Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நீலகிரி கோவைக்கு ரெட் அலர்ட்.. பிச்சு உதறபோகும் மழை.. லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!

Tamil Nadu Weather Update : தமிழகத்தில் நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதோடு, திருநெல்வேலி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி கோவைக்கு ரெட் அலர்ட்.. பிச்சு உதறபோகும் மழை.. லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!
மழைImage Source: PTI
Umabarkavi K
Umabarkavi K | Published: 29 May 2025 06:18 AM

சென்னை, மே 29 : தமிழகத்திற்கு இரு நாட்களுக்கு அதி கனமழைக்கான ரெட் (tamil nadu red alert) அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு வானிலை மையம் (tamil nadu weather update) ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, நீலகிரி, கோவை, திருநெல்வேலி என தென் மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இந்தியாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து, பல்வேறு மாநிலங்களில் மழை பெய்து வருகிறது. கேரளா, கர்நாடகா, மகாரஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கேரளாவில் 2025 மே 24ஆம் தேதி தொடங்கிய பருவமழை, தற்போது தென் மாநிலங்கள் முழுவதும் பரவியதாக இந்திய வானிலை மையம் கூறியிருந்தது. இந்த நிலையில், அடுத்த ஐந்து நாட்களுக்கான வானிலை நிலவரத்தை பார்ப்போம்.

நீலகிரி கோவைக்கு ரெட் அலர்ட்

அதாவது, ஒடிசா கடலோரப் பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு 2025 மே 28ஆம் தேதி காலை ஆழ்ந்த காற்றத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது.

இது மெதுவாக வடக்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதோது, தென்னிந்திய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக, தமிழகத்தில் 2025 மே 29ஆம் தேதி முதல் 2025 ஜூன் 3ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யக் கூடும். அதோடு, 2025 மே 29, 30ஆம் தேதிகளில் நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளுக்கு அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

பிச்சு உதறபோகும் மழை


மேலும், திருநெல்வேலி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை, 2025 மே 29ஆம் தேதி வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும் நகரின் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதோது, அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதை அடுத்து, அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்படுகிறது. மேலும், உதகை – கூடலூர் நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால், அப்பகுதியில் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது.