AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Kanimozhi

Kanimozhi

திராவிட முன்னேற்ற கழகத்தில் முக்கிய தலைவர்களில் ஒருராக இருப்பவர் கனிமொழி. டெல்லி தேசிய அரசியலில் திமுவின் முக்கிய முகமாய் கனிமொழி பார்க்கப்படுகிறார். இவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் ஆவார். சிறுவயதில் இருந்தே இலக்கியத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். தந்தை கருணாநிதியை போல எழுதுவதிலும், வாசிப்பிலும் ஆர்வம் கொண்ட இவர், பல்வேறு பத்திரிகைகளில் பணியாற்றி இருக்கிறார். தீவிர அரசியலில் நுழைவதற்கு முன்பு, ஆங்கில நாளேட்டிலும், சிங்கப்பூரில் தமிழ் முரசு இதழிலும் பணியாற்றி உள்ளார். 2007ஆம் ஆண்டு முதன்முறையாக மாநிலங்களை உறுப்பினராக கனிமொழி தேர்வு செய்யப்பட்டார். மீண்டும் 2013ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், முதன்முறையாக 2019ஆம் ஆண்டு மக்களை சந்தித்து தேர்தலில் நின்று தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து மக்களவைக்கு சென்றுள்ளார். அதைத் தொடர்ந்து, 2024ஆம் ஆண்டு தேர்தலிலும் தூத்துக்குடி தொகுதியில் நின்று, மீண்டும் மக்களவை உறுப்பினரானார். தனது முற்போக்குவாதத்தையும் பெண்ணிய வாதத்தையும் முன்வைத்து தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்

Read More

தொகுதி மறுவரையறை.. மக்களவையில் சரமாரி கேள்விகளை முன்வைத்த திமுக எம்பி கனிமொழி!

Kanimozhi Speech In Lok Sabha | மாநிலங்களுக்கான தொகுதி மறுவரையறை உள்ளிட்ட மூன்று முக்கிய மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. இதில் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், திமுக எம்பி கனிமொழி அது குறித்து மக்களவையில் பேசியுள்ளார்.

தமிழ்நாட்டிற்கு ஒரு கறுப்பு நாள்.. தொகுதி மறுவரையறை குறித்து கனிமொழி எம்பி கண்டனம்!

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியதாவது: "இது தமிழ்நாட்டிற்கு ஒரு கறுப்பு நாளாகும்; ஏனெனில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவையும், தொகுதி மறுவரையறை மசோதாவையும் ஒன்றிணைத்துச் சேர்ப்பதற்கான அவசியம் ஏதும் இருப்பதாக நாங்கள் கருதவில்லை. தொகுதி மறுவரையறை எவ்வாறு மேற்கொள்ளப்படவுள்ளது என்பது குறித்து எவ்விதத் தெளிவும் இல்லை; இதனால், ஒப்பீட்டளவில் குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட மாநிலங்கள் பெரிதும் பாதிக்கப்படவுள்ளன. எங்களின் நலன் பாதுகாக்கப்படும் என்று மத்திய அரசு தொடர்ந்து கூறி வந்தாலும், இம்மசோதாவில் அத்தகைய அம்சங்கள் ஏதும் இருப்பதைக் காண முடியவில்லை. எனவே, நாங்கள் மிகுந்த கவலையடைந்துள்ளோம். 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் இது செயல்படுத்தப்பட்டால், தென் மாநிலங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படுவதுடன், அம்மாநிலங்களுக்கான நாடாளுமன்ற இடங்களின் எண்ணிக்கையும் குறைந்துவிடும். இது மிகவும் தீவிரமான கவலைக்குரிய ஒரு விஷயமாகும். இது தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளையும், இன்னும் பல மாநிலங்களின் உரிமைகளையும் பறிப்பதாகவே அமையும்” என்று தெரிவித்தார்.

திமுக வேட்பாளரை ஆதரித்து கன்னியாகுமரியில் கனிமொழி பிரசாரம்!

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் திரவிட முன்னேற்ற கழக மாநிலங்களை உறுப்பினர் கனிமொழி, கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் பகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்தார். 

கனிமொழி பிரசார வாகனத்தில் ஏறி கேள்வி கேட்ட காவலரின் மனைவி.. போராட்டக் களமாக மாறிய பரப்புரை

Tamilnadu Assembly Election: தான் கடந்த நான்கு ஆண்டுகளாக திமுகவில் இருப்பதாகவும், "சொந்த வீட்டில்தான் உரிமை கேட்க முடியும்" என்ற அடிப்படையில் தனது கோரிக்கையை முன்வைத்ததாகவும் பிளஸ்சி தெரிவித்தார். பிளஸ்சியின் கேள்விகளுக்குப் பதிலளித்த கனிமொழி, "இந்த விவகாரம் குறித்துத் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.

கடையநல்லூரில் மதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த எம்.பி கனிமொழி.. பேசியது என்ன?

முதல்வர் சொல்வதை நிறைவேற்றுவார். அவர் தலைவர் கலைஞரின் மகன். கொடுத்த வாக்குறுதிகளை கண்டிப்பாக நிறைவேற்றுவார். தமிழ்நாட்டை அமைதிப் பூங்காவாகவும், மத நல்லிணக்கத்தை பாதுகாக்கவும், கடையநல்லூர் தொகுதி மதிமுக வேட்பாளர் தி.மு. ராஜேந்திரனுக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என கனிமொழி பேசியுள்ளார்.

திமுக அளித்த வாக்குறுதிகள் நிறைவேறியுள்ளது.. கோவையின் கனிமொழி எம்பி பிரச்சாரம்!

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கோயம்புத்தூரில் வாக்கு சேகரித்த கனிமொழி, "கோயம்புத்தூர் மக்கள், குறிப்பாகப் பெண் வாக்காளர்கள், திமுகவிற்குத் தங்கள் வலுவான ஆதரவைத் தெரிவிப்பதன் மூலம் நம்பிக்கையை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்தியை ஏற்றுக்கொள்ளாத காரணத்தினால் மத்திய அரசு நிதியை நிறுத்தி வைத்ததுடன், மும்மொழித் திட்டம் போன்ற கொள்கைகளையும் திணிக்க முயன்றது. எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள், கடந்த காலத்தில் தாங்கள் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தவறிவிட்டனர். இதற்கு மாறாக, திமுக அரசு தான் அளித்த வாக்குறுதிகளைச் செவ்வனே நிறைவேற்றியுள்ளது." என்று கூறினார்.

NDA கூட்டணிக்கு வாக்களிக்க மக்கள் தயாராக இல்லை.. மதுரையில் கனிமொழி எம்பி பேச்சு!

மதுரை தெற்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளரை ஆதரித்து பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, “மக்கள் NDA கூட்டணிக்கு வாக்களிக்கத் தயாராக இல்லை. நமது முதலமைச்சரின் தலைமையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் திறன் கொண்ட திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், நமது கூட்டணிக் கட்சிகளுக்கும் ஆதரவளிக்கவே மக்கள் தயாராக உள்ளனர். தமிழ் மக்களின் எதிர்காலத்தையும், தமிழ் குழந்தைகளின் எதிர்காலத்தையும் பாதுகாப்பவர்களுக்கு வாக்களிக்கவே மக்கள் தயாராக இருக்கிறார்கள்," என்று தெரிவித்தார்.

திமுக கூட்டணி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் தலைவர் ஸ்டாலின்!

தமிழகம் விரைவில் சட்டமன்ற தேர்தலை எதிர்க்கொள்ள உள்ளது. இந்த நிலையில், கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வரும் நிலையில், திராவிட முன்னேற்ற கழக கூட்டணி வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 70 தொகுதிகளில் திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் நிலையில், மீதமுள்ள தொகுதிகளில் திமுக போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சட்டமன்ற தேர்தலில் களமிறங்கும் கனிமொழி? தென் மாவட்ட வாக்குகளை வளைக்க திட்டம்.. எந்த தொகுதி தெரியுமா!

Kanimozhi Karunanidhi : வருகிற சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதியில் கனிமொழி கருணாநிதி போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர், தேசிய அரசியலில் இருந்து மாநில அரசியலுக்கு வர திட்டமிட்டுள்ளார்.

மாநிலங்களவை சீட் கேட்கும் காங்கிரஸ்.. கனிமொழியுடன் ஒன்றரை மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தை..

மாநிலங்களவை எம்.பி பதவி மற்றும் உள்ளாட்சி தேர்தலில் இட பங்கீடு குறித்து ஆலோசித்தோம். சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு இன்னும் இறுதி செய்யப்படவில்லை. திமுக தொகுதி பங்கீடு குழுவிடம் பேசி தொகுதிகளை இறுதிசெய்வோம். பேச்சுவார்த்தைக்கு திமுக குழு அழைக்கும் தேதிக்காக காத்திருக்கிறோம்” என்று அவர் கூறினார்.

திமுக – காங்கிரஸ் கூட்டணி.. முக்கிய அப்டேட்டை கொடுத்த எம்.பி கனிமொழி.. என்ன சொன்னார் தெரியுமா?

திமுக கூட்டணிக்குள் கருத்து வேறுபாடுகள் நிலவுவதாக தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. குறிப்பாக, திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியிலேயே கருத்து முரண்பாடுகள் இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இறுதியாகாத கூட்டணி.. தேர்தல் அறிக்கையிலும் தாமதம்.. கனிமொழி கொடுத்த விளக்கம்!!

DMKs election manifesto: பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் வந்திருந்தனர். அவர்கள் தங்களது கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். இந்தக் கருத்துக்களின் அடிப்படையில், தேர்தல் அறிக்கையில் எவற்றைச் சேர்க்கலாம் என்பது குறித்து நாங்கள் பரிசீலிப்போம். முதலமைச்சரின் ஒப்புதலுடன், அது தேர்தல் அறிக்கையாகத் தயாரிக்கப்படும் என்றார்.

மத்திய அரசு நிறுத்தாத வரை நாங்களும்.. இந்தி திணிப்புக்கு எதிராக பேசிய கனிமொழி!

சென்னையில் உள்ள பார்க் டவுன் மற்றும் டாக்டர் எம்.ஜி.ஆர் மத்திய ரயில் நிலையங்களில் புதிய பெயர் பலகைகள் நிறுவப்பட்டதைத் தொடர்ந்து, திமுக எம்.பி. கனிமொழி கருணாநிதி மத்திய அரசு மீது ஒரு புதிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “மத்திய அரசு இந்தியைத் திணிப்பதை நிறுத்தாத வரை, நாங்கள் எதிர்ப்பதை நிறுத்த மாட்டோம். பெயர் பலகைகளில் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளும் இடம்பெற்றிருந்தாலும், எழுத்துருக்களின் இடம் மாற்றப்பட்டதை ஒரு திட்டமிட்ட 'இந்தி திணிப்பு' தான்” என்றார்.

திமுக கூட்டணியில் தேமுதிக? சஸ்பென்ஸ் வைத்த கனிமொழி.. எகிறும் எதிர்பார்ப்பு! எதிர்பார்ப்பு!!

New parties will join in DMK alliance: நெல்லையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி, பல ஆண்டு காலமாக காங்கிரஸுடன் கூட்டணியில் உள்ளோம், அக்கட்சியுடன் மோதல் போக்கு இல்லை எனக் கூறிய அவர், பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

முற்றும் திமுக – காங்., மோதல்.. ராகுல் காந்தியை சந்திக்கும் கனிமொழி..

DMK-Congress conflict: கனிமொழி, ராகுல் காந்தி சந்திப்பு மூலம் கூட்டணி குறித்த சலசலப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று தெரிகிறது. அதோடு, திமுக தரப்பில் பிப்ரவரி 3ம் தேதி முதல் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.