Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Kanimozhi

Kanimozhi

திராவிட முன்னேற்ற கழகத்தில் முக்கிய தலைவர்களில் ஒருராக இருப்பவர் கனிமொழி. டெல்லி தேசிய அரசியலில் திமுவின் முக்கிய முகமாய் கனிமொழி பார்க்கப்படுகிறார். இவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் ஆவார். சிறுவயதில் இருந்தே இலக்கியத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். தந்தை கருணாநிதியை போல எழுதுவதிலும், வாசிப்பிலும் ஆர்வம் கொண்ட இவர், பல்வேறு பத்திரிகைகளில் பணியாற்றி இருக்கிறார். தீவிர அரசியலில் நுழைவதற்கு முன்பு, ஆங்கில நாளேட்டிலும், சிங்கப்பூரில் தமிழ் முரசு இதழிலும் பணியாற்றி உள்ளார். 2007ஆம் ஆண்டு முதன்முறையாக மாநிலங்களை உறுப்பினராக கனிமொழி தேர்வு செய்யப்பட்டார். மீண்டும் 2013ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், முதன்முறையாக 2019ஆம் ஆண்டு மக்களை சந்தித்து தேர்தலில் நின்று தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து மக்களவைக்கு சென்றுள்ளார். அதைத் தொடர்ந்து, 2024ஆம் ஆண்டு தேர்தலிலும் தூத்துக்குடி தொகுதியில் நின்று, மீண்டும் மக்களவை உறுப்பினரானார். தனது முற்போக்குவாதத்தையும் பெண்ணிய வாதத்தையும் முன்வைத்து தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்

Read More

தனித்து போட்டியிடும் விஜய்க்கு வாழ்த்துக்கள் – திமுக எம்.பி கனிமொழி..

DMK MP Kanimozhi: வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தனித்து போட்டியிடும் என ஜூலை 4, 2025 அன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், த.வெ.க தலைவர் விஜய்க்கு தமுக எம்.பி கனிமொழி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அதிகரிக்கும் முக்கியத்துவம்.. அண்ணா அறிவாலயத்தில் எம்.பி கனிமொழிக்கு தனியறை..

MP Kanimozhi: 2026 சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில் திராவிட முன்னேற்ற கழகம் கட்சியில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் எம்.பி கனிமொழிக்கு தனியறை வழங்கப்பட்டுள்ளது.

Kanimozhi: பாஜகவுடன் சேர்ந்து அதிமுக செய்யும் துரோகம்.. முருகன் மாநாடு குறித்து கனிமொழி எம்.பி கருத்து!

Madurai Murugan Manadu: 2025 ஜூன் 22ம் தேதி மதுரையில் நடைபெற்ற முருகன் பக்தர்கள் மாநாடு பெரியார், அண்ணாதுரை போன்ற திராவிட தலைவர்களை விமர்சித்ததால் பெரும் சர்ச்சையை சந்தித்து வருகிறது. அதிமுக தலைவர்கள் பங்கேற்ற இந்த மாநாட்டில், ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் திராவிட மாதிரி ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் எனக் கூறியது கடும் விமர்சனங்களை ஈர்த்துள்ளது. அதிமுகவின் இந்த நடவடிக்கை திமுக உள்ளிட்ட பிற கட்சிகளின் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் குழு.. எம்.பிக்களை சந்திக்கும் பிரதமர் மோடி.. என்ன மேட்டர்?

Operation Sindoor All Party delegation Meet PM Modi : ஆபரேஷன் சிந்தூர் எம்.பிக்கள் குழுவை பிரதமர் மோடி 2025 ஜூன் 9,10ஆம் தேதிகளில் சந்திப்பார் என தகவல் வெளியாகி உள்ளது. 7 எம்.பிக்கள் கொண்ட குழு ஆபரேஷன் சிந்தூர், பயங்கரவாத தாக்குதல் குறித்து விவரிக்க உலக நாடுகளுக்கு சென்ற நிலையில், இன்னும் சில நாட்களில் இந்தியா திரும்ப உள்ளனர்.

India’s National Language: இந்தியாவின் தேசிய மொழி இதுதான்.. சுவாரஸ்ய பதில் கொடுத்து கைதட்டலை அள்ளிய கனிமொழி!

DMK MP Kanimozhi Karunanidhi: திமுக எம்பி கனிமொழி தலைமையிலான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு ஸ்பெயினில் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களின் சங்கத்தை சந்தித்தது. "வேற்றுமையில் ஒற்றுமையே இந்தியாவின் தேசிய மொழி" என கனிமொழியின் பதில் வைரலானது. இந்தக் குழுவில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் மற்றும் இந்தியாவின் முன்னாள் துணைத் தூதர் இடம் பெற்றனர்.

”இனி அமைதியாக இருக்க மாட்டோம்” பாகிஸ்தானை கண்டித்த கனிமொழி எம்.பி!

Operation Sindoor : ஆபரேஷன் சிந்தூர் குறித்தும், பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் எந்த அளவுக்கு ஆதரவு அளிக்கிறது என்பது குறித்து எடுத்துரைக்க திமுக எம்.பி கனிமொழி தலைமையிலான குழு ரஷ்யா சென்றுள்ள நிலையில், அங்கு பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டத்தை தெரிவித்துள்ளது. அதாவது, மீண்டும் பாகிஸ்தான் தாக்கினால் அமைதி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்றும் அணு ஆயுத அச்சுறுத்தலை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் கனிமொழி கூறியுள்ளார்.

கனிமொழியின் ரஷ்யா பயணத்தின் போது டிரோன் தாக்குதல் – தரையிறங்கும் நேரத்தில் நடந்த பரபரப்பு

Kanimozhi’s Moscow Mission Shaken : ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் உள்ள டொமோடெடோவோ (Domodedovo) சர்வதேச விமான நிலையத்தில் இந்திய எம்பிக்கள் பயணம் செய்த விமானம் தரையிறங்கும் நேரத்தில் ட்ரோன் தாக்குதல் சம்பவம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் ரஷ்யாவின் பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக விமானம் வெற்றிகரமாக தரையிறங்கியது.

உலக நாடுகளை சந்திக்கும் எம்.பிக்கள் குழு.. பாகிஸ்தானுக்கு அழுத்தமா? முக்கியத்துவம் என்ன?

All party delegation on Operation sindoor : ஆபேரஷன் சிந்தூர் குறித்து உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க 7 எம்பிக்கள் குழுக்களில், இரண்டு எம்.பிக்கள் குழு 2025 மே 21ஆம் தேதியான இன்று வெளிநாடுகளுக்கு புறப்படுகிறது. எனவே, இந்த எம்.பிக்களின் குழுக்களின் செயல்பாடு, முக்கியத்துவம் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.

கனிமொழிக்கு புதிய பொறுப்பு கொடுத்த பிரதமர்.. ரஷ்யா விரையும் திமுக எம்பி.. என்ன மேட்டர்?

ALL party delegation on Operation sindoor : ஆபேரேஷன் சிந்தூர் குறித்து உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க 7 பேர் கொண்ட எம்.பிக்கள் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த குழுவுக்கு திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி சசி தரூர் தலைமை தாங்குகிறார். மேலும், தமிழகத்தில் இருந்து இந்த குழுவுக்கு தேர்வான ஒரே பிரதிநிதியாக திமுக எம்.பி கனிமொழி உள்ளார்.

Kanimozhi Karunanidhi: அதிமுக ஆட்சியில் பாதுகாக்க நினைத்தவர்களுக்கு தண்டனை.. திமுக எம்பி கனிமொழி பேட்டி..!

Pollachi Assault Case: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கு ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டது. திமுக எம்பி கனிமொழி, இந்த தீர்ப்பு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைத்ததாகவும், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார். அதிமுக ஆட்சியின்போது வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய திமுகவின் முயற்சியின் வெற்றியாகவும் இதை அவர் குறிப்பிட்டார்.