Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Karthigai Deepam - கார்த்திகை தீபம்

Karthigai Deepam - கார்த்திகை தீபம்

கார்த்திகை தீபத் திருவிழா என்பது தமிழர்களின் பழமையான மற்றும் புனிதமான திருவிழாக்களில் ஒன்றாகும். தீபாவளி முடிந்து அடுத்த சில வாரங்களில் கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது. சிவன் மற்றும் முருகன் வழிபாட்டிற்கு முக்கியமானதாக கருதப்படும் இந்நாளில், தீமையின் இருளைப் போக்கி, நன்மை எனும் வெற்றியை (தெய்வீக ஒளியை) பெறுவதாக நம்பப்படுகிறது. கார்த்திகை தீபம் அன்று வீடுகளில் அகல்விளக்குகள் ஏற்றப்பட்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம். அதேபோல திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மலை உச்சியில் பிரம்மாண்ட நெய் தீபம் ஏற்றப்படும். கார்த்திகை மாதம் முழுவதும் வீடுகள் மற்றும் கோயில்கள் எண்ணெய் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, பக்தி சூழல் நிறைந்து ஒளியால் மிளிர்கிறது.

Read More

கார்த்திகை வெள்ளி: தீராத பிரச்சனை நீங்க இன்று வீட்டில் இதை தவறாமல் செய்யுங்கள்!!

Karthigai month: கார்த்திகை வெள்ளியின் மற்றொரு முக்கிய அம்சம் சுக்ரனின் ஆசி. சுக்ரன் கலை, செல்வம், அழகு, பொருளாதார நலம், உறவு சமரசம் போன்றவற்றை கட்டுப்படுத்துவதால், இந்த தினம் வாழ்க்கையின் இத்துறைகளில் முன்னேற்றத்தைப் பெற ஏற்றது. இன்று மாலை நேரத்தில் வீட்டின் வாசலில் இரண்டு அகல் விளக்குகள் ஏற்றலாம்.

Isha Yoga Center: தீபங்களால் ஜொலித்த ஈஷா.. லேசரின் மின்னிய ஆதியோகி!

டிசம்பர் 3ம் தேதியான நேற்று தமிழ்நாட்டில் திருக்கார்த்திகை தீபம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் அகல்விளக்கு ஏற்றி வழிபட்டனர். திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அந்த வகையில் கோவையில் உள்ள ஈஷா மையத்தில் ஆயிரக்கணக்கான விளக்குகள் ஏற்றப்பட்டன

திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மகாதீபம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

Karthigai Deepam : பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் அண்ணாமலையார் கோவிலில்  கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக டிசம்பர் 3, 2025 மாலை 6 மணிக்கு 2 ஆயிரத்து 668 அடி உயர மலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது.

திருவண்ணாமலையில் பக்தர்கள் வசதிக்காக கார்த்திகை தீபம் செயலி அறிமுகம்…மலை ஏற திடீர் கட்டுப்பாடு…!

Karthigai Deepam App Launched : திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் கார்த்திகை தீபம் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலியில் என்னென்ன வசதிகள் உள்ளன என்பதை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

கார்த்திகை தீபம் இன்று.. தயார் நிலையில் திருவண்ணாமலை.. முழு விவரம்!

திருவண்ணாமலையில் இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதில், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மாவட்ட ஆட்சியர் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பரணி தீபத்தை வணங்கி வழிபட்டனர். தொடர்ந்து, மாலையில் மகா தீபம் ஏற்றப்படும். இதனிடையே, இன்று அங்கு மழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

கார்த்திகை தீபம்… வீடுகளில் தீபம் ஏற்றிய பிறகு செய்யக் கூடாதவை என்ன? முழு விவரம் இதோ

Karthigai Deepam : கார்த்திகை தீபம் தினத்தன்று வீடுகளில் தீபம் ஏற்றுவதால் செல்வம், மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியம் கூடும் என்பது பாரம்பரிய நம்பிக்கையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் அன்றைய தினம் விளக்கேற்றிய பிறகு செய்யக் கூடாதவை குறித்து விரிவாக பார்க்கலாம்.

கார்த்திகை தீபம்: பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு முக்கிய கட்டுப்பாடு – விவரம் இதோ

Karthigai Deepam : தமிழகத்தில் கார்த்திகை தீபம் பண்டிகை டிசம்பர் 3, 2025 அன்று வெகு சிறப்பாக கொண்டாடப்படவிருக்கிறது. இந்த நிலையில் பழனியில் உள்ள தண்டாயுதபாணி திருக்கோவிலில் பக்தர்களுக்கு முக்கிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

கார்த்திகை தீபத் திருவிழா… தயாராகும் திருவண்ணாமலை… என்னென்ன ஏற்பாடுகள்?

tiruvannamalai karthigai deepam திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா நாளை நடைபெற உள்ள நிலையில், கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகம், காவல் துறை, கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 15ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

11 நாட்கள் காட்சி தரும் திருவண்ணாமலை கார்த்திகை தீபம்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா என்பது வெறும் திருவிழா அல்ல, “சிவனின் ஜோதியை நேரில் காணும் மிக உயர்ந்த ஆன்மிக அனுபவம்” என பக்தர்கள் நம்புகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத் திருவிழாவில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பது இதன் பெருமையை நிரூபிக்கிறது.

கார்த்திகை தீபம்: பரணி தீப வழிபாடு எப்படி, எப்போது செய்ய வேண்டும்? இதை கண்டிப்பாக பின்பற்றுங்கள்!!

மனக்குழப்பம், கவலை, பயம், உள் வேதனை ஆகியவை இருக்கும் போது, இந்த நாளில் தீபம் ஏற்றுவோர் மனநிறைவு பெற்றதாக உணருவர். யார் மனதில் சங்கடம் இருந்தாலும் அருகிலுள்ள சிவாலயத்தில் அல்லது அம்பாள் கோவிலில் அர்ச்சனை செய்து வந்தால் மனம் அமைதி திரும்.

கார்த்திகை தீபம்: எத்தனை விளக்குகள் ஏற்ற வேண்டும்? தேச மங்கையர்க்கரசி விளக்கம்!

ஆதியும் அந்தமும் இல்லாத அனாதியான சிவபெருமானை நாம் பல ஆலயங்களில் ரூப வடிவத்தில் தரிசிக்கிறோம். ஆனால் இறைவன் இயற்கை வடிவமாக வாழ்கிறார் என்று கூறப்படுவது உண்டு. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரன் நம் மனதில் உள்ள அனைத்து தீய எண்ணங்களையும், காமம், கிரோதம், மாயை போன்ற அனைத்தையும் சாம்பலாக்கி நமக்கு பிறவாமுக்தியை தருபவர்.

கார்த்திகை தீபம்: திருவண்ணாமலையில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!!

திருவண்ணாமலையில் புகழ்பெற்ற கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமரிசையாக நடந்து வருகிறது. தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 3ம் தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும் அன்று மாலை 6 மணிக்கு மலையில் மகாதீபமும் ஏற்றப்படும்.

கார்த்திகை தீபத் திருநாள்: வீட்டில் இதையெல்லாம் தவறிக்கூட செய்யக்கூடாது!!

பிரளயக் காலத்தில் பிரபஞ்சம் அகந்தை இருளில் மூழ்கியபோது, இறைவன் ஆனந்தப் பிரகாசமாக "அனல்ஜோதி" வடிவில் தோன்றினார். அந்த ஜோதியை சிவபெருமான், “அகிலம் பூரணமாக நிறைபவனான ஆனந்த ஜோதி” என வெளிப்படுத்தும் நாளே திருக்கார்த்திகை. முருகப் பெருமானின் பிறப்புத் திருநாளாகவும் இது கருதப்படுகிறது.

கார்த்திகை தீபம் : வீடுகளில் எப்படி விளக்கேற்றினால் முழு பலன் கிடைக்கும்?

Karthigai Deepam : கார்த்திகை தீபம் வருகிற டிசம்பர் 3, 2025 அன்று வெகு சிறப்பாக கொண்டாடப்படவிருக்கிறது. அன்றைய தினம் திருவண்ணாமலை செல்ல இயலாத பக்தர்கள் வீடுகளில் விளக்கேற்றுவதன் மூலம் முழு பலனை பெறலாம். அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா.. கொடியேற்றத்துடன் கோலகலமாக தொடங்கியது!

Tiruvannamalai Karthigai Deepam 2025 | திருவண்ணாமலையில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீப திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். அந்த வகையில், இந்த ஆண்டும் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இந்த விழாவுக்கு உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.