6 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் கனமழை.. சென்னையில் நிலவரம் என்ன? லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!
Tamil Nadu Weather Update : தமிழகத்தில் கடந்த சில பரவலாக மழை பெய்து வரும் நிலையில், 2025 ஜூலை 25ஆம் தேதியான இன்று 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேனி, திருநெல்வேலி, கோவை, நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, ஜூலை 25 : தமிழகத்தில் 2025 ஜூலை 25ஆம் தேதியான இன்று ஆறு மாவட்டங்களில் கனமழை (Tamil Nadu Weather Update) பெய்யக் கூடும் என வானிலை மையம் (Tamil Nadu Weather Forecast) தெரிவித்துள்ளது. சென்னையில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த சில நாட்களாகவே தமிழத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. பெரிய அளவில் மழை பொழிவு இல்லாவிட்டாலும், பரவலாக பல இடங்களில் மழை பெய்து வருகிறது. 2025 ஜூலை மாத தொடக்கத்தில் வெயில் வாட்டி எடுத்தது. இதனை அடுத்து, தற்போது பரவலாக மழை பெய்வது வெப்பத்தை தணித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும், சென்னையை பொறுத்தவரை, சில நாட்களாகவே வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. பெரிய அளவில் வெயிலின் தாக்கம் இல்லை. மாலை மற்றும் இரவு நேரங்களில் லேசான மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், 2025 ஜூலை 25ஆம் தேதியான இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு என்று பார்ப்போம். அதன்படி, 2025 ஜூலை 25ஆம் தேதியான இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர், திருநெல்வேலி மாவட்டங்களின் மலை பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.




Also Read : 5 நாட்களுக்கு பிச்சு உதறபோகும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்கள்? லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!
சென்னையில் நிலவரம் என்ன?
HEAVY RAINFALL WARNINGhttps://t.co/2oxBZVTpGy pic.twitter.com/04r8opFLA2
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) July 24, 2025
மேலும், 2025 ஜூலை 26ஆம் தேதி நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 2025 ஜூலை 27ஆம் தேதி நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
2025 ஜூலை 28ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை, 2025 ஜூலை 25ஆம் தேதியான இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Also Read : நீலகிரியில் கொட்டித் தீர்க்கும் கனமழை: ஊட்டியில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா மையங்கள் மூடல்!
மேலும், வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில், மேற்கு வங்காளம் – வடக்கு ஒரிசா கடலோரப்பகுதிகளை நோக்கி அடுத்த 48 மணி நேரத்தில் நகரக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.