Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Kanimozhi

Kanimozhi

திராவிட முன்னேற்ற கழகத்தில் முக்கிய தலைவர்களில் ஒருராக இருப்பவர் கனிமொழி. டெல்லி தேசிய அரசியலில் திமுவின் முக்கிய முகமாய் கனிமொழி பார்க்கப்படுகிறார். இவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் ஆவார். சிறுவயதில் இருந்தே இலக்கியத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். தந்தை கருணாநிதியை போல எழுதுவதிலும், வாசிப்பிலும் ஆர்வம் கொண்ட இவர், பல்வேறு பத்திரிகைகளில் பணியாற்றி இருக்கிறார். தீவிர அரசியலில் நுழைவதற்கு முன்பு, ஆங்கில நாளேட்டிலும், சிங்கப்பூரில் தமிழ் முரசு இதழிலும் பணியாற்றி உள்ளார். 2007ஆம் ஆண்டு முதன்முறையாக மாநிலங்களை உறுப்பினராக கனிமொழி தேர்வு செய்யப்பட்டார். மீண்டும் 2013ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், முதன்முறையாக 2019ஆம் ஆண்டு மக்களை சந்தித்து தேர்தலில் நின்று தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து மக்களவைக்கு சென்றுள்ளார். அதைத் தொடர்ந்து, 2024ஆம் ஆண்டு தேர்தலிலும் தூத்துக்குடி தொகுதியில் நின்று, மீண்டும் மக்களவை உறுப்பினரானார். தனது முற்போக்குவாதத்தையும் பெண்ணிய வாதத்தையும் முன்வைத்து தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்

Read More

திமுகவின் தேர்தல் அறிக்கை மக்களின் அறிக்கையாக இருக்கும்.. கனிமொழி உறுதி!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு இடத்தில், "வெல்லும் தமிழ்ப் பெண்கள்" என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறும் இந்த மாநாட்டை திமுக மேற்கு மண்டல மகளிர் அணி ஏற்பாடு செய்துள்ளது. இதில் பங்கேற்ற திமுக எம்பி கனிமொழி, “திமுக தேர்தல்களின் போது மட்டும் தோன்றும் ஒரு சக்தி அல்ல. திமுக தேர்தல்களின் போது மட்டுமே மக்களைச் சந்திக்கும் ஒரு அமைப்பு அல்ல. அது தொடர்ந்து பொதுமக்களுடன் ஈடுபடுகிறது. திமுகவின் தேர்தல் அறிக்கை மக்களின் அறிக்கையாக இருக்க வேண்டும். மக்களின் எதிர்பார்ப்புகளை அது பிரதிபலிக்கும்.” என்றார்.

சர்வே கல் மீது தீபம்? மதக் கலவரத்தை உருவாக்குவதே பாஜகவின் நோக்கம்… கனிமொழில் பேச்சு

Kanimozhi clarifies Deepam stone: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான சர்ச்சை குறித்து பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அது தீபத்தூண் இல்லை எனவும், ஆங்கிலேயர்கள் காலத்தில் நிலத்தை அளப்பதற்காக வைக்கப்பட்ட ஒரு சர்வே கல் என்றும் தெரிவித்தார்.

யார் மீது பழிப்போடலாம் என நாங்கள் இல்லை – விமர்சனத்திற்கு கனிமொழி பதில்..

Karur Stampede: கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக பேசிய திமுக எம்.பி கனிமொழி, “ அரசு நிகழ்ச்சிகளுக்கு அரசாங்கமே பொறுப்பு ஏற்கும். ஆனால் பிரச்சார நிகழ்ச்சிகள் என்றால் கட்சியே பொறுப்பு ஏற்க வேண்டும். யார் மீது பழி போடுவது என்றெல்லாம் நாங்கள் இல்லை” என தெரிவித்துள்ளார்.

கரூர் கூட்ட நெரிசல்.. நேரில் ஆறுதல் கூறிய கனிமொழி!

தவெக தலைவரின் கரூர் பிரசாரம் பெரிய உயிரிழப்புகளை ஏற்படுதியது. விஜய்யை பார்க்க வேண்டுமென்று அதிக மக்கள் கூடியதால் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் மூச்சுத்திணறி 40 பேர் உயிரிழந்தனர். இன்னும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்களை எம்பி கனிமொழி நேரில் பார்வையிட்டார்

தமிழ்நாடும்.. கண்ணகியும் – மேடையில் கதை சொன்ன கனிமொழி!

மதுரையில் நடந்த விழா ஒன்றில் பேசிய எம்பி கனிமொழி, தமிழ்நாடு குறித்து பேசினார். அநியாயங்கள் என்றால் தமிழ்நாட்டு மக்கள் குரல் கொடுப்பார்கள் என்றும் அதற்கு எடுத்துக்காட்டு மதுரையில் கண்ணகிதான் என்று கூறினார். ஒரு அரசனை எதிர்த்து ஒரு சாமானிய பெண் கேள்வி கேட்ட கதையெல்லாம் வேறு எங்குமே இல்லை என்று தெரிவித்தார்

அவருக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை – எம்.பி. கனிமொழி குற்றச்சாட்டு

குடியரசு துணைத்தலைவர் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. 2025, செப்டம்பர் 9 வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. சி.பி. ராதாகிருஷ்ணனுக்கும், இண்டியா கூட்டணியின் சுதர்சன் ரெட்டிக்கும் இடையே போட்டி நிலவுகிறது. இரு வேட்பாளர்களும் அனுபவமும் வெவ்வேறு பின்னணியும் கொண்டவர்கள். இந்நிலையில் இந்த தேர்தல் குறித்து எம்பி கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார்

தமிழரை நிறுத்தினால் மட்டும் போதுமா? பாஜக வேட்பாளர் குறித்து கனிமொழி கேள்வி!

Kanimozhi MP On BJP Vice President Candidate : துணை ஜனாதிபதி தேர்தலுக்காக நிறுத்தப்பட்ட பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் மட்டும் அவர்களுக்கு தமிழ்நாட்டின் மீதும், தமிழ் மொழியின் மீதும் அக்கறை உள்ளது என அர்த்தமாகிவிடாது என கனிமொழி எம்.பி தெரிவித்தார்.

அமலாக்கத்துறை சோதனைக்கு அஞ்சமாட்டோம் – கனிமொழி கருணாநிதி

தமிழ்நாடு அமைச்சர் ஐ. பெரியசாமியின் வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று அதாவது 2025 ஆகஸ்ட் 16ம் தேதி அமலாக்க இயக்குநரகம் சோதனை நடத்தியது. இதுகுறித்து பேசிய கனிமொழி கருணாநிதி, “அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான அமலாக்க இயக்குநரக சோதனைகளால் ஆளும் கட்சி அஞ்சாது. ஒருபுறம் பாஜக தேர்தல்களில் வெற்றி பெறுவதற்காக SIR (பீகாரில் சிறப்பு தீவிர திருத்தம்) பயன்படுத்தி ஜனநாயகத்தின் மீது தாக்குதல்களை நடத்த தேர்தல் ஆணையத்தை பயன்படுத்துகிறது” என்று தெரிவித்தார்.

திருநெல்வேலியில் கொலையான கவின் குடும்பத்தினரை சந்தித்த எம்.பி. கனிமொழி

தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த இளைஞர் கவின் குமார், வேறு சமூக பெண்ணை காதலித்ததால் படுகொலை செய்யப்பட்டார். தனது அக்காவை காதலித்ததால், அவரது சகோதர் சுர்ஜித், கவினை திருநெல்வேலியில் வைத்து கொலை செய்தார். இந்நிலையில் கவனின் குடும்பத்தை எம்பி கனிமொழி மற்றும் அமைச்சர் நேரு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்

நெல்லை ஆணவக் கொலை.. கவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த எம்பி கனிமொழி, அமைச்சர்கள்!

Tirunelveli Honour Killing : திருநெல்வேலியில் ஐடி ஊழியர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்டது மாநிலத்தையே உலுக்கியுள்ளது. இது தொடர்பாக பெண்ணின் சகோதரர், தந்தை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கவினின் குடும்பத்தினரை கனிமொழி எம்.பி, அமைச்சர் கே.என்.நேரு நேரில் சென்று ஆறுதல் கூறினர்.

தனித்து போட்டியிடும் விஜய்க்கு வாழ்த்துக்கள் – திமுக எம்.பி கனிமொழி..

DMK MP Kanimozhi: வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தனித்து போட்டியிடும் என ஜூலை 4, 2025 அன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், த.வெ.க தலைவர் விஜய்க்கு தமுக எம்.பி கனிமொழி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அதிகரிக்கும் முக்கியத்துவம்.. அண்ணா அறிவாலயத்தில் எம்.பி கனிமொழிக்கு தனியறை..

MP Kanimozhi: 2026 சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில் திராவிட முன்னேற்ற கழகம் கட்சியில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் எம்.பி கனிமொழிக்கு தனியறை வழங்கப்பட்டுள்ளது.

Kanimozhi: பாஜகவுடன் சேர்ந்து அதிமுக செய்யும் துரோகம்.. முருகன் மாநாடு குறித்து கனிமொழி எம்.பி கருத்து!

Madurai Murugan Manadu: 2025 ஜூன் 22ம் தேதி மதுரையில் நடைபெற்ற முருகன் பக்தர்கள் மாநாடு பெரியார், அண்ணாதுரை போன்ற திராவிட தலைவர்களை விமர்சித்ததால் பெரும் சர்ச்சையை சந்தித்து வருகிறது. அதிமுக தலைவர்கள் பங்கேற்ற இந்த மாநாட்டில், ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் திராவிட மாதிரி ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் எனக் கூறியது கடும் விமர்சனங்களை ஈர்த்துள்ளது. அதிமுகவின் இந்த நடவடிக்கை திமுக உள்ளிட்ட பிற கட்சிகளின் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் குழு.. எம்.பிக்களை சந்திக்கும் பிரதமர் மோடி.. என்ன மேட்டர்?

Operation Sindoor All Party delegation Meet PM Modi : ஆபரேஷன் சிந்தூர் எம்.பிக்கள் குழுவை பிரதமர் மோடி 2025 ஜூன் 9,10ஆம் தேதிகளில் சந்திப்பார் என தகவல் வெளியாகி உள்ளது. 7 எம்.பிக்கள் கொண்ட குழு ஆபரேஷன் சிந்தூர், பயங்கரவாத தாக்குதல் குறித்து விவரிக்க உலக நாடுகளுக்கு சென்ற நிலையில், இன்னும் சில நாட்களில் இந்தியா திரும்ப உள்ளனர்.

India’s National Language: இந்தியாவின் தேசிய மொழி இதுதான்.. சுவாரஸ்ய பதில் கொடுத்து கைதட்டலை அள்ளிய கனிமொழி!

DMK MP Kanimozhi Karunanidhi: திமுக எம்பி கனிமொழி தலைமையிலான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு ஸ்பெயினில் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களின் சங்கத்தை சந்தித்தது. "வேற்றுமையில் ஒற்றுமையே இந்தியாவின் தேசிய மொழி" என கனிமொழியின் பதில் வைரலானது. இந்தக் குழுவில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் மற்றும் இந்தியாவின் முன்னாள் துணைத் தூதர் இடம் பெற்றனர்.