பள்ளிகள் திறப்பு.. ஓட்டுநர், நடத்துனர்களுக்கு பறந்த உத்தரவு… போக்குவரத்து கழகம் அதிரடி
Tamil Nadu School Reopen : தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் 2025 ஜூன் 2ஆம் தேதியான இன்று திறக்கப்படுகிறது. இதனையொட்டி, பேருந்து இயக்கத்தின்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து ஓட்டுநர்கள், நடத்துனர்களுக்கு போக்குவரத்து கழகம் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது.

சென்னை, ஜூன் 02 : தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து, 2025 ஜூன் 2ஆம் தேதியான இன்று திறக்கப்படுகிறது. 2025 ஏப்ரல் மத்தியில் கோடை விடுமுறை தொடங்கப்பட்ட தற்போது, 2025 ஜூன் 1ஆம் தேதியான நேற்றுடன் முடிந்து, பள்ளிகள் இன்று (2025 ஜூன் 2ஆம் ) திறக்கப்படுகிறது. இந்த சூழலில், பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் முக்கிய அறிவிப்பை போக்குவரத்து கழகம் வழங்கயுள்ளது. அதாவது, பள்ளி செல்லும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், சில வழிகாட்டு நெறிமுறைகளை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, பேருந்து நிறுத்தங்கங்களில் பேருந்துகள் முழுமையாக நின்ற பிறகே, பேருந்து கதவுகளை திறக்க வேண்டும்.
ஓட்டுநர், நடத்துனர்களுக்கு பறந்த உத்தரவு
அதேபோல், பேருந்து மீண்டும் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பு பின்புறக் கதவைப் பாதுகாப்பாக மூட வேண்டும். பேருந்து இயக்கத்தில் இருக்கும்போது மாணவர்கள் ஏறவோ அல்லது இறங்கவோ முயற்சிப்பதைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் பேருந்தின் படிக்கட்டில் நிற்பது போன்ற ஆபத்தான முறையில் பயணிப்பது கண்டறியப்பட்டால், பேருந்தை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி, மாணவர்களை முறையாக அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும். அனைத்து மாணவர்களும் பாதுகாப்பாக பேருந்தில் ஏறிய பின்னரே பேருந்தை ஓட்டுநர்கள் இயக்க வேண்டும்.




மாணவர்கள் ஆபத்தான நடத்தையில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல் வாகனத்தை நிறுத்தி, அவசர எண் 100ஐ டயல் செய்து காவல்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும்.
பேருந்து இயக்கத்தில் இருக்கும்போது முன் மற்றும் பின் கதவுகள் இரண்டும் மூடப்பட்டிருப்பதை நடத்துனர்கள் உறுதி செய்ய வேண்டும். பேருந்தை பிடிக்க முயற்சிக்கும் போது மாணவர்கள் வாகனத்தின் பின்பு ஓடுவதைக் கண்டால், ஓட்டுநர்கள் வேகத்தைக் குறைத்து பேருந்தை நிறுத்தி அவர்களை ஏற்றி செல்ல வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு, மாநகர போக்குவரத்துக் கழகத்தின் விபத்துத் தடுப்புப் பிரிவினர் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு நடத்தப்பட்டது. இந்த முயற்சியை உதவி மேலாளர், வடபழனி கிளை மேலாளர் மற்றும் மாநகர போக்குவரத்துக் கழக ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பயிற்சிப் பள்ளி அதிகாரிகள் இணைந்து ஒருங்கிணைத்தனர். பள்ளிகள் இன்று திறக்கப்பட உள்ள நிலையில், இந்த உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.
இன்று பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2025 ஏப்ரல் மாதம் மத்தியில் கோடை விடுமுறை தொடங்கியது. கிட்டதட்ட 55 நாட்கள் கோடை விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது- இந்த நிலையில், கோடை விடுமுறை முடிந்து 2025 ஜூன் 2 ஆம் தேதியான இன்று 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகிறது. 2025-26 கல்வியாண்டின் முதல் வேலை நாளாகும். தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் உதவிப் பொறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் 2025 ஜூன் 2ஆம் தேதியான இன்று முதல் வகுப்புகளை தொடங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.