AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

எஜமானரின் இறுதி ஊர்வலத்தில் உயிரைவிட்ட வளர்ப்பு நாய்: மத்திய பிரதேசத்தில் நெகிழ்ச்சிச் சம்பவம்!

Faithful Pet Dog Dies: மத்திய பிரதேசத்தில் பிரதீப் ஜெயின் என்ற நபர் காலமான நிலையில், அவரது 15 ஆண்டுகால வளர்ப்பு நாய் எஜமானரின் பிரிவைத் தாங்காமல் தவித்தது. பிரதீப்பின் இறுதி ஊர்வலம் புறப்பட்ட போது, பாடையின் பின்னாடியே நடந்து சென்ற அந்த நாய், வழியிலேயே திடீரென மயங்கி விழுந்து தன் உயிரைவிட்டது.

எஜமானரின் இறுதி ஊர்வலத்தில் உயிரைவிட்ட வளர்ப்பு நாய்: மத்திய பிரதேசத்தில் நெகிழ்ச்சிச் சம்பவம்!
பிரிவைத் தாங்காத நாய்
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 16 Jul 2026 15:38 PM IST

மத்திய பிரதேசத்தின் பெதுல் பகுதியைச் சேர்ந்த 67 வயதான பிரதீப் ஜெயின் என்பவர் அண்மையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மரணச் செய்தியைத் தாங்க முடியாத 15 வயது வளர்ப்பு நாய் ‘டுங்கு’, இரவு முழுவதும் அவரது உடலின் அருகிலேயே தவித்து அழுதுள்ளது. இறுதிச் சடங்குகள் தொடங்குவதற்கு முன்பாக, எஜமானரின் உடலுக்கு அருகில் அமர்ந்து அந்த நாய் தனது இறுதி அஞ்சலியைச் செலுத்தியது. பிரதீப் ஜெயினின் இறுதி ஊர்வலம் புறப்பட்ட போது, அந்தப் பாடையின் பின்னாலேயே விசுவாசத்துடன் டுங்குவும் தொடர்ந்து நடந்து சென்றது. ஆனால், எஜமானரின் பிரிவைத் தாங்க முடியாமல் ஒரு குறிப்பிட்ட தூரத்திலேயே அந்த வளர்ப்பு நாய் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தது. இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தால் நெகிழ்ந்த குடும்பத்தினர், இருவருக்கும் ஒரே இடத்தில் இறுதி விடை கொடுக்க முடிவு செய்தனர். அதன்படி எஜமானரின் உடல் தகனம் செய்யப்பட்ட மயானத்தின் அருகிலேயே, அந்த நன்றியுள்ள நாயின் உடலும் முழு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

உயிரை மிஞ்சிய பாசம்

மத்திய பிரதேச மாநிலம் பெதுல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரதீப் ஜெயின் (67) என்பவர் போபாலில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அண்மையில் காலமானார். அவரது உடல் சொந்த ஊருக்குக் கொண்டு வரப்பட்ட போது, கடந்த 15 ஆண்டுகளாக அவரோடு இணைபிரியாமல் வாழ்ந்த ‘டுங்கு’ என்ற அவரது வளர்ப்பு நாய், எஜமானரின் பிரிவைத் தாங்க முடியாமல் தவித்துள்ளது. இரவு முழுவதும் அவரது உடலின் அருகிலேயே அமர்ந்து, கண்ணீருடன் குரைத்தபடி தவித்த அந்த நாய், இறுதி ஊர்வலம் தொடங்குவதற்கு சற்று முன்பாக பிரதீப் ஜெயினின் உடலுக்கு அருகில் வந்து அமைதியாக அஞ்சலி செலுத்தியுள்ளது.

பிரிவைத் தாங்காத நாய்

பிரதீப் ஜெயினின் இறுதிச் சடங்குகள் தொடங்கி, அவரது இறுதி ஊர்வலம் புறப்பட்ட போது, யாரும் எதிர்பாராத விதமாக டுங்குவும் அந்தப் பாடையின் பின்னாடியே நடந்து சென்றுள்ளது. ஆனால், ஒரு குறிப்பிட்ட தூரம் சென்றவுடன், எஜமானரின் நிரந்தரப் பிரிவைத் தாங்க முடியாமல், அந்த நாய் திடீரென மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. 15 ஆண்டுகால பாசப் பிணைப்பைக் கொண்ட தனது எஜமானர் இனி வரமாட்டார் என்பதை உணர்ந்தே அந்த நாய் தன் உயிரைத் துறந்ததாக உறவினர்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.

Also Read: பிறந்த குழந்தையை பத்திரமாகப் பார்த்துக்கொள்வது எப்படி?

ஒன்றாக நடந்த இறுதிச் சடங்கு

தன் எஜமானர் நோய்வாய்ப்படும் போதெல்லாம், தானும் உணவருந்தாமல் உடல்நலக் குறைவால் பாதிக்கப்படும் அளவுக்கு பிரதீப் ஜெயின் மீது டுங்கு எல்லையற்ற அன்பு செலுத்தி வந்துள்ளது. இந்த அபூர்வ பாசத்தைக் கண்டு நெகிழ்ந்த குடும்பத்தினர், இருவருக்கும் ஒன்றாகவே இறுதி விடை கொடுக்க முடிவு செய்தனர். அதன்படி, பிரதீப் ஜெயினின் உடல் இந்து மதச் சடங்குகளின்படி தகனம் செய்யப்பட்ட நிலையில், அவரது அன்பிற்குரிய வளர்ப்பு நாயான டுங்குவின் உடலும், அதே மயானத்திற்கு அருகிலேயே முழு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

விலங்கினங்களின் மாறாத இந்த விசுவாசமும், எஜமானரின் பாடையின் பின்னே சென்று உயிரைவிட்ட சம்பவமும் அந்த இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற ஒட்டுமொத்தப் பொதுமக்களையும் கண்ணீரில் ஆழ்த்தியது.

Follow Us