Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் வெளுக்கும் கனமழை.. வானிலை அப்டேட்

Tamil Nadu Weather Update : தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவிததுள்ளது. குறிப்பாக, 2025 ஆகஸ்ட் 12ஆம் தேதி (இன்று) திருவள்ளூர், ராணிப்பேட்டை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் வெளுக்கும் கனமழை.. வானிலை அப்டேட்
மழைImage Source: PTI
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 12 Aug 2025 06:42 AM

சென்னை, ஆகஸ்ட் 12 : வடமேற்கு மற்றும் அதனை ஒட்டி உள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 2025 ஆகஸ்ட் 13ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்க கூடும் என வானிலை மையம் (Tamil Nadu Weather) தெரிவித்துள்ளது. இதற்கிடையில், 2025 ஆகஸ்ட் 12ஆம் தேதி (இன்று) திருவள்ளூர் ராணிப்பேட்டை நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை (Tamil Nadu Rains) பெய்யக் கூடும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே கனமழை பெய்து வருகிறது. ஒரு வாரம் ஆகவே சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் அவ்வப்போது மழை வெளுத்து வாங்கி வருகிறது.  பகல் நேரங்களில்  மேகமூட்டமாகவும், மாலை மற்றும் இரவு நேரங்களில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், அடுத்த சில தினங்களுக்கான வானிலை நிலவரத்தை பார்ப்போம். அதன்படி, 2025 ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 2025 ஆகஸ்ட் 12ஆம் தேதியான இன்று, திருவள்ளூர், ராணிப்பேட்டை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, 2025 ஆகஸ்ட் 13ஆம் தேதி (நாளை) திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், நீலகிரி  ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : வாகன ஓட்டிகளே அலர்ட்.. சென்னையில் முக்கிய ரூட்டில் போக்குவரத்து மாற்றம்!

சென்னை வானிலை நிலவரம்


சென்னையை பொறுத்தவரை, 2025 ஆகஸ்ட் 12ஆம் தேதி வானம் ஓரளவு மேகமூட்டத்தடுன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : இலங்கை கடற்படை அட்டூழியத்திற்கு எதிர்ப்பு.. இராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம்!

மேலும், 2025 ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை தமிழக கடலோர பகுதிகள், வங்கக் கடல் பகுதிகள், அரபிக் கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மி வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.