Kanimozhi
திராவிட முன்னேற்ற கழகத்தில் முக்கிய தலைவர்களில் ஒருராக இருப்பவர் கனிமொழி. டெல்லி தேசிய அரசியலில் திமுவின் முக்கிய முகமாய் கனிமொழி பார்க்கப்படுகிறார். இவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் ஆவார். சிறுவயதில் இருந்தே இலக்கியத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். தந்தை கருணாநிதியை போல எழுதுவதிலும், வாசிப்பிலும் ஆர்வம் கொண்ட இவர், பல்வேறு பத்திரிகைகளில் பணியாற்றி இருக்கிறார். தீவிர அரசியலில் நுழைவதற்கு முன்பு, ஆங்கில நாளேட்டிலும், சிங்கப்பூரில் தமிழ் முரசு இதழிலும் பணியாற்றி உள்ளார். 2007ஆம் ஆண்டு முதன்முறையாக மாநிலங்களை உறுப்பினராக கனிமொழி தேர்வு செய்யப்பட்டார். மீண்டும் 2013ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், முதன்முறையாக 2019ஆம் ஆண்டு மக்களை சந்தித்து தேர்தலில் நின்று தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து மக்களவைக்கு சென்றுள்ளார். அதைத் தொடர்ந்து, 2024ஆம் ஆண்டு தேர்தலிலும் தூத்துக்குடி தொகுதியில் நின்று, மீண்டும் மக்களவை உறுப்பினரானார். தனது முற்போக்குவாதத்தையும் பெண்ணிய வாதத்தையும் முன்வைத்து தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்
நாடாளுமன்ற வளாகத்தில் தனியாகப் போராட்டம் நடத்தும் திமுக எம்பிக்கள்!
நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், தங்கள் எதிர்கால நலனுக்காக ஜனநாயக வழியில் போராடும் மாணவர்களைத் தாக்கி அடக்குமுறையில் ஈடுபடும் மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்தும், நீட் தேர்வு ஒழியும் வரை மாணவர்களுக்கு விடிவில்லை எனக் குறிப்பிட்டு, நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்களுடன் கனிமொழி எம்பி தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
- Esakkiraja Selvarathinam
- Updated on: Jul 23, 2026
- 13:33 pm IST
“நடப்பது சட்டத்தின் ஆட்சியா? சாத்தானின் ஆட்சியா?”.. திமுக எம்.எல்.ஏ கைதுக்கு மு.க.ஸ்டாலின், கனிமொழி கடும் கண்டனம்!!
Stalin and Kanimozhi Slam TVK Govt: முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறி விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழி எம்.பி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தவெக அரசு அரசியல் விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் காவல் துறையை ஏவி திமுகவினரை வேட்டையாடுவதாக அவர்கள் சாடியுள்ளனர்.
- Esakkiraja Selvarathinam
- Updated on: Jul 20, 2026
- 13:32 pm IST
காங்கிரஸை ஓரங்கட்டிய திமுக.. நாடாளுமன்றத்தில் தனிப் பாதை.. தமிழ்நாட்டுப் பகை டெல்லியில் எதிரொலி!
DMK Congress seat change: திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி விடுத்த அதிரடிக் கோரிக்கையை அடுத்து, நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் திமுக எம்பிக்களின் இருக்கைகள் காங்கிரஸ் எம்பிக்களுக்கு அருகில் இருந்து முற்றிலும் மாற்றியமைக்கப்பட உள்ளன. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தவெக-வுடன் கூட்டணி அமைத்ததால், டெல்லியில் காங்கிரஸை முற்றிலுமாக ஓரங்கட்டி திமுக தனது அரசியல் பலத்தைக் காட்டியுள்ளது.
- Esakkiraja Selvarathinam
- Updated on: Jul 18, 2026
- 13:44 pm IST
3 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. “சிங்கப்பெண் அதிரடிப்படை” எங்கே போனது?.. அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்!!
இக்கொடூரச் செயலில் ஈடுபட்ட பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது வடமாநில வாலிபரைப் பொதுமக்கள் பிடித்துக் காவல்துறையிடம் ஒப்படைத்தனர் . அவர் தங்கியிருந்த அறையில் அவருடன் மேலும் 4 பேர் இருந்ததால், இது கூட்டுப் பாலியல் வன்கொடுமையாக இருக்கலாம் எனப் பொதுமக்கள் சந்தேகம் எழுப்பினர்.
- Esakkiraja Selvarathinam
- Updated on: Jun 15, 2026
- 12:27 pm IST
“பழி போடுவதால் மாற்றம் வராது.. தேர்தல் மனநிலையிலிருந்து வெளியே வாங்க”.. தவெக அரசை விமர்சித்த கனிமொழி எம்.பி!
நாங்கள் (திமுக) ஆட்சியில் இருந்தே வெளியே வந்துவிட்டோம். ஆனால், புதிய அரசோ இன்னும் ஒரு தேர்தல் மனநிலையில் இருந்தே வெளிவராமல், தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகத்தையே குறை சொல்லிக் கொண்டிருக்கிறது. தாங்கள் இன்று ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே மறந்துவிட்டுப் பேசுகிறார்கள் என கனிமொழி விமர்சித்துள்ளார்.
- Esakkiraja Selvarathinam
- Updated on: Jun 4, 2026
- 07:29 am IST
பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. முதல்வர் விஜய் பொறுப்புடன் செயல்படுவது எப்போது.. கனிமொழி எம்.பி. கேள்வி!
Kanimozhi MP Criticizes CM Vijay: தூத்துக்குடியில் தவக நிர்வாகிகள் இருவரால் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் முதல்வர் விஜய் தான் ஆளுங்கட்சி என்பதை உணர்ந்து எப்பதோ பொறுப்படன் செயல்பட போகிறார் என்று கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
- Gowtham Kannan s
- Updated on: Jun 2, 2026
- 08:53 am IST
‘வாட்ஸ்அப் யூனிவர்சிட்டியும், இன்ஸ்டாகிராம் அட்வைஸும்’.. கனிமொழி எம்.பி கொடுத்த பகுத்தறிவு டோஸ்!
"இன்று உங்கள் உடல்நலம் சார்ந்த விஷயங்கள், ஒரு குடும்பத்தை எப்படி நடத்துவது, குழந்தைகளை எப்படி வளர்ப்பது, எதைச் சாப்பிட வேண்டும் மற்றும் எதைச் சாப்பிடக் கூடாது எனப் பல தலைப்புகளில் இன்ஸ்டாகிராமில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் ஆலோசனைகளையும் பரப்புரைகளையும் வழங்கி வருகிறார்கள்" என்று அவர் கூறினார்.
- Esakkiraja Selvarathinam
- Updated on: May 20, 2026
- 13:30 pm IST
DMK MP Kanimozhi: காங்கிரஸூடன் அமர விருப்பமில்லை.. மக்களவையில் தனி இருக்கை கேட்ட கனிமொழி எம்பி!
DMK MPs in Lok Sabha: திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் வெளியேறி, 5 சட்டமன்ற உறுப்பினர்களை தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவை கொடுத்தது. இந்தநிலையில் மக்களவையில் திமுக உறுப்பினர்கள் காங்கிரஸ் எம்பிக்களுடன் தொடர்ந்து அமர்வது பொருத்தமாக இருக்காது என கனிமொழி எம்பி மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
- Mukesh Kannan
- Updated on: May 8, 2026
- 15:54 pm IST
தொகுதி மறுவரையறை.. மக்களவையில் சரமாரி கேள்விகளை முன்வைத்த திமுக எம்பி கனிமொழி!
Kanimozhi Speech In Lok Sabha | மாநிலங்களுக்கான தொகுதி மறுவரையறை உள்ளிட்ட மூன்று முக்கிய மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. இதில் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், திமுக எம்பி கனிமொழி அது குறித்து மக்களவையில் பேசியுள்ளார்.
- Vinalin Sweety
- Updated on: Apr 17, 2026
- 13:11 pm IST
தமிழ்நாட்டிற்கு ஒரு கறுப்பு நாள்.. தொகுதி மறுவரையறை குறித்து கனிமொழி எம்பி கண்டனம்!
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியதாவது: "இது தமிழ்நாட்டிற்கு ஒரு கறுப்பு நாளாகும்; ஏனெனில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவையும், தொகுதி மறுவரையறை மசோதாவையும் ஒன்றிணைத்துச் சேர்ப்பதற்கான அவசியம் ஏதும் இருப்பதாக நாங்கள் கருதவில்லை. தொகுதி மறுவரையறை எவ்வாறு மேற்கொள்ளப்படவுள்ளது என்பது குறித்து எவ்விதத் தெளிவும் இல்லை; இதனால், ஒப்பீட்டளவில் குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட மாநிலங்கள் பெரிதும் பாதிக்கப்படவுள்ளன. எங்களின் நலன் பாதுகாக்கப்படும் என்று மத்திய அரசு தொடர்ந்து கூறி வந்தாலும், இம்மசோதாவில் அத்தகைய அம்சங்கள் ஏதும் இருப்பதைக் காண முடியவில்லை. எனவே, நாங்கள் மிகுந்த கவலையடைந்துள்ளோம். 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் இது செயல்படுத்தப்பட்டால், தென் மாநிலங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படுவதுடன், அம்மாநிலங்களுக்கான நாடாளுமன்ற இடங்களின் எண்ணிக்கையும் குறைந்துவிடும். இது மிகவும் தீவிரமான கவலைக்குரிய ஒரு விஷயமாகும். இது தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளையும், இன்னும் பல மாநிலங்களின் உரிமைகளையும் பறிப்பதாகவே அமையும்” என்று தெரிவித்தார்.
- Mukesh Kannan
- Updated on: Apr 15, 2026
- 22:26 pm IST
திமுக வேட்பாளரை ஆதரித்து கன்னியாகுமரியில் கனிமொழி பிரசாரம்!
தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் திரவிட முன்னேற்ற கழக மாநிலங்களை உறுப்பினர் கனிமொழி, கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் பகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.
- Vinalin Sweety
- Updated on: Apr 14, 2026
- 21:56 pm IST
கனிமொழி பிரசார வாகனத்தில் ஏறி கேள்வி கேட்ட காவலரின் மனைவி.. போராட்டக் களமாக மாறிய பரப்புரை
Tamilnadu Assembly Election: தான் கடந்த நான்கு ஆண்டுகளாக திமுகவில் இருப்பதாகவும், "சொந்த வீட்டில்தான் உரிமை கேட்க முடியும்" என்ற அடிப்படையில் தனது கோரிக்கையை முன்வைத்ததாகவும் பிளஸ்சி தெரிவித்தார். பிளஸ்சியின் கேள்விகளுக்குப் பதிலளித்த கனிமொழி, "இந்த விவகாரம் குறித்துத் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.
- Esakkiraja Selvarathinam
- Updated on: Apr 12, 2026
- 11:32 am IST
கடையநல்லூரில் மதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த எம்.பி கனிமொழி.. பேசியது என்ன?
முதல்வர் சொல்வதை நிறைவேற்றுவார். அவர் தலைவர் கலைஞரின் மகன். கொடுத்த வாக்குறுதிகளை கண்டிப்பாக நிறைவேற்றுவார். தமிழ்நாட்டை அமைதிப் பூங்காவாகவும், மத நல்லிணக்கத்தை பாதுகாக்கவும், கடையநல்லூர் தொகுதி மதிமுக வேட்பாளர் தி.மு. ராஜேந்திரனுக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என கனிமொழி பேசியுள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Apr 11, 2026
- 22:19 pm IST
திமுக அளித்த வாக்குறுதிகள் நிறைவேறியுள்ளது.. கோவையின் கனிமொழி எம்பி பிரச்சாரம்!
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கோயம்புத்தூரில் வாக்கு சேகரித்த கனிமொழி, "கோயம்புத்தூர் மக்கள், குறிப்பாகப் பெண் வாக்காளர்கள், திமுகவிற்குத் தங்கள் வலுவான ஆதரவைத் தெரிவிப்பதன் மூலம் நம்பிக்கையை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்தியை ஏற்றுக்கொள்ளாத காரணத்தினால் மத்திய அரசு நிதியை நிறுத்தி வைத்ததுடன், மும்மொழித் திட்டம் போன்ற கொள்கைகளையும் திணிக்க முயன்றது. எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள், கடந்த காலத்தில் தாங்கள் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தவறிவிட்டனர். இதற்கு மாறாக, திமுக அரசு தான் அளித்த வாக்குறுதிகளைச் செவ்வனே நிறைவேற்றியுள்ளது." என்று கூறினார்.
- Mukesh Kannan
- Updated on: Apr 5, 2026
- 21:38 pm IST
NDA கூட்டணிக்கு வாக்களிக்க மக்கள் தயாராக இல்லை.. மதுரையில் கனிமொழி எம்பி பேச்சு!
மதுரை தெற்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளரை ஆதரித்து பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, “மக்கள் NDA கூட்டணிக்கு வாக்களிக்கத் தயாராக இல்லை. நமது முதலமைச்சரின் தலைமையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் திறன் கொண்ட திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், நமது கூட்டணிக் கட்சிகளுக்கும் ஆதரவளிக்கவே மக்கள் தயாராக உள்ளனர். தமிழ் மக்களின் எதிர்காலத்தையும், தமிழ் குழந்தைகளின் எதிர்காலத்தையும் பாதுகாப்பவர்களுக்கு வாக்களிக்கவே மக்கள் தயாராக இருக்கிறார்கள்," என்று தெரிவித்தார்.
- Mukesh Kannan
- Updated on: Apr 3, 2026
- 11:55 am IST