AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கரூரில் நள்ளிரவில் நுழைந்த தனிப்படை.. செந்தில் பாலாஜி நிழல் உலகப் புள்ளியின் பைனான்ஸ் நிறுவனத்திற்கு சீல் வைத்த போலீஸ்!!

TVK MLA Horse Trading Case: கரூர் சின்னாண்டாங்கோவில் சாலையில் உள்ள பாரிநகர் பகுதியில் கனகராஜ் என்பவருக்குச் சொந்தமான பைனான்ஸ் அலுவலகம் இயங்கி வருகிறது. நேற்று இரவு இந்த அலுவலகத்திற்குள் கரூர் மற்றும் சென்னை தனிப்படை போலீசார் அதிரடியாக நுழைந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

கரூரில் நள்ளிரவில் நுழைந்த தனிப்படை.. செந்தில் பாலாஜி நிழல் உலகப் புள்ளியின் பைனான்ஸ் நிறுவனத்திற்கு சீல் வைத்த போலீஸ்!!
சீல் வைக்கப்பட்ட நிறுவனம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 19 Jul 2026 12:09 PM IST

கரூர், ஜூலை 19: தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் குதிரைப்பேர விவகாரத்தில், கரூரில் உள்ள ஒரு முக்கியப் பைனான்ஸ் நிறுவனத்திற்கு நள்ளிரவில் போலீசார் அதிரடியாகச் சீல் வைத்துள்ளனர். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் இந்த வழக்கில் காவல்துறையின் இந்த அதிரடி நடவடிக்கை கரூர் வட்டாரத்தில் உச்சகட்ட பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தின் பின்னணி மற்றும் காவல்துறை விசாரணை குறித்த முழு விவரங்களை இக்கட்டுரையில் காணலாம்.

இதையும் படிக்க: கோவையில் ரோந்துப் பணியில் அத்துமீறிய காவலர்.. இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. அதிரடி கைது!

தவெக எம்.எல்.ஏ கொடுத்த புகார்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினரான இளையராஜா, தற்போதைய சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கக் கோரி, தனக்குத் தொலைபேசி வாயிலாகப் பெருந்தொகை பண ஆசை காட்டிச் சிலர் குதிரைப்பேரம் பேசியதாகச் சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரைத் தொடர்ந்து சென்னை திருவல்லிக்கேணி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு இதுவரை 10-க்கும் மேற்பட்ட நபர்களைக் கைது செய்துள்ளனர். மேலும், 10-க்கும் மேற்பட்ட தவெக எம்.எல்.ஏ-க்களிடமும் இதேபோல் பேரம் பேசப்பட்டதாக அடுத்தடுத்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

செந்தில் பாலாஜிக்கு வலை:

இந்த அரசியல் குதிரைப்பேர விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறி, அவர்கள் இருவரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த வழக்கின் அடுத்த கட்ட நடவடிக்கையாக, குதிரைப்பேரத்திற்கான பணப் பரிவர்த்தனைகள் கரூரில் உள்ள பைனான்ஸ் நிறுவனம் மூலம் திட்டமிடப்பட்டதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் போலீசார் கரூரில் களமிறங்கினர்.

நள்ளிரவு அதிரடி சோதனை & சீல் வைப்பு:

கரூர் சின்னாண்டாங்கோவில் சாலையில் உள்ள பாரிநகர் பகுதியில் கனகராஜ் என்பவருக்குச் சொந்தமான பைனான்ஸ் அலுவலகம் இயங்கி வருகிறது. நேற்று இரவு இந்த அலுவலகத்திற்குள் கரூர் மற்றும் சென்னை தனிப்படை போலீசார் அதிரடியாக நுழைந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

பல மணி நேரம் நீடித்த இந்த சோதனையின் போது, அலுவலகத்தில் இருந்து பெருமளவு பணம் எதுவும் சிக்கவில்லை என்றாலும், குதிரைப்பேர வழக்கிற்குத் தொடர்புடைய மிக முக்கியமான பல ரகசிய ஆவணங்கள் மற்றும் வங்கிப் பரிவர்த்தனை தாள்களைப் போலீசார் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது. சோதனையின் முடிவில், அந்தப் பைனான்ஸ் அலுவலகத்தை முழுமையாகப் பூட்டி, அதற்குப் போலீசார் அதிகாரப்பூர்வமாகச் சீல் வைத்தனர்.

இதையும் படிக்க: சென்னையில் ரவுடிகள் வேட்டை.. காவலர்களை வெட்டிவிட்டு தப்ப முயன்ற ‘சரித்திரப் பதிவேடு’ ரவுடி சுட்டுப்பிடிப்பு!

அரசியல் வட்டாரத்தில் உச்சகட்ட பரபரப்பு:

ஆளும் தவெக அரசின் சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தில் எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்க முயன்றதாக எழுந்த புகாரில், கரூரில் உள்ள பைனான்ஸ் நிறுவனத்திற்குச் சீல் வைக்கப்பட்டுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தலைமறைவாக உள்ள நபர்களைப் பிடிக்கத் தனிப்படையினர் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Follow Us