AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

MLAக்களுக்கு கார் முதல் டிஎன்பிஎஸ்சி வரை.. 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்.. ஒரு மசோதாவுக்கு மட்டும் ‘செக்’.. காரணம் என்ன?

TN Governor Assents to 12 Assembly Bills: தமிழகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 13 மசோதாக்களில் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அதிவிரைவாக ஒப்புதல் அளித்துள்ளார். நிலுவையில் வைக்கப்பட்ட பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

MLAக்களுக்கு கார் முதல் டிஎன்பிஎஸ்சி  வரை.. 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்.. ஒரு மசோதாவுக்கு மட்டும் ‘செக்’.. காரணம் என்ன?
ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 18 Sep 2026 07:38 AM IST

சென்னை, செப்.18: தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 11-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தச் சட்டமன்றக் கூட்டத்தொடரில் மாநிலத்தின் வளர்ச்சி, நகர்ப்புற நிர்வாகம், நிதி மேலாண்மை மற்றும் பணியாளர் தேர்வு முறைகள் தொடர்பான பல்வேறு முக்கிய மசோதாக்கள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன. இவ்வாறு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் அனைத்தும் ஆளுநரின் ஒப்புதலுக்காக ராஜ்பவனுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. வழக்கமாக ஆளுநரின் ஒப்புதலுக்காக மசோதாக்கள் பல மாதங்கள் நிலுவையில் வைக்கப்படும் சூழல் நிலவும் நிலையில், தற்போது அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் சில தினங்களிலேயே ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

இதையும் படிக்க : டாஸ்மாக் பார்களில் இனி உணவகங்கள் – அமைச்சர் விக்னேஷ் முக்கிய அறிவிப்பு

12 மசோதாக்களுக்கு கிடைத்த அதிவிரைவு ஒப்புதல்:

சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட மொத்தம் 13 சட்ட மசோதாக்களில் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தனது அதிகாரப்பூர்வ ஒப்புதலை அளித்துள்ளார். இதில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மதுபானங்களுக்கான மதிப்புக் கூட்டு வரிச் சட்ட மசோதாவிற்கு செப்டம்பர் 2-ஆம் தேதியே ஒப்புதல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, செப்டம்பர் 8-ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட நகர் ஊரமைப்புத் திருத்தச் சட்டம், முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையத் திருத்தச் சட்டம், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் திருத்தச் சட்டம், சட்டமன்ற உறுப்பினர்களுக்கான கார் வழங்குதல் தொடர்பான திருத்தச் சட்டம், ஊரக உள்ளாட்சிகளின் தனி அலுவலர் பதவிக் கால நீடிப்புச் சட்டம் மற்றும் நிதி மசோதா ஆகிய 6 மசோதாக்களுக்குக் வெறும் 4 நாட்களிலேயே (செப்டம்பர் 12) ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

வேளாண்மை மற்றும் நகர்ப்புற நிர்வாக மசோதாக்கள்:

இதேபோல், செப்டம்பர் 8-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்ட தமிழ்நாடு வேளாண் பொருட்கள் சந்தைப்படுத்தல் திருத்தச் சட்டம், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான பணியாளர்களைத் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யும் சட்டம், சரக்கு மற்றும் சேவை வரிகள் தொடர்பான 2 சட்ட மசோதாக்கள் மற்றும் மதிப்புக் கூட்டு வரி தொடர்பான 2 சட்ட மசோதாக்கள் என மேலும் 5 மசோதாக்களுக்குச் செப்டம்பர் 13-ஆம் தேதி (5 நாட்களுக்குள்) ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். உள்ளாட்சி நிர்வாகங்களைச் சீரமைப்பதுடன், அரசுப் பணியிடங்களுக்கான தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி அமைப்பிடம் ஒப்படைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த சட்ட மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலைப் பெற்றுள்ளதால் விரைவில் அரசாணையாக வெளியாகவுள்ளன.

இதையும் படிக்க: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு.. “இது ஆன்மீக விழாவா.. அமைச்சர்களின் குடும்ப விழாவா?”.. தவெக அரசை சாடிய நயினார் நாகேந்திரன்!!

குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட பின்னணி:

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மொத்தம் 13 மசோதாக்களில் 12 மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலைப் பெற்றுவிட்ட நிலையில், தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் மாநிலப் பல்கலைக்கழகங்களின் நிர்வாக நடைமுறைகள் தொடர்பான ஒரு சட்ட மசோதா மட்டும் ஆளுநரால் ஒப்புதல் அளிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. உயர்கல்வித் துறை மற்றும் பல்கலைக்கழக விதிகளுடன் தொடர்புடைய மசோதா என்பதால், அரசியல்சாசன விதிமுறைகளின்படி அதனை மேல் நடவடிக்கைக்காகக் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு ஆளுநர் அனுப்பி வைத்துள்ளதாக ராஜ்பவன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மிகக் குறைந்த நாட்களில் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு நகர்ப்புற மற்றும் நிதி சார்ந்த சட்டங்கள் உடனடியாக நடைமுறைக்கு வரவுள்ளது அரசு நிர்வாகத்தில் வேகத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us