”அனுமதியின்றி மாணவிகளை தொடுகிறார்” விஜய் மீது தமிழக வாழ்வுரிமை கட்சியினர் புகார்
TVK Vijay : தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மீது தமிழக வாழ்வுரிமை கட்சியினர் புகார் அளித்துள்ளனர். கல்வி விருது விழாவில் மாணவிகளை அனுமதியின்றி தொடுவது போன்ற தகாத செயலில் விஜய் ஈடுபட்டாக அவர் மீது கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் நல குழுவிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை, ஜூன் 11 : தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் (tamilaga vettri kazhagam chief vijay) மீது தமிழக வாழ்வுரிமை கட்சி (tamilaga vazhvurimai party) சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கல்வி விருது (tvk education award function) விழாவில் மாணவிகளை அனுமதி இன்றி தொடுவது போன்ற தகாத செயலில் விஜய் ஈடுபட்டார் என தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் குழந்தைகள் நலக் குழுவிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சென்னையில் இரண்டு நாட்கள் கல்வி விருது விழா நடைபெற்றது. இந்த கல்வி விருது விழாவில் 10,12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்களை பெற்ற மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு விஜய் பரிசுகளை வழங்கி கவுரவித்தார். அதோடு, விஜய்க்கு மாணவர்கள் பரிசுகளையும் வழங்கினார். மேலும், விஜய்யிடம் மாணவர்கள் அரவணைத்து புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.
விஜய் மீது தமிழக வாழ்வுரிமை கட்சியினர் புகார்
விருது விழாவில் மாணவர்களை அரவணைத்து விஜய் புகைப்படம் எடுத்து கொண்டதை தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல் முருகன் விமர்சித்து வருகிறார். அவரது பேச்சு பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. மாணவிகளின் அனுமதியின்று விஜய் தொட்டு, தகாத முறையில் நடந்துக் கொண்டதாக வேல்முருகன் விமர்சித்து வருகிறார்.




அதோடு, அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு விஜய்யை தகாத வார்த்தைகளால் வேல்முருகன் விமர்சித்து இருந்தார். இந்த நிலையில், தமிழக வாழ்வுரிமை கட்சியனர் புகார் கொடுத்துள்ளனர். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மீது கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் நல குழுவிடம் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.
சட்டரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை
விஜய் மீது தவாகவினர் குழந்தைகள் நலக் குழுவிடம் புகார்!
அனுமதி இன்றி தொடுவது போன்ற தகாத செயலில் விஜய் ஈடுபட்டார் என குற்றச்சாட்டு!
இச்செயல் சமுதாயத்தில் பெண் குழந்தைகளை தொடுவது தவறில்லை என்கிற தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தும் என்பதால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்ய pic.twitter.com/CcdxWIkhyv— தமிழக வாழ்வுரிமை கட்சி பெரம்பலூர் (@TPerampalu43571) June 11, 2025
அந்த புகாரில், ” தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடந்த கல்வி விருது விழாவில் மாணவிகைள அழைத்து அனுமதியின்றி தொடுவது என தகாத செயலில் விஜய் ஈடுபட்டுள்ளார். இதை பல கோடி மக்கள் பார்த்து பெண் குழந்தைகளை தொடுவது தவறில்லை என கருதி தொடக்கூடும். இதனால், சமூதாயத்தில் மிகப்பெரிய தாக்கம் மற்றும் கலாச்சார சீர்கெடு ஏற்படுவது மட்டுமில்லாமல் சமூதாயத்தில் தவறான முன் உதாரணமாக அமைந்துவிடும்.
எனவே, இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்தால் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு என்பது மிகப்பெரிய கேள்வி குறி ஆகிவிடும். அதனால், இதுபோன்ற சம்பவங்களை உடனடியாக தடுத்து நிறுத்தும் வகையில், நடிகர் விஜய் மீது விசாரணை நடத்தி சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்கிறோம்” என குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதற்கிடையில், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்படலாம் என கூறப்படுகிறது. பெற்றோர்களையும், மாணவிகளை தகாத வார்த்தைகளால் பேசிய தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.