”5 மாதத்தில் தீர்ப்பு” அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை வழக்கு.. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!
CM Stalin Reacts On Anna university Case : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது, இளம்பெண் ஒருவருக்கு நிகழ்ந்த அநீதியில் கூட அரசியல் ஆதாயம் தேட நினைப்பவர்களின் எண்ணம் இதனால் தவிடுபொடியாகியுள்ளது என்று கூறியிருக்கிறார்.

சென்னை, ஜூன் 02 : சென்னை அண்ணா பல்கலைக்கழக வழக்கில் ஞானசேரகனுக்கு 30 ஆண்டுகளுக்கு குறையாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. குற்றவாளி ஞானசேகரனுக்கு 10 பிரிவுகளின் கீழ் தண்டனையை சென்னை மகளிர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், இந்த தீர்ப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் முக்கிய கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ”பெண்கள் பாதுகாப்பு பற்றி வேடம் போடுபவர்களுக்குச் செயலால் பதில் அளித்திருக்கிறது தமிழ்நாடு காவல்துறை. விசாரணையின் போது, உயர்நீதிமன்றமே பாராட்டிய வகையில், சென்னை மாணவி வழக்கினை நியாயமாகவும் விரைவாகவும் ஐந்தே மாதத்தில் நடத்தி முடித்து, குற்றவாளிக்குக் கடும் தண்டனையைப் பெற்றுத் தந்திருக்கிறோம்.
இளம்பெண் ஒருவருக்கு நிகழ்ந்த அநீதியில் கூட அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் சின்ன புத்தி கொண்ட சிலரின் எண்ணம் இதனால் தவிடுபொடியாகியுள்ளது. பாலியல் குற்றவாளிகளுக்கு முன்விடுதலை கிடையாது என அண்மையில் நாம் கொண்டு வந்த சட்டத்திருத்தத்துக்கு ஏற்ப, இவ்வழக்கில் remission உள்ளிட்ட எந்தச் சலுகையும் இல்லாமல் கடுங்காவல் தண்டனை விதித்துள்ள நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு நன்றிகூறி வரவேற்கிறேன்.




முதல்வர் ஸ்டாலின் ட்வீட்
பெண்கள் பாதுகாப்பு பற்றி வேடம் போடுபவர்களுக்குச் செயலால் பதில் அளித்திருக்கிறது தமிழ்நாடு காவல்துறை!
விசாரணையின் போது, உயர்நீதிமன்றமே பாராட்டிய வகையில், சென்னை மாணவி வழக்கினை நியாயமாகவும் விரைவாகவும் ஐந்தே மாதத்தில் நடத்தி முடித்து, குற்றவாளிக்குக் கடும் தண்டனையைப் பெற்றுத்…
— M.K.Stalin (@mkstalin) June 2, 2025
தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தீர்ப்பு குறித்து கூறுகையில், ”இல்லாத சார்களை உருவாக்கி இழிவான அரசியல் செய்யும் ஒரே சார் பழனிசாமி சார் தான். புரளிகளை வைத்து பித்தலாட்ட அரசியல் செய்வதையே முழு நேர தொழிலாக எடப்பாடி பழனிசாமி கொண்டுள்ளார். இன்று போல் உண்மைகளால் தொடர்ந்து அவமானப்படப் போவது உறுதி.
தமிழ்நாட்டு பெண்களின் உரிமைகளை உயர்த்தி அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் நுனியளவு சமரசத்திற்கு இடம்தராமல் ஆட்சி செய்யும் மாண்புமிகு முதலமைச்சரின் ஆட்சியில் பெண்களுக்குத் துன்பம் விளைவிக்கும் எந்தக் குற்றவாளியும் தப்ப முடியாது என்பதற்கு அண்ணா பல்கலைக்கழக வழக்கின் தீர்ப்பே சாட்சி” என்றார்.
முன்னதாக, எதிர்க்கட்சி எடப்பாடி பழனிசாமி, “இந்த கேள்விகள் கேள்விகளாகவே நீண்ட நாட்கள் இருக்காது. அதிமுக ஆட்சி அமைந்ததும், அனைத்து பதில்களும் கிடைக்கத் தான் போகிறது. ஸ்டாலின் சாரே நினைத்தாலும், அந்த SIR-ஐ எந்த சாராலும் காப்பாற்ற முடியாது” என அவர் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அமைச்சர் ரகுபதி பதில் கொடுத்துள்ளார்.
அரசு தரப்பு வழக்கறிஞர் விளக்கம்
இந்த வழக்கு குறித்து பேசிய அரசு தரப்பு வழக்கறிஞர் மேரி ஜெயந்தி, “அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு இல்லை. வழக்கில் சந்தேகம் இருந்தால் நீதிமன்றமே விசாரிக்கும். சம்பவத்தன்று ஞானசேகரனின் கைபேசி airplane mode-ல் இருந்து அறிவியல் பூர்வமான நிரூபணம். சம்பவ நடத் நேரத்தில் ஞானசேகரனுக்கு அழைப்பு வரவில்லை. குற்றத்தில் மேலும் ஒருவர் தொடர்பு இருப்பதாக இனி சொல்வது நீதிமன்றம் அவமதிப்பு செயல்” என்று கூறினார்.