AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கோவையில் ரோந்துப் பணியில் அத்துமீறிய காவலர்.. இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. அதிரடி கைது!

Coimbatore cop arrested for harassment: கோவை துடியலூர் காவல் நிலைய இரண்டாம் நிலை காவலர் வினோத்குமார் (35), வெள்ளக்கினர் பகுதியில் ரோந்துப் பணியில் இருந்தபோது, 23 வயது இளம்பெண்ணைத் தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காகப் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவையில் ரோந்துப் பணியில் அத்துமீறிய காவலர்.. இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. அதிரடி கைது!
கோப்புப் படம்
Sekaran S
Sekaran S | Published: 19 Jul 2026 09:54 AM IST

கோவை, ஜூலை 19: கோவை மாநகரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவரே, இளம் பெண் ஒருவரைத் தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில், சம்பந்தப்பட்ட இரண்டாம் நிலை காவலர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை மாநகரக் காவல்துறைக்கு உட்பட்ட துடியலூர் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராகப் பணிபுரிந்து வருபவர் வினோத்குமார் (35). ரோந்துப் பணியின் போது அத்துமீறல்: கடந்த ஜூலை 15-ஆம் தேதி, காவலர் வினோத்குமார் சக போலீசாருடன் இணைந்து கோவை வெள்ளக்கினர் பகுதியில் இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார்.

இதையும் படிக்க: சென்னையில் ரவுடிகள் வேட்டை.. காவலர்களை வெட்டிவிட்டு தப்ப முயன்ற ‘சரித்திரப் பதிவேடு’ ரவுடி சுட்டுப்பிடிப்பு!

விசாரணை என்ற பெயரில் அநாகரிகம்:

அப்போது, அங்கிருந்த வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு அருகே 23 வயதான இளம்பெண் ஒருவர், தனது ஆண் நண்பருடன் நின்று பேசிக் கொண்டிருந்தார். அங்கு வந்த ரோந்துப் படையினர், இருவரிடமும் எதற்காக இங்கு நிற்கிறீர்கள் என்று விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, காவலர் வினோத்குமார் மட்டும் அந்த இளம்பெண்ணைத் தனியாக ஒரு பகுதிக்கு அழைத்துச் சென்று விசாரித்துள்ளார். யாரும் இல்லாத அந்தத் தனிமையான இடத்தில் வைத்து, அந்தப் பெண்ணுக்கு வினோத்குமார் பாலியல் ரீதியாகக் கடுமையான தொல்லை கொடுத்துள்ளார்.

கதறி அழுத பெண்; அதிரடி நடவடிக்கை:

காவலரின் இந்த அதிர்ச்சிச் செயலால் நிலைகுலைந்த அந்த இளம்பெண், உடனடியாகத் தனது ஆண் நண்பரிடம் ஓடிவந்து தனக்கு நேர்ந்த கொடுமையைக் கூறி கதறி அழுதுள்ளார். இதனால் கொதிப்படைந்த அந்த ஆண் நண்பர், உடனடியாகக் காவல் துறை உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்து, முறைப்படி புகாரும் அளித்தார். புகாரைத் தொடர்ந்து, காவல் துறை உயர் அதிகாரிகள் உடனடியாக விசாரணையில் இறங்கினர். பாதிக்கப்பட்ட இளம்பெண் மற்றும் காவலர் வினோத்குமார் ஆகிய இரு தரப்பிலும் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், காவலர் வினோத்குமார் அநாகரிகமாக நடந்துகொண்டு பாலியல் தொல்லை கொடுத்தது அத்தாட்சிகளுடன் உறுதி செய்யப்பட்டது.

4 பிரிவுகளில் வழக்கு & கைது:

குற்றம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, வினோத்குமார் மீது துடியலூர் காவல் நிலையத்திலேயே பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நேற்று (ஜூலை 18) வினோத்குமாரை போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிக்க: பெண்களின் பாதுகாப்பில் அதிரடி காட்டும் தமிழக அரசு.. 9,500-க்கும் மேற்பட்ட இடங்களில் சுழன்றடித்த சிங்கப்பெண் சிறப்புப் படை!

பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பு:

பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல் துறையைச் சேர்ந்த ஒருவரே, விசாரணை என்ற பெயரில் இளம்பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட இச்சம்பவம் கோவை மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பலத்த கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தவறு செய்யும் நபர்கள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது என்ற நோக்கில் உயர் அதிகாரிகள் இந்த உடனடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

Follow Us