களமிறங்கும் முக்கிய நபர்கள்: ராஜ்யசபா தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்..!
2025 Tamil Nadu Rajya Sabha Polls:2025 ஜூன் 19 அன்று நடைபெறும் தமிழ்நாடு மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 2025 ஜூன் 2 அன்று தொடங்குகிறது. திமுக கூட்டணி நான்கு இடங்களையும், அதிமுக இரண்டு இடங்களையும் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை, ஜூன் 02: தமிழ்நாட்டில் (Tamilnadu) 2025 ஜூன் 19 அன்று நடைபெறும் மாநிலங்களவை தேர்தலுக்கான (Rajya Sabha elections) வேட்புமனு தாக்கல் (Filing of nominations) இன்று 2025 ஜூன் 2 தொடங்கியது. ஆறு ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவிக்காலம் 2025 ஜூலை 24-ல் முடிவடைவதால் தேர்தல் நடக்கிறது. திமுக கூட்டணியில் இருந்து நான்கு இடங்கள், அதிமுகவுக்குப் இரண்டு இடங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக சார்பில் வில்சன், சல்மா, சிவலிங்கம் மற்றும் கூட்டணி சார்பில் கமல்ஹாசன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதிமுக சார்பில் இன்பதுரை மற்றும் தனபால் போட்டியிடுகின்றனர். தேர்தல் சூடு அதிகரித்து வரும் நிலையில், வாக்கு எண்ணிக்கை ஜூன் 19 மாலை 5 மணிக்கு நடைபெறும்.
வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்
தமிழ்நாட்டில் வரும் 2025 ஜூன் 19-ஆம் தேதி நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலை முன்னிட்டு, வேட்புமனு தாக்கல் ஜூன் 2 இன்று தொடங்குகிறது. இந்தத் தேர்தல் மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, 2025 ஜூன் 19 ஆம் தேதி நடைபெறும் மாநிலங்களவைத் தேர்தல் முடிந்த பிறகு, அதே நாளில் மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 2025 ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடைவதை முன்னிட்டு நடத்தப்படுகிறது. பதவிக்காலம் முடிவடையும் உறுப்பினர்களில் வைகோ, வில்சன், அன்புமணி ராமதாஸ், தொமுச சண்முகம், சந்திரதேகரன், முகமது அப்துல்லா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனுக்கு ஒரு இடம்
திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து நான்கு இடங்களும், அதிமுக தரப்பில் இரண்டு இடங்களும் வெல்லப்படும் எனக் கணிக்கப்படுகிறது. திமுக சார்பில் வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் நேரடி உறுப்பினர்களாக களமிறக்கப்படுகிறார்கள். கூட்டணி கூட்டுபங்காளியான மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனுக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
திமுக வேட்பாளர்கள் மற்றும் பின்னணி
திமுகவின் முக்கிய வேட்பாளர்களில் ஒன்றான எஸ்.ஆர்.சிவலிங்கம், தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஆவார். சேலம் பனமரத்துப்பட்டி தொகுதியிலிருந்து 1989 மற்றும் 1996 தேர்தல்களில் வெற்றி பெற்ற இவர், இடைவேளைகளில் தோல்வியும் கண்டிருந்தாலும், கட்சியில் நீண்ட கால அனுபவம் உள்ளவர். தற்போது எம்பி வேட்பாளராக அவர் தேர்வாகியிருப்பது பலருக்கும் ஆச்சரியம் ஏற்படுத்தியுள்ளது.
மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டி
மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் அறிவித்தார்!#DMK #RajyasabhaElections pic.twitter.com/PJayq1qPSH
— DMK (@arivalayam) May 28, 2025
கமல்ஹாசன் – கூட்டணி அரசியலில் புதிய கட்டம்
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், திமுகவுடனான சமீபத்திய தேர்தல் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இந்த தேர்தலில் மாநிலங்களவைக்கு போட்டியிடுகிறார். முன்னதாக லோக்சபா தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட விரும்பிய கமலுக்கு, அதற்கான இடமில்லாததால், ராஜ்யசபா இடம் ஒதுக்கப்பட்டு அவரை சமாதானப்படுத்தியது திமுக. தனிச்சின்னத்தில் மட்டுமே போட்டியிட உறுதியுடன் இருந்த கமலுக்கு, திமுக ஒரே ராஜ்யசபா சீட்டை வழங்கும் முடிவை எடுத்துள்ளது.
அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
அதிமுக தரப்பில், இன்பதுரை மற்றும் தனபால் ஆகியோர் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர்களாக நேற்று அறிவிக்கப்பட்டனர். இந்த அறிவிப்பை, அதிமுகவின் மூத்த தலைவர் கே.பி.முனுசாமி வெளியிட்டார். மேலும், தேமுதிகவுடன் கூட்டணி தொடரும் என்றும் அடுத்த வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்படும் என்றும் அதிமுக அறிவித்துள்ளது.
இந்தத் தேர்தல், தமிழ்நாட்டு அரசியல் நிலவரத்தில் புதிய மாற்றங்களை உருவாக்கும் எனத் தெரிகிறது. வேட்புமனுக்களுக்கான தாக்கல் 2025 ஜூன் 02 இன்று தொடங்கி, எதிர்வரும் நாட்களில் போட்டி சூடேறும் என்பதில் சந்தேகமில்லை.