டெல்லியில் இடிக்கப்பட்ட மதராஸி கேம்ப்.. தமிழர்களின் நிலை என்ன? உதவும் தமிழக அரசு
Delhi Madrasi Camp : டெல்லியில் தமிழர்கள் வசித்து வந்த மதராஸி முகாம் இடிக்கப்பட்ட நிலையில், தமிழக அரசு அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது. அதாவது, மதராஸி முகாம்களில் வசித்த தமிழர்கள் தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு திரும்ப விரும்பினார், அவர்களுக்கு அனைத்து அடிப்படை உதவிகளும் செய்து தரப்படும் என தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.

டெல்லி, ஜூன் 02 : டெல்லியில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மதராஸி கேம்ப் (delhi madrasi camp) இடிக்கப்பட்டுள்ளது. 2025 ஜூன் 1ஆம் தேதியான நேற்று தமிழகர்கள் வசித்து வந்த மதராஸி கேம்ப் இடிக்கப்பட்டது அப்பகுதியில் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வீடுகளை இழந்த மக்கள் குடும்பத்துடன் கதறி அழுதுள்ளனர். தலைநகர் டெல்லியில் தமிழர்கள் வசித்து வருகின்றனர். ஏழைகள் முதல் பலரும் டெல்லியில் வசித்து வருகின்றனர். குறிப்பாக டெல்லியில் மதராஸி கேம்ப் பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் அங்கு வசித்து வந்தனர். மதராஸி முகாமில் 4 தலைமுறைகளாக நூற்றுக்கணக்கான தமிழர்கள் வசித்து வருகின்றனர். கிட்டதட்ட 370 தமிழ் குடும்பங்கள் அங்கு வசித்து வந்தனர். இந்த மதராஸி முகாம் டெல்லியன் ஜங்க்புர பகுதியில் அமைந்துள்ளது.
டெல்லியில் இடிக்கப்பட்ட மதராஸி கேம்ப்
இந்த பகுதியில் உள்ள பாராபுல்லா கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதாகவும், கழிவு நீர் முறையாக செல்லவில்லை எனவும் புகார்கள் எழுந்தது. இது தொடர்பான வழக்கு டெல்லி நீதிமன்றம் நடந்த நிலையில், பாராபுல்லா கால்வாயை புனரமைக்க மதராஸி முகாம்களை இடித்து அகற்ற வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.




இந்த உத்தரவை தொடர்ந்து, 2025 ஜூன் 1ஆம் தேதியான நேற்று அதற்கான பணிகள் தொடங்கியது. தமிழர்கள் வசித்து வந்த மதராஸி முகாம்களை ஜேசிபி கொண்டு அதிகாரிகள் மேற்பார்வையில் இடிக்கப்பட்டது. இதனை அப்பகுதி தடுத்து நிறுத்தியால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், அங்கு போராட்டங்களும் நடத்தினர். இந்த நிலையில், அங்கு வசித்து வந்த 370 குடும்பங்களில் 189 குடும்பங்களுக்கு மட்டுமே மாற்று இடம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. டெல்லி அரசின் இந்த நடவடிக்கைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மதராஸி முகாம்
VIDEO | Delhi: Demolition drive underway in Jangpura’s Madrasi Camp following Delhi High Court order to clear slums along the Barapullah drain.
(Full video available on PTI Videos – https://t.co/n147TvqRQz) pic.twitter.com/23jGNfvfBm
— Press Trust of India (@PTI_News) June 1, 2025
உதவிக்கரம் நீட்டிய தமிழக அரசு
இந்த விவகாரத்தில் தமிழக அரசு தங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என டெல்லி வாழ் தமிழர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து, தமிழக அரசு டெல்லியில் உள்ள தமிழர்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது. அதன்படி, டெல்லியில் வீடுகளை இழந்த தமிழர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றும் மதராஸி கேம்ப குடியிருப்பு வாசிகள் தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு திரும்ப விரும்பினால் வாழ்வாதாரம் மற்றும் தேவையான அடிப்படை உதவிகள் செய்து தரப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.