீர்கள். மற்றவர்கள் அந்த ஒப்பனை பொருள் வேலை செய்தால் அதையே நீங்கள் பயன்படுத்தாதீர்கள். சரியான மருத்துவரை அணுகி பயன்படுத்துங்கள். கண்மூடித்தனமாக மேக்கப் பொருட்களை வாங்கி முயற்சி மேற்கொள்ளாதீர்கள்” என குறிப்பிட்டார். இவரது பதிவு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.