Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Kanimozhi

Kanimozhi

திராவிட முன்னேற்ற கழகத்தில் முக்கிய தலைவர்களில் ஒருராக இருப்பவர் கனிமொழி. டெல்லி தேசிய அரசியலில் திமுவின் முக்கிய முகமாய் கனிமொழி பார்க்கப்படுகிறார். இவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் ஆவார். சிறுவயதில் இருந்தே இலக்கியத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். தந்தை கருணாநிதியை போல எழுதுவதிலும், வாசிப்பிலும் ஆர்வம் கொண்ட இவர், பல்வேறு பத்திரிகைகளில் பணியாற்றி இருக்கிறார். தீவிர அரசியலில் நுழைவதற்கு முன்பு, ஆங்கில நாளேட்டிலும், சிங்கப்பூரில் தமிழ் முரசு இதழிலும் பணியாற்றி உள்ளார். 2007ஆம் ஆண்டு முதன்முறையாக மாநிலங்களை உறுப்பினராக கனிமொழி தேர்வு செய்யப்பட்டார். மீண்டும் 2013ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், முதன்முறையாக 2019ஆம் ஆண்டு மக்களை சந்தித்து தேர்தலில் நின்று தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து மக்களவைக்கு சென்றுள்ளார். அதைத் தொடர்ந்து, 2024ஆம் ஆண்டு தேர்தலிலும் தூத்துக்குடி தொகுதியில் நின்று, மீண்டும் மக்களவை உறுப்பினரானார். தனது முற்போக்குவாதத்தையும் பெண்ணிய வாதத்தையும் முன்வைத்து தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்

Read More

திமுக – காங்கிரஸ் கூட்டணி.. முக்கிய அப்டேட்டை கொடுத்த எம்.பி கனிமொழி.. என்ன சொன்னார் தெரியுமா?

திமுக கூட்டணிக்குள் கருத்து வேறுபாடுகள் நிலவுவதாக தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. குறிப்பாக, திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியிலேயே கருத்து முரண்பாடுகள் இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இறுதியாகாத கூட்டணி.. தேர்தல் அறிக்கையிலும் தாமதம்.. கனிமொழி கொடுத்த விளக்கம்!!

DMKs election manifesto: பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் வந்திருந்தனர். அவர்கள் தங்களது கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். இந்தக் கருத்துக்களின் அடிப்படையில், தேர்தல் அறிக்கையில் எவற்றைச் சேர்க்கலாம் என்பது குறித்து நாங்கள் பரிசீலிப்போம். முதலமைச்சரின் ஒப்புதலுடன், அது தேர்தல் அறிக்கையாகத் தயாரிக்கப்படும் என்றார்.

மத்திய அரசு நிறுத்தாத வரை நாங்களும்.. இந்தி திணிப்புக்கு எதிராக பேசிய கனிமொழி!

சென்னையில் உள்ள பார்க் டவுன் மற்றும் டாக்டர் எம்.ஜி.ஆர் மத்திய ரயில் நிலையங்களில் புதிய பெயர் பலகைகள் நிறுவப்பட்டதைத் தொடர்ந்து, திமுக எம்.பி. கனிமொழி கருணாநிதி மத்திய அரசு மீது ஒரு புதிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “மத்திய அரசு இந்தியைத் திணிப்பதை நிறுத்தாத வரை, நாங்கள் எதிர்ப்பதை நிறுத்த மாட்டோம். பெயர் பலகைகளில் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளும் இடம்பெற்றிருந்தாலும், எழுத்துருக்களின் இடம் மாற்றப்பட்டதை ஒரு திட்டமிட்ட 'இந்தி திணிப்பு' தான்” என்றார்.

திமுக கூட்டணியில் தேமுதிக? சஸ்பென்ஸ் வைத்த கனிமொழி.. எகிறும் எதிர்பார்ப்பு! எதிர்பார்ப்பு!!

New parties will join in DMK alliance: நெல்லையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி, பல ஆண்டு காலமாக காங்கிரஸுடன் கூட்டணியில் உள்ளோம், அக்கட்சியுடன் மோதல் போக்கு இல்லை எனக் கூறிய அவர், பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

முற்றும் திமுக – காங்., மோதல்.. ராகுல் காந்தியை சந்திக்கும் கனிமொழி..

DMK-Congress conflict: கனிமொழி, ராகுல் காந்தி சந்திப்பு மூலம் கூட்டணி குறித்த சலசலப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று தெரிகிறது. அதோடு, திமுக தரப்பில் பிப்ரவரி 3ம் தேதி முதல் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தூத்துக்குடியில் ’உங்க கனவ சொல்லுங்க’.. திட்டத்தை தொடங்கி வைத்த கனிமொழி!

தூத்துக்குடி எம்பி கனிமொழி கருணாநிதி இன்று அதாவது 2026 ஜனவரி 9ம் தேதி தூத்துக்குடியில் "உங்க கனவ சொல்லுங்க" என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இந்த மக்கள் தொடர்புத் திட்டத்தின் நோக்கம், தன்னார்வலர்கள் வீடுகளுக்குச் சென்று பொதுமக்களின் தேவைகளையும் விருப்பங்களையும் கேட்டறிந்து, மாவட்டத்தின் வளர்ச்சி குறித்த அவர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதாகும்.

திமுகவின் தேர்தல் அறிக்கை மக்களின் அறிக்கையாக இருக்கும்.. கனிமொழி உறுதி!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு இடத்தில், "வெல்லும் தமிழ்ப் பெண்கள்" என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறும் இந்த மாநாட்டை திமுக மேற்கு மண்டல மகளிர் அணி ஏற்பாடு செய்துள்ளது. இதில் பங்கேற்ற திமுக எம்பி கனிமொழி, “திமுக தேர்தல்களின் போது மட்டும் தோன்றும் ஒரு சக்தி அல்ல. திமுக தேர்தல்களின் போது மட்டுமே மக்களைச் சந்திக்கும் ஒரு அமைப்பு அல்ல. அது தொடர்ந்து பொதுமக்களுடன் ஈடுபடுகிறது. திமுகவின் தேர்தல் அறிக்கை மக்களின் அறிக்கையாக இருக்க வேண்டும். மக்களின் எதிர்பார்ப்புகளை அது பிரதிபலிக்கும்.” என்றார்.

சர்வே கல் மீது தீபம்? மதக் கலவரத்தை உருவாக்குவதே பாஜகவின் நோக்கம்… கனிமொழில் பேச்சு

Kanimozhi clarifies Deepam stone: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான சர்ச்சை குறித்து பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அது தீபத்தூண் இல்லை எனவும், ஆங்கிலேயர்கள் காலத்தில் நிலத்தை அளப்பதற்காக வைக்கப்பட்ட ஒரு சர்வே கல் என்றும் தெரிவித்தார்.

யார் மீது பழிப்போடலாம் என நாங்கள் இல்லை – விமர்சனத்திற்கு கனிமொழி பதில்..

Karur Stampede: கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக பேசிய திமுக எம்.பி கனிமொழி, “ அரசு நிகழ்ச்சிகளுக்கு அரசாங்கமே பொறுப்பு ஏற்கும். ஆனால் பிரச்சார நிகழ்ச்சிகள் என்றால் கட்சியே பொறுப்பு ஏற்க வேண்டும். யார் மீது பழி போடுவது என்றெல்லாம் நாங்கள் இல்லை” என தெரிவித்துள்ளார்.

கரூர் கூட்ட நெரிசல்.. நேரில் ஆறுதல் கூறிய கனிமொழி!

தவெக தலைவரின் கரூர் பிரசாரம் பெரிய உயிரிழப்புகளை ஏற்படுதியது. விஜய்யை பார்க்க வேண்டுமென்று அதிக மக்கள் கூடியதால் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் மூச்சுத்திணறி 40 பேர் உயிரிழந்தனர். இன்னும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்களை எம்பி கனிமொழி நேரில் பார்வையிட்டார்

தமிழ்நாடும்.. கண்ணகியும் – மேடையில் கதை சொன்ன கனிமொழி!

மதுரையில் நடந்த விழா ஒன்றில் பேசிய எம்பி கனிமொழி, தமிழ்நாடு குறித்து பேசினார். அநியாயங்கள் என்றால் தமிழ்நாட்டு மக்கள் குரல் கொடுப்பார்கள் என்றும் அதற்கு எடுத்துக்காட்டு மதுரையில் கண்ணகிதான் என்று கூறினார். ஒரு அரசனை எதிர்த்து ஒரு சாமானிய பெண் கேள்வி கேட்ட கதையெல்லாம் வேறு எங்குமே இல்லை என்று தெரிவித்தார்

அவருக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை – எம்.பி. கனிமொழி குற்றச்சாட்டு

குடியரசு துணைத்தலைவர் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. 2025, செப்டம்பர் 9 வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. சி.பி. ராதாகிருஷ்ணனுக்கும், இண்டியா கூட்டணியின் சுதர்சன் ரெட்டிக்கும் இடையே போட்டி நிலவுகிறது. இரு வேட்பாளர்களும் அனுபவமும் வெவ்வேறு பின்னணியும் கொண்டவர்கள். இந்நிலையில் இந்த தேர்தல் குறித்து எம்பி கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார்

தமிழரை நிறுத்தினால் மட்டும் போதுமா? பாஜக வேட்பாளர் குறித்து கனிமொழி கேள்வி!

Kanimozhi MP On BJP Vice President Candidate : துணை ஜனாதிபதி தேர்தலுக்காக நிறுத்தப்பட்ட பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் மட்டும் அவர்களுக்கு தமிழ்நாட்டின் மீதும், தமிழ் மொழியின் மீதும் அக்கறை உள்ளது என அர்த்தமாகிவிடாது என கனிமொழி எம்.பி தெரிவித்தார்.

அமலாக்கத்துறை சோதனைக்கு அஞ்சமாட்டோம் – கனிமொழி கருணாநிதி

தமிழ்நாடு அமைச்சர் ஐ. பெரியசாமியின் வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று அதாவது 2025 ஆகஸ்ட் 16ம் தேதி அமலாக்க இயக்குநரகம் சோதனை நடத்தியது. இதுகுறித்து பேசிய கனிமொழி கருணாநிதி, “அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான அமலாக்க இயக்குநரக சோதனைகளால் ஆளும் கட்சி அஞ்சாது. ஒருபுறம் பாஜக தேர்தல்களில் வெற்றி பெறுவதற்காக SIR (பீகாரில் சிறப்பு தீவிர திருத்தம்) பயன்படுத்தி ஜனநாயகத்தின் மீது தாக்குதல்களை நடத்த தேர்தல் ஆணையத்தை பயன்படுத்துகிறது” என்று தெரிவித்தார்.

திருநெல்வேலியில் கொலையான கவின் குடும்பத்தினரை சந்தித்த எம்.பி. கனிமொழி

தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த இளைஞர் கவின் குமார், வேறு சமூக பெண்ணை காதலித்ததால் படுகொலை செய்யப்பட்டார். தனது அக்காவை காதலித்ததால், அவரது சகோதர் சுர்ஜித், கவினை திருநெல்வேலியில் வைத்து கொலை செய்தார். இந்நிலையில் கவனின் குடும்பத்தை எம்பி கனிமொழி மற்றும் அமைச்சர் நேரு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்